கேள்வி:

நமஸ்காரம். என் இஷ்ட தெய்வம் அனுமன். ஒருவர் உண்மையிலேயே தனது இஷ்டதெய்வத்தின் இருப்பை உணர முடியுமா? முடியும் என்றால், மாயத் தோற்றத்தையும் உண்மையான அனுபவத்தையும் எப்படி வேறுபடுத்துவது?

சத்குரு:

இஷ்ட தெய்வம் என்றால் என்ன?

இஷ்ட தெய்வம் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் தெய்வம். அதாவது, இது எங்கோ சொர்க்கத்திலிருந்து இறங்கிய தெய்வம் அல்ல. நீங்கள்தான் அந்த தெய்வத்தை உருவாக்கினீர்கள் - வெறும் உணர்ச்சி பூர்வமாக இருக்கலாம், அல்லது எந்த வகையிலாவது உங்களால் தொடர்புகொள்ள முடிகிற ஒரு உண்மையான சக்தி வடிவமாக இருக்கலாம். இது ஒரு கருவியைப் போன்றது. ஒரு கருவி என்பது நம்மிடம் தற்போதுள்ள திறன்களின் மேம்பாடு, ஆனால் நீங்கள் செய்ய முடியாத விஷயங்களையும் கருவிகளால் செய்ய முடியும். உதாரணமாக, ஒரு மைக்ரோஃபோன் மூலம் நீங்கள் பெரிய கூட்டத்திடம் பேச முடியும், ஆனால் மைக்ரோஃபோன் உங்கள் குரலை மட்டுமே பெருக்குகிறது. கருவிகளைப் பயன்படுத்தும் திறன் காரணமாகவே மனித இனம் இந்த பூமியில் ஆதிக்க சக்தியாக மாறியுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உங்கள் உளவியல் நாடகமே. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவோ அல்லது உங்களை நீங்களே தோற்கடிக்க அதைப் பயன்படுத்துவதோ உங்களிடம் இருக்கும் தேர்வுகள்.

நம்மால் மிக ஆழமான உறவுகொள்ள முடிந்த சக்தி வடிவங்களை நாம் உருவாக்கியுள்ளோம். ஆனால் எல்லா தெய்வங்களும் சக்தி வடிவங்கள் அல்ல. அவற்றில் பல முற்றிலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தவை. ஒரு பக்தர் அவரின் பக்திக்கு பாத்திரமான பொருள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவரது உணர்ச்சிகளின் வலிமை மட்டுமே. உங்கள் அறிவின் வலிமையைப் பயன்படுத்துவது போலவே, அற்புதமான விஷயங்களைச் செய்ய உங்கள் உணர்ச்சிகளின் வலிமையையும் உங்களால் பயன்படுத்த முடியும்.

பக்தியால் நடக்கும் மாற்றம்

நீங்கள் ஒரு பக்தராக மாறினால், நீங்கள் ஒரு கடவுளுக்கோ அல்லது மற்றொரு கடவுளுக்கோ, ஒரு குரங்கிற்கோ அல்லது ஒரு எருமைக்கோ பக்தி செலுத்துகிறீர்களா என்பது முக்கியமல்ல, நீங்கள் பக்தியில் இருப்பதுதான் முக்கியம். நீங்கள் பக்தியுடன் இருப்பதால், மாற்றமடைவீர்கள் - கடவுளால் அல்ல, உங்கள் பக்தியால். நீங்கள் யாரையாவது காதலித்தால், நீங்கள் காதலிக்கும் நபர் ஒரு முட்டாளாக இருந்தாலும் நீங்கள் காதலில் இருப்பதால், உங்களைப் பற்றிய ஏதோ ஒன்று அழகாகிறது. ஒரு கடவுளை காதலிப்பதன் நன்மை என்னவென்றால், அவர் உங்கள் நம்பிக்கையை உடைக்கமாட்டார். மனிதர்கள் நிச்சயம் உங்கள் நம்பிக்கையை உடைத்துவிடுவார்கள், அவர்களிடம் ஏதோ தவறு இருப்பதால் அல்ல, உங்கள் எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் இருப்பதால் - எவரும் அவற்றின்படி வாழ்வது சாத்தியமில்லாதது.

