Login | Sign Up
logo
Inner Engineering
Login|Sign Up
Country
Also in:
English

குரு பௌர்ணமி

அருள்பெறும் நாள்

ஜூலை 10, 2025 மாலை 7:00 மணி

"'கு' என்றால் இருள், 'ரு' என்றால் அகற்றுபவர். உங்கள் இருளை அகற்றுபவரே குருவானவர்." - சத்குரு

Watch the 2025 Livestream

பங்கேற்பதற்கான பிற வழிகள்

ஈஷா யோக மையத்தில் ஒரு நாள் முழுவதும் செலவிடுங்கள்

நீங்கள் ஈஷா யோகாவில் பங்கேற்றிருந்தால், ஈஷா யோக மையத்தில் ஒரு நாள் முழுக்க செலவிட்டு, குரு பௌர்ணமிக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

பதிவு செய்ய

உங்கள் ஊரிலேயே கொண்டாடுங்கள்

உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் மையத்தில், கோவை ஈஷா யோக மையத்திலிருந்து நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

குரு பௌர்ணமியின் முக்கியத்துவமும் தனித்துவமும்

கோடைகால கதிர்திருப்பத்திற்குப் பின் (ஆனி மாதம்) வரும் முதல் பௌர்ணமி குரு பௌர்ணமி எனப்படுகிறது. இந்நாள் ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாளாகும். இந்த குரு பௌர்ணமி என்பது, ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாளாகும். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர். இன்றும்கூட உலகின் எந்தவொரு மூலையில் பின்பற்றப்படும் ஆன்மீக செயல்முறையானாலும், அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளதாக இருக்கும்.

"குரு" எனும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "இருளை அகற்றுபவர்" என்று பொருள். குரு என்பவர், தேடுதலில் இருக்கும் ஒரு சாதகரின் அறியாமையை நீக்கி, அவருக்குள் இயங்கும் படைப்பின் மூலத்தை உணர்ந்திட வழி செய்பவர். நம் பாரம்பரியத்தில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருக்கும் ஆன்மீக சாதகர்கள் தங்கள் நன்றியை குருவிற்கு வெளிப்படுத்தி, அவரின் ஆசிகளைப் பெறுவார்கள். யோக சாதனாவில் ஈடுபடவும், தியானம் செய்யவும் குருபௌர்ணமி உகந்த ஒரு நாளாகும்

குரு பௌர்ணமியை ஏன் கொண்டாடுகிறோம்?

இந்தியாவில் குரு பௌர்ணமி என்பது, முதலாவது குரு பிறந்த நாளாகவும், காலங்களுக்கு அப்பாற்பட்ட யோக விஞ்ஞானம் பரிமாறப்படத் தொடங்கிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

மனித வரலாற்றில் முதன்முறையாக, இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மனித இனம் தாண்டிச் செல்வதற்கான சாத்தியத்தை, ஆதியோகியாம் சிவன் இந்நாளில் வழங்கினார். சத்குருவின் வார்த்தைகளில், “மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக இந்த நாளில்தான், தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட உயிராக இல்லை என்று மனிதர்கள் நினைவுபடுத்தப்பட்டார்கள். அவர்கள் முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இருக்கும் ஒவ்வொரு கதவும் திறந்திருக்கிறது.'

மேலும் வாசிக்க

குரு பௌர்ணமி படத்தொகுப்பு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்