Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ற அடிப்படையில் உலகத்தை பிரித்துப் பார்க்கும்போது, உண்மையை உணர திறனற்றவர் ஆகிறீர்கள்.
உள்ளிருக்கும் மனிதத்தன்மை பொங்கிப் பெருகும் போது, உங்களை சுற்றியுள்ள உயிர்களுக்கு கைக்கொடுப்பீர்கள். இது நல்லது செய்வது பற்றி அல்ல - இயல்பாகவே மனிதர்களின் மனது இப்படித்தான்.
இப்போது பிரச்சனை வாழ்க்கை அல்ல. நீங்கள் மனத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் பிரச்சனை.
மனித உடல் போல் ஒரு மகத்தான இரசாயனத் தொழிற்சாலை உலகில் வேறு இல்லை. நீங்கள் நல்ல நிர்வாகியாக இருந்தால் அதில் ஆனந்தம் எனும் இரசாயன நிகழ்வை உருவாக்கலாம்.
ஒரு சூழ்நிலைக்கு கட்டாயமான விதத்தில் எதிர்செயல் செய்யும்போதுதான், அங்கு மனஅழுத்தம் உருவாகிறது.
ஆன்மீக அனுபவங்களை தேடிக் கொண்டிருக்காமல், உங்களுக்குள் பூரணமான மாற்றத்தை அடைய பாருங்கள்.
என் ஒரே நோக்கம் - நீங்கள் ஒரு முழுமையான உயிராக மலர வேண்டும் - வாழ்க்கை என்பதே இதற்குத்தான்.
உணவால் சேர்ந்தது உடல், பதிவுகளின் குவியல் மனம் - இதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டால், உள்ளுக்குள் அசைவற்ற நிலையை உணரலாம். தியானத்தில் இருக்கத் தேவைப்படுவது இவ்வளவுதான்.
ஒவ்வொரு முறை நீங்கள் நேரம் பார்க்கும் போதும், நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை முடிந்துகொண்டே வருகிறது. எது மிகவும் மதிப்பானதோ அதில் கவனம் செலுத்தும் நேரமிது
நாம் இங்கு இருப்பதே மிகக் குறுகிய காலத்திற்குதான்.இதில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, அதை மேலும் குறைத்துக்கொள்ள வேண்டாமே!