உண்மையா அல்லது மாயத்தோற்றமா?

ஆனால் அனுமன் ஒரு சூப்பர்மேன். அவருக்கு குரங்கின் வால் மற்றும் முக அம்சங்கள் உள்ளன - மற்றவை எல்லாம் ஒரு சூப்பர்-சூப்பர்மேன். நீங்கள் அனுமனின் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திற்கு சென்றிருந்து, ஒரு குறிப்பிட்ட உறவைக் கொண்டிருந்தால், அதில் உண்மையின் ஒரு கூறு இருக்கலாம். இல்லையெனில், அது உங்கள் உணர்ச்சி மட்டுமே. அது மாயத் தோற்றமா அல்லது உண்மையா என்பது முக்கியமல்ல, ஏனெனில் உங்கள் மனதில் நடக்கும் அனைத்துமே மாயத்தோற்றம்தான்.

உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உங்கள் உளவியல் நாடகமே. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவோ அல்லது உங்களை நீங்களே தோற்கடிக்க அதைப் பயன்படுத்துவதோ உங்களிடம் இருக்கும் தேர்வுகள். நீங்கள் இங்கே அமர்ந்து நீங்கள் விரும்புவதை நினைக்கலாம். அதற்கு உண்மையுடன் எந்த தொடர்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மாயத்தோற்றங்கள் உங்கள் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்காக செயல்படுகின்றனவா அல்லது அவை உங்களுக்கு எதிராக செயல்படுகின்றனவா என்பதே கேள்வி.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஈஷா ஹோம் ஸ்கூலுக்குள் நுழைந்தபோது, எட்டு வயது சிறுவன் என்னிடம் வந்து, "சத்குரு, வாழ்க்கை ஒரு கனவா அல்லது அது உண்மையா?" என்று கேட்டான். நான், "வாழ்க்கை ஒரு கனவு, ஆனால் அந்த கனவு உண்மை" என்றேன். வாழ்வதற்கான சாமர்த்தியம் என்பது உங்கள் கனவை உங்களுக்கு எதிராக அல்லாமல் உங்களுக்காக செயல்படுமாறு செய்வதில் உள்ளது. தயவுசெய்து அனுமனை உங்களுக்கு எதிராக அல்லாமல் உங்களுக்காக செயல்பட வையுங்கள். அனுமன் அதீத வலிமை மற்றும் பக்தியை பிரதிபலிக்கிறார். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறட்டும். வாழ்க்கை மிக அற்புதமாக செயல்படும்.

அது உண்மையா இல்லையா என்று கேட்டு தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். உங்கள் எண்ணங்கள் வந்து போகின்றன - அவை தாமாகவே இருப்பதில்லை, ஆனால் நீங்கள் அவற்றை உங்களுக்காக செயல்பட வைக்க முடியும். இந்த உளவியல் நாடகத்தை ஒரு தீய சக்தியாகவோ அல்லது ஒரு தெய்வீக வடிவமாகவோ மாற்றுவது உங்களிடம் உள்ள தேர்வு. தயவுசெய்து அதை ஒரு தெய்வீக சக்தியாக மாற்றுங்கள். அப்போது உங்கள் மனமே தெய்வீகத்தின் மூலமாக மாறும்.

குறிப்பு:

லிங்கபைரவி என்பது ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெண்மை தன்மையின் தெய்வீக வெளிப்பாடு. சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் சக்திவாய்ந்த யந்திர வைபவத்தின் போது வழங்கப்படும் லிங்கபைரவி யந்திரத்தின் மூலம் தேவியின் அருளை வீட்டிற்கே கொண்டு செல்லலாம். அடுத்த யந்திர வைபவம் ஆகஸ்ட் 7 –9, 2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு LingaBhairavi.org என்ற இணையதளத்தை பார்வையிடவும் அல்லது +91-94890 45131/32/33/35/36 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.