Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
Clear All
யோகா என்பது ஓயாத சக்தியின் மூலத்தோடு நாம் இணைந்து கொள்வதை பற்றியது.
உங்கள் உயிரை எடுப்பது நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் அல்ல, கவனமற்ற எண்ண ஓட்டத்தில், உணர்ச்சி வசத்தில் நீங்கள் இருப்பதுதான்.
ஒரு தொல்லை என்பது தொல்லையாக இருப்பது, உங்களை நீங்கள் அதற்கு தயார்படுத்திக்கொள்ளாத போதுதான். உள்நிலையில் தேவையான செயலை நீங்கள் செய்யும்போது, அதுவே ஒரு படிக்கல்லாக மாறிவிடும்.
மனிதர்கள் புத்தியில் எந்தத் தெளிவும் இல்லாமலேயே உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இது பெருங்கேடுதான்.
தாய்மையின் அழகு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வதில் அல்ல, இன்னொரு உயிரை தனக்குள் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளும் அந்த விருப்பத்தில்தான் இருக்கிறது.
நல்லது என்பது நாமாக நினைத்துக்கொள்ளும் ஒரு நிலை. மகிழ்ச்சி என்பது உண்மையான ஒரு அனுபவம்.
பிரபஞ்சத்தின் வேறு பகுதியிலிருந்து பூமியைப் பார்த்தால், நாம் எல்லோருமே வானுலக உயிர்கள்தான்.
இந்த நன்னாளில், கௌதம புத்தர் 'உண்மையை நோக்கிப் போவது' என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார். நீங்கள் திறந்த நிலையில் இருந்தால், அது இங்கேயேதான் இருக்கிறது.
உடலும் மனமும் அதிசயமான கருவிகள். ஆனால் அவை மகத்தான விதத்தில் செயல்பட, அதை சரியான விதத்தில் கையாள நீங்கள் கற்றுக்கொள்வது அவசியம்.
மனிதனின் வாழ்க்கை வெறுமனே பிழைத்து இருப்பதுடன் முடிந்து போவதில்லை. பிழைப்பிற்கான தேவைகள் பூர்த்தியான பிறகுதான் மனித வாழ்க்கையே ஆரம்பம் ஆகிறது.
அன்பு என்பது ஒரு கொடுக்கல்-வாங்கல் அல்ல. அது உங்களுக்குள் நிகழும் ஒரு அழகான நிகழ்வு. அதன் வெளிப்பாடு வேண்டுமானால் வெளியில் தெரியலாம், ஆனால் அன்பு உங்களுக்குள்ளிருந்து உருவாவதுதான்.
எவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் முழு சந்தோஷத்துடன், மனிதத் தன்மை பொங்கும் விதத்தில் இருந்தால், எல்லோருடனும் சுமுகமாகவே இருப்பீர்கள்.