FILTERS:
SORT BY:
உங்களுக்குள் நீங்கள் நிசப்தமாக ஆகிவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத விதத்தில் வாழ்க்கையை உணர்வீர்கள் - அதன் முழு ஆழத்தில் உணர்வீர்கள்.
உங்கள் நெஞ்சில் அன்பு இருந்தால், பரிவு என்பது தேவை இல்லை. வாழ்க்கை முழுவதும் அன்பே உங்களை வழிநடத்தும்.
ஏற்றத்துக்கு விலை உண்டு, விழுவது இலவசம்தான். நீங்கள் ரம்யமான சூழலுக்குள் விழ கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான் - இருப்பதிலேயே ரம்யமான இடம் உங்களுக்குள்தான் இருக்கிறது.
பாட்டு, நடனம், வேலை எதுவாக இருந்தாலும் - அதில் நீங்கள் கரைந்து போகும் அளவுக்கு உங்களை ஈடுபடுத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கை அற்புதமானதாகும்.
நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால், தெளிவாக உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
தியானம் என்பது ஒரு சாதனையோ, ஒன்றை வெற்றி கொள்வதோ அல்ல – வீடு வந்து சேர்வது. இது எங்கேயோ போவதை பற்றியது அல்ல – திரும்பி உங்களுக்குள்ளே விழுந்துவிடுவது, அவ்வளவுதான்.
நீங்கள் யார் என்பது உங்களுக்குள் தெளிவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றால், மற்றவர்கள் சொல்வதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது.
இன்னொருவரை உங்களுக்குள் ஒரு பாகமாக ஆக்கிக் கொள்ள ஏங்குவது தான் அன்பு. - நீங்கள் யார் என்பதன் எல்லைகளை, உங்களைத் தாண்டி விரிவுபடுத்திக் கொள்ள.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எதுவாக இருந்தாலும், துன்பப்பட எந்த ஒரு காரணமும் இல்லை. எதுவுமே இல்லாமல் வந்தீர்கள், அதனால் எப்போதும் லாபத்தின் பக்கம்தான் இருக்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகளுக்காக நெஞ்சில் கொஞ்சமாவது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம் - உங்களை மேம்படுத்திக் கொள்வதுதான், அவர்களுக்கு போதனை தருவது அல்ல.
சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை எல்லா நேரமும் மாற்றி அமைக்க நம்மால் முடியாமல் போகலாம். ஆனால், அதை நமக்குள் உணரும் விதத்தை மாற்றிக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.
அடுத்தடுத்த சாத்தியங்களுக்கு நகர்வது தான் உயிரின் இயல்பு. ஆனால் உங்கள் மனநிலை தான், வாழ்வதை விட்டு பழக்கங்களின் சௌகர்யத்தை தேர்ந்தெடுக்கிறது.