
About the Book
ஈஷாவுக்குள்ளே என்ன நடக்கிறது? என்பதை வெளியில் இருப்பவர்களுக்கு ''உள்ளது உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி இந்த நூல். மரபின் மைந்தன் முத்தையா கவிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என்று பற்பல பரிமாணங்கள் கொண்டவர். பல்வேறு உலகநாடுகளையும் வலம் வரும் உற்சாகப் பேச்சாளர். பல நிறுவனங்களுக்கு தலைமைப் பண்பு, ஊழியர்கள் தன்னொழுக்கம் மற்றும் செயல்திறன் பயிற்சிகள் வழங்கும் நிபுணர். கவிஞர் கண்ணதாசனின் தாக்கத்தால் கவிஞராக மலர்ந்து, கவிஞர் வைரமுத்துவின் ஊக்கத்தால் வளர்ந்து, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களின் கருணையால் கனிந்து தமிழ்மணமும் ஆன்மீக மணமும் பரப்புபவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பற்பல விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். பல இசைப்பாடல்களையும் நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளார். இது இவரது 68ஆவது நூலாகும்.
