ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? (Holi Festival in Tamil)
ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? இதோ சத்குருவின் விளக்கம்! வாழ்க்கை ஏன் இவ்வளவு சீரியஸாக மாறிவிட்டது? நம்முடைய நினைவாற்றலும் கற்பனையும் நம்மை எப்படி ஏமாற்றுகின்றன? பழைய குப்பைகளை எரித்து, மனத்தெளிவோடும் அதிகபட்ச உயிரோட்டத்தோடும் ஹோலியை கொண்டாட சத்குருவின் இந்த உரை வழிகாட்டுகிறது.

ஹோலி பண்டிகை எதற்காக?
அடிப்படையில் வாழ்க்கை என்பது மிக உற்சாகமான செயல்முறை - இதை அங்கீகரிப்பதே ஹோலி. மூளையின் திறன்களை எப்படி கையாள்வது என்பதில் அனுபவம் இல்லாததால், நினைவாற்றல் மற்றும் கற்பனை ஆகிய மிக அடிப்படையான இரண்டு திறன்களை, மனிதர்கள் எதை மறக்க வேண்டுமோ அதை நினைவில் வைத்துக்கொள்ளவும், எதை ஞாபகத்தில் வைக்க வேண்டுமோ அதை எல்லாம் மறந்துவிடவும் உபயோகிக்கிறார்கள்.மேலும் அவர்கள் கற்பனை செய்யக்கூடாத விஷயங்களை கற்பனை செய்கிறார்கள், ஆனால் தங்கள் வாழ்க்கையை அழகாக்கும் ஒன்றை அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை.
Subscribe
ஹோலி பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த பண்டிகையின் போது இந்தியா முழுவதும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை வீசிக்கொள்வார்கள். தங்களை வண்ணத்தில் முழுவதுமாக நனைத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் சாரம் உற்சாகம் என்பதைக் குறிக்க, மக்கள் தலை முதல் கால் வரை அனைத்து வகையான வண்ணங்களிலும் நனையும் நாள் இது. வாழ்க்கை இவ்வளவு சீரியசாக மாறுவதற்கு காரணம், நாம் நினைவில் கொள்ளக்கூடாத விஷயங்களை நினைவில் கொள்கிறோம் மற்றும் கற்பனை செய்யக்கூடாத விஷயங்களை கற்பனை செய்கிறோம்.
எனவே, ஹோலி என்பது நம் வாழ்க்கையில் தேவையற்ற அனைத்தையும் எரிப்பதை குறிக்கிறது. இந்த நாளில், மக்கள் அனைத்து பழைய உடைகளையும், அக்கம் பக்கத்து குழந்தைகளின் பொம்மைகளையும் வெளியே கொண்டுவருகிறார்கள். அது ஒரு சாமர்த்தியம். தங்களுக்கு தேவையில்லாத அனைத்து வகையான பொருட்களையும் தெருவில் குவித்து வைத்து எரிக்கிறார்கள். இது பழைய துணிகளை எரிப்பது பற்றியது அல்ல, இது கடந்த போன வருடத்தின் நினைவுகளை எரிப்பது பற்றியது, இதனால் இன்று நீங்கள் ஒரு புதிய உயிரைப் போல, உற்சாகமாக, விழிப்புடன் இருக்க முடியும். எனவே இது தான் அதற்கான நாள்.
இயற்கையை மனிதன் ஈடுகட்ட வேண்டிய அவசியம்

ஆனால் குறிப்பாக தாவரங்களால் பூக்க முடியவில்லை என்றால், மனிதர்கள் அதற்கு உதவ வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக செடிகளால் பூக்க முடியவில்லை. நீங்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போல தெரியவில்லை. நீங்கள் அதை ஈடுகட்ட வேண்டும். வறட்சி காரணமாக செடிகளால் பூக்க முடியவில்லை, உங்கள் புன்னகை, உங்கள் மகிழ்ச்சி மற்றும் உங்கள் உற்சாகத்தால் நீங்கள் அதை ஈடுகட்ட வேண்டும். இயற்கை தோற்கும்போது, மனிதன் எழுந்து நிற்க வேண்டும்.
பலரிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்களுக்கு தாங்களே எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சத்சங்கத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் எப்போதும் நான் சொல்வதை கேட்காமல் இரவு பகல் என எந்த நேரத்திலும் அவர்களுக்குள் தனி விரிவுரை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கரன்பிள்ளைக்கு கிடைத்த லெக்சர் (Lecture)!
ஒரு நாள் இரவு இது நடந்தது. சங்கரன் பிள்ளை அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அதிகாலை 2:00 மணி, அவரால் நேராக நடக்க முடியவில்லை, ஏனென்றால் இந்த பூமி உருண்டையாக இருக்கிறது, எப்படி நேராக நடப்பது? அதனால் அவர் கொஞ்சம் தள்ளாடினார். இரவுப் பணியில் இருந்த காவலர் அவரை நிறுத்தி, "ஏய், உன் கால்களில் நடை சீராக இல்லை, இந்த நேரத்தில் எங்கே போகிறாய்?" என்று கேட்டார். சங்கரன்பிள்ளை, "நான் ஒரு லெக்சருக்கு செல்கிறேன்" என்றார். காவலர் , "என்னது, அதிகாலை இரண்டு மணிக்கு யார் லெக்சர் கொடுக்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு சங்கரன்பிள்ளை, "உங்களுக்கு என் மனைவியைப் பற்றி தெரியாது. நான் எந்த நேரத்தில் திரும்பி சென்றாலும், எனக்கு லெக்சர் கிடைக்கும்" என்றார்.
உங்களுள் பலருக்கு மனைவி அல்லது கணவன் இல்லை, ஆனால் நீங்கள் எப்போதும் ஒரு லெக்சர் பயணத்தில் இருக்கிறீர்கள். இதற்கு சுய உதவி என்று பெயர். உங்கள் சொந்த குப்பைகளிலேயே முடிவில்லாமல் மூழ்கியிருப்பதை நிறுத்துவது சாத்தியமற்றது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு எண்ணங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதை அவர்கள் நிறுத்தாமல் இருப்பதே காரணம். ஒருமுறை நீங்கள் அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், உங்களால் அதை நிறுத்த முடியாது. அதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை, நீங்கள் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் உங்கள் எண்ணத்தின் உள்ளடக்கம் வெளியிலிருந்து நிரப்பப்பட்டது. உங்கள் எண்ணத்தின் உள்ளடக்கம் உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது. "இது என்னுடையது அல்ல" என்று நீங்கள் பார்த்தால் போதும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான், நீங்கள் அதை விட்டுவிட தேவையில்லை.
"என் மனதில் நடப்பது உண்மையில் என்னுடையது அல்ல" என்று நீங்கள் பார்த்தால், அது சிறிது நேரம் இங்கும் அங்கும் சுழன்றுவிட்டு மறைந்துவிடும். நீங்கள் அதனுடன் உங்களை மிகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள், அது உங்களுடையது என்றும், அது முட்டாள்தனமான எண்ணமாக இருந்தாலும் புத்திசாலித்தனமான ஒன்று என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். எல்லோரும் அது முட்டாள்தனம் என்று நினைக்கிறார்கள், ஆனால் நீங்கள் அது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்கள். அது உங்கள் வாழ்க்கையை சீரழித்தாலும் பரவாயில்லை, ஆனாலும் நீங்கள் அது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்கள். அது உங்களை பேரின்பத்தில் வேண்டாம், நிம்மதியாக கூட ஒரு இடத்தில் உட்கார விடாது. ஆனால் அப்படியும் நீங்கள் அது புத்திசாலி என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு இயல்பாக இருப்பது எப்படி என்று கூட தெரியவில்லை என்றால் அது புத்திசாலித்தனம் கிடையாது.
