
About the Book
புராதனமானது, பாரம்பரியம் மிக்கதுமான மூலிகைகளின் மகத்துவத்தையும் பயன்பாட்டையும் ஒவ்வொருவரும் அறிந்து ஆரோக்கியமாக வாழ்ந்திட ஈஷா யோக மையத்தின் கிராம புத்துணர்வு இயக்கம் செயல்படுகின்றது. இந்த இயக்கம் தமிகத்தின் 54,000 கிராமங்களிலும், மூலிகைத் தோட்டங்களை அமைத்திடவும், அதன் பலன்களை அனைவரும் அறிந்து பயன்பெறவும் பணியாற்றி வருகின்றது. மூலிகைகளின் முக்கியத்துவம், பயன்பாடுகள், பலன்கள், மூலிகை வளர்ப்புமுறை ஆகியன பற்றி எளிய முறையில் அறிந்திட, இப்புத்தகம் ஓர் அரிய வாய்ப்பினை வழங்குகிறது
