FILTERS:
SORT BY:
உங்கள் மதமோ, இனமோ, ஜாதியோ ஒரு பொருட்டே அல்ல - நீங்கள் மனிதராக இருந்தால், மஹாசிவராத்திரி உங்களுக்கானது. உள்முகமாக திரும்பும் விஞ்ஞானம் உங்களுக்கானது, ஏனென்றால், மனிதர்களின் நல்வாழ்வு உள்ளிருந்துதான் உருவாகிறது.
இசை ஒரு தேடும் பயணமாக இருக்க வேண்டும், வாழ்க்கையை வளமாக்குவதாக இருக்க வேண்டும். அது இயந்திரத்தனமாக மாறினால், எந்திரங்கள் ஆதிக்கம் கொள்ளும் - இயந்திரத்தனத்தை அவை நம்மைவிட நன்றாகவே செய்யும்.
எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட, உயிரின் ஆற்றலை முழுமையாக உணர்வதே முக்கியமானது.
நீங்கள் வாழ்க்கையை துன்பமாக உணரவில்லை. உங்கள் ஞாபகங்களையும், கற்பனைகளையும் தான், துன்பமாக உணர்கிறீர்கள்.
நீங்கள் அக்கறை கொள்வதின் மீது முழு உறுதியுடன் ஈடுபட்டால், உலகம் முழுவதுமே உங்களுக்கு துணை நிற்கும்.
உலகத்தில் நாம் யாராக இருக்கிறோம் என்பது காலத்தாலும், சூழ்நிலையாலும் வடிவமைக்கப்படுகிறது. உள்நிலையில் நாம் யாராக இருக்கிறோம் என்பதை ஒருபோதும் அவை வடிவமைக்கக் கூடாது.
நீங்கள் எவ்வளவு ஆழமாக ஈடுபட்டு இருக்கிறீர்களோ - வாழ்க்கையின் அனுபவம் அவ்வளவு ஆழமாக இருக்கும்.
எப்போதுமே நாம் அடியெடுத்து ஏறுவதற்கு இன்னும் ஒரு படி இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கை வாழத் தகுந்ததாக இருக்கிறது.
உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்காக வேலை செய்தால், உங்களை துன்பப்படுத்திக்கொள்ள மாட்டீர்கள். உங்களுக்குள் மிகச்சிறந்த நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். வெளி உலகில் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல் செய்வீர்கள்.
எல்லோருக்கும் எளிதாக தகவல் கிடைக்கும் இந்த உலகத்தில், கல்வி என்பது ஒரு ஊக்கமாக மாறவேண்டும், வெறும் அறிவை குவிப்பதாக இருக்கக்கூடாது.