உங்களுக்கு இயல்பாக இருப்பது எப்படி என்று கூட தெரியவில்லை, இதை எப்படி புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியும்? இதில் புத்திசாலித்தனம் எதுவுமில்லை. இது வாழ்வதற்கு மிகவும் முட்டாள்தனமான வழி. ஆனால் நீங்கள் அதனுடன் அடையாளப்படுத்திக் கொண்டதால், உங்களால் அதை விட முடியவில்லை.
வசந்தத்தை மலரச் செய்வோம்
இன்று ஹோலி, பழையனவற்றை எரிக்க வேண்டிய நேரம். குறிப்பாக மழை இல்லாததால் வசந்த காலம் இன்னும் துவங்கவில்லை என்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு ஆசிரம வளாகத்தில் உங்களை நான் கவனிக்கப் போகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நான் பார்க்க விரும்புகிறேன். வெவ்வேறு நிலைகளில் உயிரோட்டம். அப்படித்தானே? வெவ்வேறு நிலைகளில் உயிரோட்டம். வசந்த காலம், ஹோலி, நீங்கள் அதிகபட்ச உயிரோட்டத்துடன் அமர வேண்டும் என்று விரும்புகிறோம்.
நான் சத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, அதிகபட்ச உயிரோட்டமாக இருக்க வேண்டும். இந்த வருடம் பூக்கள் இல்லை, நீங்கள் அதை ஈடுகட்ட வேண்டும், ஏனென்றால் உங்களிடம் இருக்கும் ஒரே விஷயம் உயிரோட்டம் தான். மற்றவை எல்லாம் உங்கள் மனதில் உள்ள உங்களுடைய குப்பை மட்டுமே. உங்களிடம் இருக்கும் ஒரே விஷயம் அது தான், மற்ற அனைத்தும் உங்கள் குப்பை மட்டும் தான். உயிரோட்டத்தை நீங்கள் முழுமையாக வைத்திருக்க வேண்டும்.
"இல்லை, இல்லை, நான் அதை சேமிக்கிறேன் சத்குரு, ஏனென்றால் நான் ஏற்கனவே ஒரு ஸ்டீல் சவப்பெட்டியை உருவாக்கிவிட்டேன், நான் நீண்ட காலம் அங்கே இருக்கப்போகிறேன், என்னிடம் ஏதாவது மிச்சம் இருக்க வேண்டும்."
இது நடந்தது. இது உண்மையிலேயே நடந்தது. மீண்டும் அதிகாலை 2:00 மணி. அரசு வழக்கறிஞர் நீதிபதியை அழைத்தார். வீட்டிலிருந்த பணியாளர், "என்னால் அவரை எழுப்ப முடியாது, அதிகாலை இரண்டு மணி ஆகிறது" என்றார். அவர், "இல்லை, இது மிகவும் அவசரமானது, நீங்கள் எழுப்ப வேண்டும்" என்றார். பிறகு அவர் அழைப்பை இணைத்தார். படுக்கையறையில் தொலைபேசி ஒலித்தது, நீதிபதி போனை எடுத்து "யார் இது?" என்று கேட்டார். "நீதிபதி அவர்களே, நீதிபதி குரோவர் இப்போது தான் காலமானார், நான் அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்" என்றார். அதற்கு நீதிபதி, "சரி, வெட்டியானுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், எனக்கும் இல்லை" என்றார்.
நீங்கள் ஏற்கனவே பாதி உள்ளே இருப்பதைப் போல நடந்துகொள்ள விரும்புகிறீர்களா? தோட்டத்தில் பூக்கள் இல்லை, நீங்கள் அதை ஈடுகட்ட வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்கு நான் உங்களை கவனிக்கப் போகிறேன், வசந்தம் எப்படி மலர்கிறது என்று பார்க்கலாம்.