Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
யாருக்கும் எதற்கும் நீங்கள் இதை செய்தாக வேண்டும் என்கிற கடமை எதுவும் இல்லை. உங்களுக்குள் அன்பும் அக்கறையும் இருந்தால், எது தேவையோ அதை நீங்கள் செய்வீர்கள்.
நாம் விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் அதே விஷயத்தை விழிப்புணர்வுடனும் செய்யமுடியும். இதுதான் அறியாமைக்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம்.
அதிகாரம் இருப்பதால் ஏதோ ஒன்று நமக்கு 'உண்மை' ஆகிவிட வேண்டியதில்லை. உண்மைதான் ஒரே அதிகாரம்.
முடிவுகளை உருவாக்கிக் கொள்வது, தெளிவு இல்லாத தன்னம்பிக்கையை தரும். தெளிவு இல்லாத வெறும் நம்பிக்கையால் பெரும் நஷ்டம்தான்.
மனம் என்பதே பைத்தியம்தான். மனத்தை கடந்து அதற்கு அப்பால் போகும்போதுதான் தியானம் நிகழ முடியும்.
மண் என்பது உயிருள்ள விஷயம் - அது நமக்கு சொந்தமானது அல்ல, நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பாரம்பரியம். அது உயிருள்ள மண்ணாகவே இருக்கும்படி அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துவிட்டு போகவேண்டும்.
படைப்பு ஒன்றும் மனிதர்களை நடுநாயகமாக கொண்டு இல்லை. இந்த பிரபஞ்சத்தை பொருத்தவரை நீங்கள் ஒரு தூசுதான்.
நீங்கள் ஒவ்வொருவரும் தியானலிங்கத்தை அனுபவபூர்வமாக உணர வேண்டும் - அதுவே என் விருப்பம், அதுவே என் ஆசி! உலகில் நீங்கள் எங்கே இருந்தாலும், இந்த சாத்தியத்திற்கு திறந்த நிலையில் இருந்தால், ஆன்ம விடுதலைக்கான விதை உங்களுக்குள்!