“உண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல - உள்முகமாக பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளேதான் இருக்கிறது.” - சத்குரு
“உண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல - உள்முகமாக பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளேதான் இருக்கிறது.” - சத்குரு
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஜூன் 21 ஐ உலக யோகா தினமாக அறிவித்தது.
வயது, மதம், இனம், சமூகம் மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானத்தை உணரவும், வாழ்க்கையைப் பற்றி அவர்களின் நோக்கத்தை, தான் என்ற தனித்துவத்திலிருந்து உலகளாவிய தன்மைக்கு விரிவாக்கும் சாத்தியமாக அமையும்படி யோகாவை வழங்கிட சத்குரு அவர்கள் முனைகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஈஷா யோக மையம், அனைவருக்கும் யோகப் பயிற்சிகளை எடுத்துச்செல்லும் சத்குருவின் இந்த நோக்கத்திற்காக - மகத்தான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தச் சவாலான நேரங்களில், யோகா என்பது தனிநபர்களின் மாற்றத்தின் மூலம் உலகளாவிய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரு தீர்வாக உள்ளது. நாம் நமக்குள் இருக்கும் சுய வரம்புகளை வென்று, மகிழ்ச்சியான, துடிப்பு நிறைந்த, விழிப்புணர்வுள்ள, வளமான தனிமனிதர்களாக ஆகிடும் பாதையில் நம்மைச் செலுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக யோகா உள்ளது.
இந்த உலக யோகா தினத்தில் யோகத்தை உங்களுடைய புதிய இயல்பாக மாற்றி உங்களுக்குள் மாற்றத்தை உணர்ந்திடுங்கள்!
வாழ்வையே மாற்றியமைத்த ஈஷா யோகா - பங்கேற்றவர்கள் பகிர்கிறார்கள்
ஈஷா யோகா ஆன்லைன் என்பது நல்வாழ்வுக்கான தொழில்நுட்பம். இது தொன்மையான யோக விஞ்ஞானத்தின் சாரமாக விளங்குகிறது.
தனிமனிதனின் சுய வளர்ச்சிக்காக சத்குருவால் வடிவமைக்கப்பட்ட முழுமையான இந்தப் பயிற்சி, சக்திவாய்ந்த 7-வகுப்புகளை கொண்டது. உங்கள் வேலையையும், வாழ்வையும், இந்த உலகத்தையும் நீங்கள் பார்க்கும் விதம், அதை அனுபவத்தில் உணரும் விதம் - இவற்றை முழுமையாய் மாற்றியமைக்க வல்லது இந்த பயிற்சி.
லட்சக்கணக்கான அன்பர்கள் இந்தப் பயிற்சியில் வழங்கப்படும் கருவிகளை பயன்படுத்தி பலன் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பகிர்வுகள் இங்கே.