சத்குரு பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம்… நோக்கம் என்ன?!
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில், சத்குருவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதியதொரு மருத்துவ ஆராய்ச்சி மையம் குறித்தும், இந்த ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் குறித்தும் தொடர்ந்து படியுங்கள்.
உலகப் புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center - BIDMC) சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
'Sadhguru Center for a Conscious Planet' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது. பெத் இஸ்ரேல் மையமானது ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்துவரும் தன்னார்வலர்களைக் கொண்டு, தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பிரத்யேக மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து (Medical and Contemplative sciences) எங்களுடைய நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய உள்ளோம். சத்குருவின் பெயரில் இம்மையத்தை தொடங்கி இருப்பதை பெருமையாக கருதுகிறோம்” என தெரிவித்தார்.
மனித விழிப்புணர்வை மேம்படுத்தி விழிப்புணர்வான உலகை படைக்க விரும்பும் சத்குருவின் ‘Conscious Planet' என்ற முன்னெடுப்புக்கு இம்மையம் உறுதுணையாக இருக்கும்.
பாராட்டுகள். விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணைக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவை ஆராயும் இந்த படி, மருத்துவ அறிவியலில் பெரும் மாற்றத்திற்கு வித்திடக்கூடியது. வரும் வருடங்களில் சாதனைகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள். -Sg @BIDMChealth @BIDMCAnesthesia @harvardmed https://t.co/uUV6Iq9VFN
— IshaFoundation Tamil (@IshaTamil) November 28, 2020
அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் @SadhguruJV https://t.co/IMMKLhhVZu
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 28, 2020
Subscribe