ஜூலை 21 அன்று நேரலையைக் காணுங்கள்
பங்கேற்பதற்கான பிற வழிகள்
ஈஷா யோக மையத்தில் ஒரு நாள் முழுவதும் செலவிடுங்கள்
நீங்கள் ஈஷா யோகாவில் பங்கேற்றிருந்தால், ஈஷா யோக மையத்தில் ஒரு நாள் முழுக்க செலவிட்டு, குரு பௌர்ணமிக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
கொண்டாட்டங்களில் நேரில் பங்குபெறுங்கள்
கோவை ஈஷா யோக மையத்தில், மாலை 6 மணி முதல் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். அனைவரும் பங்கேற்க முடியும்.
உங்கள் ஊரிலேயே கொண்டாடுங்கள்
உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் மையத்தில், கோவை ஈஷா யோக மையத்திலிருந்து நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
குரு பௌர்ணமியின் முக்கியத்துவமும் தனித்துவமும்
கோடைகால கதிர்திருப்பத்திற்குப் பின் (ஆனி மாதம்) வரும் முதல் பௌர்ணமி குரு பௌர்ணமி எனப்படுகிறது. இந்நாள் ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாளாகும். இந்த குரு பௌர்ணமி என்பது, ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாளாகும். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர். இன்றும்கூட உலகின் எந்தவொரு மூலையில் பின்பற்றப்படும் ஆன்மீக செயல்முறையானாலும், அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளதாக இருக்கும்.
"குரு" எனும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "இருளை அகற்றுபவர்" என்று பொருள். குரு என்பவர், தேடுதலில் இருக்கும் ஒரு சாதகரின் அறியாமையை நீக்கி, அவருக்குள் இயங்கும் படைப்பின் மூலத்தை உணர்ந்திட வழி செய்பவர். நம் பாரம்பரியத்தில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருக்கும் ஆன்மீக சாதகர்கள் தங்கள் நன்றியை குருவிற்கு வெளிப்படுத்தி, அவரின் ஆசிகளைப் பெறுவார்கள். யோக சாதனாவில் ஈடுபடவும், தியானம் செய்யவும் குருபௌர்ணமி உகந்த ஒரு நாளாகும்
குரு பௌர்ணமியை ஏன் கொண்டாடுகிறோம்?
இந்தியாவில் குரு பௌர்ணமி என்பது, முதலாவது குரு பிறந்த நாளாகவும், காலங்களுக்கு அப்பாற்பட்ட யோக விஞ்ஞானம் பரிமாறப்படத் தொடங்கிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
மனித வரலாற்றில் முதன்முறையாக, இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மனித இனம் தாண்டிச் செல்வதற்கான சாத்தியத்தை, ஆதியோகியாம் சிவன் இந்நாளில் வழங்கினார். சத்குருவின் வார்த்தைகளில், “மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக இந்த நாளில்தான், தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட உயிராக இல்லை என்று மனிதர்கள் நினைவுபடுத்தப்பட்டார்கள். அவர்கள் முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இருக்கும் ஒவ்வொரு கதவும் திறந்திருக்கிறது.'
மேலும் வாசிக்க
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நிகழ்விற்கு யார் வேண்டுமானாலும் பதிவுசெய்ய முடியும்.
தற்போதைக்கு, நேரில் நடக்கும் நிகழ்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். நேரடி மொழிபெயர்ப்பானது ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே வழங்கப்படும்.
இருப்பினும், நிகழ்வின் நேரலை ஒளிபரப்பானது பல மொழிகளில் வழங்கப்படுகிறது: ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பங்களா மற்றும் ஒடியா.
ஆம், இது இலவச நிகழ்ச்சி.
இல்லை, நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது. நீங்கள் ஈஷா யோக மையத்தில் தங்க விரும்பினால், உங்கள் தங்குமிடத்தை முன்பதிவு செய்ய cottage.isha.in ஐப் பார்வையிடுங்கள்.
நிகழ்வு ஜூலை 21, 2024 அன்று நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு முன்னதாக நீங்கள் வந்து அமர்வதை உறுதிசெய்யவும்.
ஈஷா யோக மையத்திற்கு நேரில் வந்து, நிகழ்வில் பங்கேற்பவர்கள் இரவில் அங்கே தங்க இயலாது என்பதை தயவுசெய்து நினைவில்கொள்ளுங்கள். நீங்கள் முன்னதாகவே வந்து சேர விரும்பினால் அல்லது நிகழ்விற்குப் பிறகு யோக மையத்தில் தங்க விரும்பினால், cottage.isha.in ஐப் பார்வையிட்டு, உங்களுக்கான தங்குமிடத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
உங்கள் பதிவுப் படிவத்தில் மாற்றங்களைச் செய்ய support.ishafoundation.org ஐ பார்வையிடுங்கள்.
உங்களுடன் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அல்லது விருந்தினர்களும், நிகழ்வுக்காகத் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவில்கொள்ளுங்கள்.
ஈஷா யோக மையத்திற்கு அருகில் வாகனங்களை நிறுத்துமிடம் குறைவாக இருப்பதால், முடிந்தவரை நிகழ்ச்சிக்கு வருவதற்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் ஈமெயில் Spam/Promotions/Other folders ஆகியவற்றில் சரிபாருங்கள். அவற்றிலும் நீங்கள் ஈமெயிலைப் பெறவில்லை என்றால், தயவுசெய்து support.ishafoundation.org ல் எங்களுக்குத் தெரிவியுங்கள்.