Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

அன்னதானம்

உணவளிக்கும் உன்னதமான அர்ப்பணிப்பு

"உங்களுக்கு வாய்ப்பளிக்கிறார்கள் என்று அர்த்தம். எந்த எதிர்பார்ப்புமின்றி இதை நீங்கள் அர்ப்பணிக்கும்போது, நீங்கள் அன்பின் உருவமாக மாறுகிறீர்கள்." - சத்குரு

அன்னதானம் அல்லது உணவு வழங்கும் புனிதமான செயல் நம் இந்தியாவின் பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் ஒரு அங்கமாக எப்போதும் இருந்து வருகிறது. ஈஷா யோக மையத்தில் வாழும் ஆயிரக்கணக்கான சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் இங்கே தங்கி தன்னர்வத் தொண்டு செய்பவர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்யும் வாய்ப்பு இப்போதும் உள்ளது. இந்த தீவிரமான சாதகர்கள் அனைவரது உள்வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக வழங்கி ஒரே நோக்கில் இடைவிடாது அர்ப்பணிப்பாய் செயல்படுபவர்கள்.

ஈஷா யோக மையத்தில் ஒரு நாளில் இரண்டு முறை இங்கு வரும் விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது. உணவு வழங்கப்படும்போது முழுமையான மௌனம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவை உண்பதற்கு முன், ஒருவர் தான் உட்கொள்ளும் உணவின் ஏற்புத்தன்மையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த உள்ளெழுச்சி பாடல் உச்சாடனம் செய்யப்படுகிறது.

நீங்களும் உங்களின் வாழ்வில் வரும் பிறந்த நாள், திருமண நாள் அல்லது உங்களின் வாழ்வில் முக்கியமானவர்களின் நினைவாக இந்த அன்னதானத்தில் கலந்துகொள்ள முடியும். மேலும் ஈஷா பிக்க்ஷாவில் அன்னதானம் செய்ய, நீங்கள் ஒருமுறை முழுத்தொகையை செலுத்தி, வருடத்திற்கு ஒருமுறை அடுத்த 21 வருடங்களுக்கு வழங்க முடியும் - அதற்கு ஒவ்வொரு வருடமும் நீங்கள் தேர்ந்தெடுத்த நாளில் சத்குருவிடமிருந்து ஆசீர்வாதமும் பெற முடியும்.

இதற்கு வலைத்தளம், வங்கி பரிமாற்றம், காசோலை, வரைவு காசோலை அல்லது ரொக்கமாக பணம் செலுத்த முடியும்.

அன்னதானம் வழங்கும் உங்கள் எளிய செயல் மூலம் நம் பாரம்பரியத்தின் இப்புனிதமான செயல் தொடர உங்கள் ஆதரவை நாடுகிறோம்.

தொடர்புக்கு:

மின்னஞ்சல்:  annadanam@ishafoundation.org
கைப்பேசி: +91 844 844 7707

பகிர்வுகள்

நான் இங்கு பிக்க்ஷா ஹாலில் உணவு பரிமாறும் பொழுது உணவை பெற்றுக்கொள்பவரோடு எல்லைகள் மற்றும் வார்த்தைகள் கடந்த ஒரு ஆழமான தொடர்பு உருவாவதை என்னால் உணர முடிகிறது...

- சிராக்ஹ்