Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
இரண்டு பேர் ஒன்றாக சேரும்போது, அது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வதாக இருக்க வேண்டும்; ஒருவரிடம் இருந்து இன்னொருவர் சந்தோஷத்தை பிழிந்தெடுப்பதாக இருக்கக் கூடாது.
ஒருவர் மிகவும் நல்லவர் என்ற பட்டத்தை எடுத்துக் கொள்ளும் போது மிகவும் கொடியவராக மாறுகிறார், அதை தவிர்க்கமுடியாது.
சுதந்திரம் என்றால், உங்கள் வாழ்க்கையை வேறு எதுவும் தீர்மானிக்காமல், அதை நீங்களே வடிவமைத்துக் கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதுதான்.
அறிவைச் சேகரித்துக் கொள்ளலாம். ஞானம் என்பது நமக்குள் நாம் உணர்வது. விவேகம், அதை நாம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு ஒரு வாழ்நாள் முழுவதும் தேவை.
மன அழுத்தம் ஏற்பட காரணம் வாழ்க்கை சூழ்நிலைகள் அல்ல. உங்களை எப்படி வைத்துக் கொள்வது என்று உங்களுக்கு தெரியவில்லை, அதுதான் காரணம்.
"உயிரின் மூலம்" உங்களுக்குள் இருக்கிறது, அதுதான் உங்கள் அதிகபட்ச அதிகாரம் எனும்போது – சுற்றியுள்ள அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் ஒரு பொருட்டாகவே இருக்காது.
என்ன கிடைக்கும் கிடைக்காது என்று கவலைப்படாமல், உங்களை முழுமையாகக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை அழகாகிறது. வாழ்க்கையின் ஆனந்தம் நம்மை முழுமையாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது, எதையோ வேண்டிக் கெஞ்சுவதில் இல்லை.
நீங்கள் சேகரித்துக் கொள்வது உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், ஒருபோதும் அது 'நீங்களாக' ஆகிவிடாது.
உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும்தான் உங்களுடைய பேய்கள். அதை உருவாக்குவது நீங்கள்தான். பிறகு அதுவே கட்டுப்பாடு இல்லாமல் உங்களை வாட்டி வதைக்கிறது. இது படுமோசமாக டைரக்ட் செய்யப்பட்ட திகில் படம்தான்!
தனக்குள் இருக்கும் அசைவற்ற நிலையை உணராதவர், இயங்குவதிலேயே தொலைந்து போவார்.