Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
வாழ்க்கை என்பது உங்களைச் சுற்றி நிகழும் நாடகமல்ல, வாழ்க்கை என்பது 'நீங்கள்' எனும் அந்த அடிப்படையான பரிமாணம்.
மனிதர்கள் அதிக வல்லமை பெறும்போது, நாம் எதிர்செயல் செய்பவர்களாகவும் கட்டாயத்தால் செயல்படுபவர்களாகவும் இல்லாமல், அதிக விழிப்புணர்வாகவும் பொறுப்பாகவும் மாறுவதற்கான அடிப்படையான தேவை இருக்கிறது.
கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது. கர்மவினையை விழிப்புணர்வான செயல்முறையாக மாற்றும்போது, உங்கள் விதிக்கு நீங்களே அதிபதியாகிறீர்கள்.
சிரிக்க முடியாத ஒருவரால் தியானம் செய்ய முடியாது. உங்கள் உயிர்சக்தி துடிப்பாய் இருப்பதன் ஒருவித வெளிப்பாடுதான் சிரிப்பு. உங்கள் உயிர்சக்தி, உடல்செயல் இல்லாமல் உச்சபட்ச உயிரோட்டத்தில் இருப்பதுதான் தியானம்.
இந்த பௌர்ணமி நாளில், கௌதம புத்தர் முழுமையாக ஞானமடைந்தார், ஆன்மீகத்தின் ஓர் அலையை உருவாக்கினார். உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கு இது ஒரு ஊக்கமாக விளங்கட்டும்.
யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருப்பது - உடலளவில் மட்டுமல்ல, எல்லா விதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.
மற்றவர்களிடம் மிகச்சிறந்ததை வெளிக்கொணரும் திறன்தான் உங்களை ஒரு தலைவராக்குகிறது.
இளமையாய் இருப்பது என்றால், கற்றுக்கொள்ளவும், வளரவும், உயிருக்குத் திறந்த நிலையில் இருக்கவும் விருப்பமாய் இருப்பது.
என் தாய் என்னைச் சுற்றி முழுமையான அரவணைப்பின் சூழ்நிலையை உருவாக்கினார், ஒருபோதும் அவர் இடையூறாக இருக்கவில்லை. இது எனக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது.
கணக்குப்போடும்போது மன அழுத்தமும் போராட்டமும் இருக்கும். கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது.
முளைக்காத விதை கல்லுக்கு சமம். தெய்வீகத்தின் விதையாய் விளங்கும் நீங்கள் செழித்து வளர, நீங்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஆன்மீகம் என்றால் தரிசுநிலம் போல இருப்பதல்ல. உயிர்த்தன்மையும் மகிழ்ச்சியும் ததும்ப இருக்கும் ஒருவரால்தான் உண்மையாகவே விடுதலையாக இருக்கமுடியும்.