Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
உங்கள் மனிதத்தன்மை பெருக்கெடுத்து ஓடினால், தெய்வீகம் இறங்கியே ஆகவேண்டும்.
கடவுளோ அல்லது மற்றொருவரோ உங்களை நேசிக்கிறாரா என்பது விஷயமல்ல. நீங்கள் அன்பின் உருவமாக இருந்தால், அது உங்கள் வாழ்வை மிக மிக இனிமையாக்கிவிடும்.
கோபம் என்பது செயல் அல்ல - அது எதிர்செயல். எதிர்செயல் செய்யும் நிலை அடிமைத்தனத்தின் நிலை.
அதிகம் நிலைத்திருக்கக்கூடிய சக்தி என்றால் அது உள்ளே இருக்கும் சக்தியை உணர்வதுதான்.
ஆன்மீகப் பாதையில் நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம், நீங்கள் அனுபவப்பூர்வமாக இப்போது எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுணர்வதுதான். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்துதான் உங்கள் பயணத்தைத் துவங்கமுடியும்.
நாம் அனைவரும் மாறுவதற்குத் தயாராக இல்லாவிட்டால், உலகில் எதுவும் மாறாது.
யோகா என்றால் ஒன்றியிருப்பது; அதாவது, உங்கள் அனுபவத்தில், நீங்களும் இந்த பிரபஞ்சமும் ஒன்றாக இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதுவும் உங்களுக்கு வளம்சேர்க்க முடியும், அதற்கு அதை நீங்கள் ஒருவித விழிப்புணர்வுடன் கையாண்டால் போதும்.
ஆனந்தம்தான் வாழ்க்கைக்கான உச்சபட்ச உத்தரவாதம்.
உங்கள் உணர்திறன் ஐம்புலன்களின் எல்லைகளைக் கடந்தால், நீங்கள் ஆன்மீகமாக இருக்கிறீர்கள்.
நீங்கள் ஆனந்தத்தின் ஆதாரமாக மாறினால், உங்கள் உறவுகள் அற்புதமாக அமையும்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி, கடந்த சில ஆண்டுகளில் விழிப்புணர்வின் மாபெரும் விழாவாக உருவெடுத்துள்ளது. உள்முகமாகத் திரும்புவதால் மட்டும்தான் அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தம் நிறைந்த உலகினை நம்மால் உருவாக்க முடியும். நாம் இதனை நிகழச்செய்வோம்.