Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

ஆதியோகி

ஒரு புதிய தரிசனத்தைப் பெற விரும்புகிறீர்களா? கட்டுரைகள், வீடியோக்கள், குருவாசகங்கள், ஆடியோ பதிவேற்றங்கள் மற்றும் பலவற்றின் மூலம் சத்குருவின் ஞானம் & உள்நிலை பார்வைகளை ஆராய்ந்தறியுங்கள்.

article  
குரு பௌர்ணமியின் கதை: ஆதியோகி தோன்றியது முதல் இன்று வரை
Jul 3, 2026
Loading...
Loading...
article  
பாரதம் - உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்று சும்மா அழைக்கப்படவில்லை. இங்கிருந்து உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் இந்திய யோகிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பயணப்பட்டு யோக அறிவியலை மனித நலத்திற்காக பல இடங்களுக்கு சென்று வழங்கி இருக்கிறார்கள். வியாபாரத்தில் மட்டுமல்ல, கலைகளில் மட்டுமல்ல, பொருள் வளம், மனித வளம், இயற்கை வளத்தில் மட்டுமல்ல, இந்திய தேசம் கண்டது பரிபூரண வளம் - ஆன்மீக வளம். இதனை தன்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளாமல் உலகம் முழுமைக்கும் வழங்கிய பெருமை பாரதத்திற்கு உண்டு. ஆன்மீகத்தை தேடி, இந்தியாவை நோக்கி பயணப்பட்டோர் ஏராளம். இந்தக் கட்டுரையில் சத்குரு, நம் தேசத்திற்கு பயணமான சில புகழ்பெற்ற பயணிகளைப் பற்றி எழுதுகிறார்...
Aug 12, 2024
Loading...
Loading...
article  
பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு "முக்தி" என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் - அவர்தான் ஷிவா. பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி - முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்...
Oct 15, 2024
Loading...
Loading...