Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
உங்களுக்குள் நீங்கள் நலமாக இருப்பதை கடவுளே கூட தீர்மானிக்க முடியாது. எனக்கு நானே துன்பம் உருவாக்கிக்கொள்ள மாட்டேன் என்று இருந்துவிட்டால், பிறகு எவராலும் நமக்குத் துன்பம் ஏற்படுத்த முடியாது.
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் இருப்பதன் அர்த்தமே அதுதான்.
இந்த பூமியை அழித்துக் கொண்டிருப்பது ஏதோ சில கொடூரமான மனிதர்கள் அல்ல – சந்தோஷத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தான்.
நாம் பூமியில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல – நாமே இந்த பூமிதான். இதை இன்றைக்குப் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களைப் புதைக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
உங்கள் ஞாபகங்களை அல்லது கற்பனைகளை நினைத்து நீங்கள் துன்பப்படும்போது, இப்போது இங்கே இல்லவே இல்லாத ஒன்றைத்தான் துன்பமாக அனுபவிக்கிறீர்கள்.
உங்களுக்குள் இனிய நிலையில் இருந்தால், அது வெளிச் சூழ்நிலைகளை அற்புதமானதாக ஆக்கும். ஆனால், உங்களுக்குள் நீங்கள் நன்றாக இல்லை என்றால், வெளியில் வசந்தமாக இருந்தாலும் அதைத் துன்பமாகவே உணர்வீர்கள்.
நீங்கள் ஒன்றும் உலகத்தைக் கையாள வேண்டியதில்லை. உங்களை நீங்கள் கையாளக் கற்றுக்கொண்டாலே போதும், எல்லாமே பார்த்துக்கொள்ளப்படுகிறது.
அன்பு என்றால் தன்னைத் தானே கரைத்துக்கொள்வது. நீங்கள் கரைந்து விழுவதில்தான் அது நிகழ்கிறது, கணக்குப் போடுவதிலும் வசதிக்காகவும் நிகழ்வதில்லை.
உயிர் அனைத்தையும் தனக்குள் ஒன்றாக அரவணைத்திருக்கிறது. உங்கள் மனம் மட்டும்தான் தனிப்பட்டுப் பிரிந்திருக்கிறது.
விஷயமே உயிரோட்டமாக இருப்பதுதான். மரணம் என்னவோ கச்சிதமாக நடந்துவிடும் – நீங்கள் ஒன்றும் அதைப் பழக வேண்டியதில்லை. வாழ்வதற்குத்தான் ஏராளமான பயிற்சி தேவை.