
About the Book
வாழ்வை மாற்ற ஒரு வாய்ப்பு மதங்களும் முந்தின தலைமுறையினரும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லாமல், எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லையில்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 'ஈஷா யோக மைய'த்தை நிறுவியவர். உலகெங்கும் பல இலட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்த நூலில்... 1. ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்க, நேர்மையாக இருப்பவர்கள் துன்பப்படுகிறார்கள், ஏன் இப்படி? 2. குடும்பத்தில் சுமுகமான உறவு வைத்துக் கொள்வது எப்படி? 3. எதிலும் தன்னம்பிக்கை இல்லாமல் தவிக்கிறேன். என்ன செய்ய? 4. காரணமே இல்லாமல் சிலர் மீது எரிச்சல் வருகிறது, திருந்த மாட்டேனா? 5. மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு போகிறோம்? போன்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. தன் வாழ்வை சரியான பாதையில் மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர் அற்புத வாய்ப்பு!
More Like This