Login | Sign Up
logo
search
Login|Sign Up
Country
  • Sadhguru Exclusive

மஹாளய அமாவாசையன்று

காலபைரவ சாந்தி

வாழ்விலும் வாழ்விற்கு அப்பாலும் உயிரைப் பேணும் செயல்முறை - லிங்க பைரவியில்

2nd October 2024, from 11:00 PM IST

(இந்தியாவில் மட்டும்)

“மனிதர்கள் ஆனந்தமாக வாழவேண்டுமென நாம் விரும்புகிறோம். அவர்கள் ஆனந்தமாக வாழாவிட்டாலும் குறைந்தபட்சம் அமைதியாக இறக்கவாவது செய்ய வேண்டும். அவர்கள் அதையும்கூட செய்யாத பட்சத்தில், அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நாம் விரும்புகிறோம்.” —சத்குரு

மஹாளய அமாவாசை

நம் வாழ்க்கைக்கு பங்களிப்பாய் இருந்த நம் முன்னோர்கள் அனைவருக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.

மஹாளய அமாவாசையின் மகத்துவம்

சத்குரு: முதலில், நமக்கு முன் வந்த தலைமுறைகள் இல்லாமல் நாம் இங்கு இருக்க வழியில்லை. அடுத்து, அவர்களது பங்களிப்பு இல்லாமல் இன்று நம்மிடம் இருப்பவை அனைத்தும் நமக்கு இருந்திருக்காது. இந்நாள் அவர்கள் அனைவருக்கும் நாம் நம் நன்றியை வெளிப்படுத்துவதற்கான நாள். காலமடைந்த பெற்றோர்களுக்கு இந்நாளில் திதிகள் செய்யப்படுகிறது, ஆனால் இந்நாள் நமக்கு முன் வாழ்ந்த மூதாதையர்கள் அனைவருக்கும் நன்றி வெளிப்படுத்துவதற்கான நாளாகும்.

காலபைரவ சாந்தி

காலபைரவ சாந்தி என்பது பிரியமான ஒருவரின் மரணத்திற்குப் பிறகு எந்தவொரு அமாவாசை இரவிலும் அவருக்காக செய்யப்படக்கூடிய புனிதமான சடங்காகும். மஹாளய அமாவாசையன்று ஒரு விசேஷமான வருடாந்திர காலபைரவ சாந்தி செய்யப்படுகிறது.

பதிவுசெய்ய தேவையானவை

  1. இறந்தவரின் புகைப்படம்

  2. இறந்தவரின் பெயர்

  3. பிறந்தநாள் அல்லது சரியான பிறந்த வருடம், அதோடு அவரது இறந்த தேதி அல்லது சரியான இறந்த வருடம். அல்லது இறந்தவரின் தாய் தந்தை இருவரின் பெயர்களும் தேவைப்படுகிறது.

குறிப்பு:

  • இறந்தவரின் புகைப்படம் தேவைப்படுகிறது. பலர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பயன்படுத்த முடியாது. இப்புகைப்படம் அவர் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.

  • கருத்தரித்து 48 நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட கருக்கலைப்பு அல்லது இறந்து பிறந்த குழந்தை என்றால், தாயின் புகைப்படம் (கர்ப்பமாக இருந்தபோது எடுத்திருந்த புகைப்படம் சிறந்தது) பயன்படுத்தப்பட வேண்டும்.

  • பெண்கள் கர்ப்பமாக இருந்தாலோ, மாதவிலக்கு சமயமாக இருந்தாலோ, காலபைரவ சாந்திக்கு வரக்கூடாது, அது அவர்கள் நல்வாழ்வுக்கு உகந்ததாக இருக்காது.

  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு காலபைரவ சாந்தி செய்வதற்கு ஒரே பதிவாகவும் செய்துகொள்ள முடியும்.

இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:45 மணி வரை நிகழும் காலபைரவ சாந்தி செயல்முறையில் நீங்கள் நேரலையிலும் இணைய முடியும். (பதிவு செய்வது இலவசம் மற்றும் அவசியம்)

அக்னி அர்ப்பணம்

நம் வாழ்வில் பங்களிப்பு செய்து வாழ்வை செழுமையாக்கிய அனைவருக்கும் அனைத்திற்கும் ஒரு நன்றி வெளிப்பாடாக, தேவி லிங்கபைரவிக்கு அர்ப்பணிக்கும் ஒரு நெருப்பு அர்ப்பணம். இந்த செயல்முறை நம் முன்னோர்களுக்காகவும் மற்றும் மறைந்த அனைத்து உறவுகளுக்காகவும் செய்யப்படலாம். இதனை பெயர்கள், புகைப்படங்கள், அல்லது தேவைப்படும் பிற விவரங்கள் இல்லாதவர்களுக்கு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு:

+91-8300083111 / info@lingabhairavi.org
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளூர் மையங்களிலும் முன்பதிவு செய்யமுடியும்.

பங்கேற்பதற்கான வேறு வழிகள்

அக்னி அர்ப்பணம்

நம் வாழ்வில் பங்களிப்பு செய்து வாழ்வை செழுமையாக்கிய அனைவருக்கும் அனைத்திற்கும் ஒரு நன்றி வெளிப்பாடாக, தேவி லிங்கபைரவிக்கு அர்ப்பணிக்கும் ஒரு நெருப்பு அர்ப்பணம். இந்த செயல்முறை நம் முன்னோர்களுக்காகவும் மற்றும் மறைந்த அனைத்து உறவுகளுக்காகவும் செய்யப்படலாம். இதனை பெயர்கள், புகைப்படங்கள், அல்லது தேவைப்படும் பிற விவரங்கள் இல்லாதவர்களுக்கு செய்யலாம்.

பதிவுசெய்ய
காலபைரவ கர்மா

காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும். இது தேவியின் அருளுடன் இறந்தவருக்காக லிங்க பைரவியில் செய்யப்படுகிறது.

மஹாளய அமாவாசை

yyyyy
 
Close