தேவாரம் என்பது 1200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றிய பக்திப் பாடல்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றிய சிவனைப் போற்றும் இப்பாடல்கள், தென்னிந்தியாவில் அப்போது பரவிய பக்தி இயக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றன. பெரும்பாலான பாரம்பரிய இசை முறைகளுக்கு முன் தோன்றிய தொன்மையான இசையமைப்பில் இப்பாடல்கள் பாடப்பட்டன. பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் இப்பாடல்களை, இந்த தேவாரப் பாடல்களை, இன்றைய உலகிற்கு ஓர் அர்ப்பணிப்பாக, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பாடியுள்ளார்கள். திருநீறு அல்லது விபூதி, எப்போதுமே நம் கலாச்சாரத்தில் போற்றப்பட்டது. ஒருநாள் நாம் இறப்போம் என்பதை நினைவூட்டுவது அதன் மகத்துவத்தைக் கூட்டுகிறது. பாரம்பரிய முறையில் மயானத்தின் சாம்பல் கொண்டு செய்யப்படும் திருநீறு, ஒருவரை அவருக்குள் உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் கொண்டதாகும். சம்பந்தர், "மந்திர மாவது நீறு" என திருநீற்றின் பல்வேறு நற்குணங்களைப் போற்றும் பாடலைப் பாடியபடியே, திருநீற்றை பூசி ஒரு அரசரின் மர்ம நோயையும் கூனையும் குணப்படுத்தினார் திருஞானசம்பந்தர் ஒரு இளம் துறவியாவார். இவர் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலயோகி. அவர் குழந்தையாக இருந்ததால் எதையும் போதிக்கமுடியவில்லை, எனவே தன் ஞானத்தை அழகிய பாடல்களாக வெளிப்படுத்தினார்.
Subscribe