Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
உங்களுக்குள் இனிய நிலையில் இருந்தால், அது வெளிச் சூழ்நிலைகளை அற்புதமானதாக ஆக்கும். ஆனால், உங்களுக்குள் நீங்கள் நன்றாக இல்லை என்றால், வெளியில் வசந்தமாக இருந்தாலும் அதைத் துன்பமாகவே உணர்வீர்கள்.
நீங்கள் ஒன்றும் உலகத்தைக் கையாள வேண்டியதில்லை. உங்களை நீங்கள் கையாளக் கற்றுக்கொண்டாலே போதும், எல்லாமே பார்த்துக்கொள்ளப்படுகிறது.
மிகவும் சில பேர்தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள். மற்றவர்கள் வெறுமனே பிழைப்பு மட்டுமே நடத்துகிறார்கள்.
இன்பம் அழகானதுதான், ஆனால் அது அடிமைப்படுத்தும். ஆனந்தமோ அற்புதமானது – அனைத்திற்கும் மேலாக, அது விடுதலை தருகிறது.
உயிர் அனைத்தையும் தனக்குள் ஒன்றாக அரவணைத்திருக்கிறது. உங்கள் மனம் மட்டும்தான் தனிப்பட்டுப் பிரிந்திருக்கிறது.
விஷயமே உயிரோட்டமாக இருப்பதுதான். மரணம் என்னவோ கச்சிதமாக நடந்துவிடும் – நீங்கள் ஒன்றும் அதைப் பழக வேண்டியதில்லை. வாழ்வதற்குத்தான் ஏராளமான பயிற்சி தேவை.
வாழ்க்கை ஒரு வரமா சாபமா என்பது, உங்கள் மனம் நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறதா, இல்லையா என்பதைப் பொருத்தது.
குழந்தைகள் கவனிப்பதன் மூலமும், ஈடுபாட்டின் மூலமும்தான் வளர்கிறார்கள், போதனைகளாலும் தத்துவங்களாலும் அல்ல. உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படிப்பட்டவராக நீங்கள் மாறுங்கள்.
நாம் பூமியில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல – நாமே இந்த பூமிதான். இதை இன்றைக்குப் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களைப் புதைக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
எல்லா பிரச்சனைகளுக்கும் மூலம் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. தீர்வுகளும் உங்களுக்குள்தான்.
எதிர்காலத்திற்காக திட்டமிடுவது ஒரு விஷயம் – ஆனால், இன்னும் நிகழாத ஒரு எதிர்காலத்தை நினைத்து துன்பப்படுவது வேறு விஷயம்.