ஒரு சக்திவாய்ந்த அருள் வெளியை உருவாக்கும் சத்குரு சந்நிதியை தங்கள் வீட்டில் நிறுவிட, ஆன்மீக சாதகருக்கான ஒரு பிரத்தியேக நிகழ்ச்சி
Online & In-Person Program: 22 - 23 September 2025
சந்நிதி என்றால் அருளில் இருப்பது. அன்பும் ஆனந்தமும் அருளும் நிறைந்த உங்கள் குருவின் கருவறைக்குள் உங்களை இயல்பாகவே கொண்டு செல்லக்கூடிய சக்தியை சந்நிதி நிறுவுகிறது.
சக்திவாய்ந்த சந்நிதி குரு பூஜையை எப்படி செய்வது என்பதை கற்க, சத்குரு சந்நிதி சங்கா ஒரு அனுபவபூர்வமான நிகழ்ச்சி. குரு பூஜை என்பது உங்களின் அமைப்பை இறைதன்மைக்கு ஒரு அழைப்பாக ஆக்கும் செயல்முறை.
இந்நிகழ்ச்சி சாதகருக்கு சத்குருவின் அருளில் வாழ்ந்து, வளமடைவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, இது தங்கள் வாழ்க்கையில் ஆன்மீக வளர்ச்சியை பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ள சாதகருக்கு உதவுகிறது.
நேரில் பங்கேற்க
4 நிகழ்ச்சிகள்
₹ 1,40,000
தங்குவது: 1 நாள், 1 இரவு
சத்குரு சந்நிதி சங்கா நிகழ்ச்சியில் பங்குபெற, உங்களிடம் சத்குரு சந்நிதி செட் இருக்கவேண்டும்.
ஆன்லைன் நிகழ்ச்சி: இங்கே க்ளிக் செய்யவும்
நேரில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி: இங்கே க்ளிக் செய்யவும்
உள்நிலை நல்வாழ்வை நாடும் எவரும், மற்றும் ஒரு சக்திவாய்ந்த அருள் வெளியான சத்குரு சந்நிதியை தங்கள் வீட்டில் நிறுவ விரும்பும் யார் வேண்டுமானாலும், சந்நிதி சாதனாவிற்குப் பதிவு செய்யமுடியும்.
சந்நிதி சாதனா ஒவ்வொரு திங்கள் கிழமையும், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் சத்குருவின் பிரசென்ஸ் நேரத்தில் (மாலை 6.15 – 6.40) செய்யப்படவேண்டும்.
ஒரு வேளை திங்கள் அன்று அலுவலக நேரத்தால், அல்லது தவிர்க்க இயலாத காரணத்தால் செய்ய முடியாவிட்டால், சந்நிதி சாதனா முந்தைய ஞாயிற்றுக்கிழமை செய்யலாம்.
ஆம், நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடத்தப்படும். எனினும் தமிழ், மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புக்கள் இருக்கும்.
இல்லை, நிகழ்ச்சி ஒரு சந்நிதி ஈஷாங்காவால் நடத்தப்படும்.
சந்நிதி சாதனாவிற்கென ஒரு தனி அறை அல்லது பிரத்யேகமாம ஓர் இடத்தை ஒதுக்கலாம். அங்கே உங்கள் காலை சாதனா செய்துகொள்ளவும் முடியும்
இட பற்றாக்குறை இருந்தால், நீங்கள் சந்நிதி சாதனாவிற்கான இடத்தை உங்கள் வரவேற்பரையில் உருவாக்கலாம், நீங்கள் சந்நிதியில் இருந்து 10 அடிக்குள் உண்பது, குடிப்பது,அல்லது உறங்குவது போன்றவற்றை தவிர்க்கவும்.
இந்த நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாதென்றால், நீங்கள் சந்நிதிக்கான ஒரு அறையை ஒரு தடுப்பு ஏற்படுத்தி உருவாக்கலாம். பிற வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சியின்போது உங்களுக்கு கொடுக்கப்படும்.
ஆம். சக்திவாய்ந்த சந்நிதி சாதனா செய்யும் இடத்தில் பயிற்ச்சிகள் செய்வது உங்களுக்கும் பிறருக்கும் நன்மை தரும்.
தேவைபட்டாலொழிய, சாதனாவிற்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்தை மாற்றக்கூடாது. சந்நிதி சாதனா இடத்தை உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் எங்கு நிறுவவேண்டும் என்று முன்கூட்டியே நன்கு யோசித்து முடிவுசெய்யவும்.
நீண்ட நாட்களுக்கு நீங்கள் வெளியூர் சென்றால், இன்னொரு குடும்ப உறுப்பினரோ அல்லது ஈஷா தியான அன்பரோ, சந்நிதி சாதனாவிற்கு பயிற்சி பெற்றவர் நீங்கள் இல்லாத நேரத்தில் தேவையான செயல்முறையை செய்வதை உறுதிசெய்யவும். இதில் தினசரி பராமரிப்பு (தினமும் விளக்கு ஏற்றுதல் மற்றும் ஊதுபத்தி மற்றும் பூக்கள் அர்ப்பணித்தல்) அடங்கும். இறுதி வாய்ப்பாக, சந்நிதியை ஒரு வெள்ளை பருத்தி துணியால் மூடிவிடலாம்.
சந்நிதி சாதனா தவறாமல் ஒவ்வொரு திங்கள் கிழமையிலும், அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சத்குருவின் ப்ரசன்ஸ் நேரத்தில் ( மாலை 6.15 – 6.40)
நிகழ்த்தப்படுவது மிகவும் முக்கியமானது. ஒருவேளை திங்கள் அன்று அலுவலக நேரத்தால் அல்லது தவிர்க்க முடியாத சூழலால் சௌகரியமாக இல்லை என்றால், சந்நிதி சாதனாவை முந்தைய ஞாயிற்றுக் கிழமையே செய்ய முடியும்.
உங்களின் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால், சந்நிதி சாதனாவை கற்றுக்கொள்ளுதல் நல்லது. அதன்மூலம் நீங்கள் இல்லாதபோதும் சாதனா தொடரந்து செய்யப்படும்.
இந்த உறுதியை நீங்கள் கொடுக்க முடியாவிட்டால், நீங்கள் காத்திருந்து பின் வரும் நாட்களில், உங்களால் உறுதியளிக்க இயலும்போது நிகழ்ச்கிக்குப் பதிவு செய்யம்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆமாம், நீங்கள் உயர் பிரிவிற்குத் தேவையான மீதத் தொகையை செலுத்தி upgrade செய்துகொள்ளலாம். isha.co/offeringsupport க்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட ஈமெயிலில் இருந்து ஒரு வேண்டுகோள் அனுப்பவும்.
ஆம், தயவுசெய்து Terms and Conditions .
ஆம், தயவுசெய்து Terms and Conditions ஐ Refund Policyஐ பார்க்கவும்.
ஓருவேளை நீங்கள் நிகழ்ச்கிக்கு வர இயலவில்லை என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட ஈமெயிலில் இருந்து isha.co/offeringsupport க்கு வேண்டுகோள் அனுப்புவதன்மூலம், நீங்கள் அடுத்த நிகழ்ச்சிக்கு மறு-பதிவு செய்யமுடியும்.