வீணை இசையுடன் 6ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஆறாம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்... உங்கள் பார்வைக்கு!
ஈஷாவில் 6ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...
ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன.9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய கொண்டாட்டத்தில் ஆறாம்நாள் திரு.ரமணா பாலச்சந்தர் அவர்களின் வீணை இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
வீணை இசையில் மெய்மறக்கச் செய்த ரமணா!
Subscribe
சரஸ்வதி தேவியின் கைப்பொருளான வீணையை நுட்பமாய் மீட்டி பார்வையாளர்களை இசைவெள்ளத்தில் ஆழ்த்திய திரு.ரமணா பாலச்சந்தர் அவர்கள், பல்வேறு மனமயக்கும் ராகங்களை தன் வீணையின் வழியாக வழங்கி பார்வையாளர்களை இசையால் கட்டிப்போட்டார்.
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிப்பாள்.
இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.
இன்று…
ஏழாம் நாள் விழாவான இன்று (அக்டோபர் 16) ஸ்ரீமதி ரம்யா அவர்களின் நாட்டுப்புற இசைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது
நாளை...
எட்டாம் நாள் விழாவான நாளை (அக்டோபர் 17) ஸ்ரீமதி மீரா சிவராமக்கிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைநிகழ்ச்சி அரங்கேறவுள்ளது. மாலை 5:30 மணிக்கு லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி பூஜையின் நேரலை ஒளிபரப்பில் இணைந்து தேவியின் அருள் பெறுங்கள்!
மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !