Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
Clear All
நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கொண்டு வெறும் பிழைப்பை மட்டும்தான் நடத்த முடியும். நாம் எதை கொடுக்கிறோம் என்பதை கொண்டுதான் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.
நீங்கள் ஒன்றும் சந்தோஷத்தை உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் துன்பத்தைக் கண்டுபிடிக்காமல் இருந்தாலே, சந்தோஷமாகத்தான் இருப்பீர்கள்.
திருமணம் என்பதை நிறுவப்பட்ட ஒரு கட்டமைப்பாகப் பார்த்தால், அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனிதர்கள் தவிப்பது இயல்புதான்.
உங்களுக்குள் நீங்கள் நலமாக இருப்பதை கடவுளே கூட தீர்மானிக்க முடியாது. எனக்கு நானே துன்பம் உருவாக்கிக்கொள்ள மாட்டேன் என்று இருந்துவிட்டால், பிறகு எவராலும் நமக்குத் துன்பம் ஏற்படுத்த முடியாது.
நீங்கள் தனிமையாக உணர்வது, தனியாக இருப்பதால் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விலக்குவதால்தான் தனிமையாக உணர்கிறீர்கள்.
வியாபாரம் என்பது மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. வியாபாரம் நன்றாக இருப்பதற்காக ஒன்றும் மனிதர்கள் உருவாக்கப்படவில்லை.
உறுதியான நம்பிக்கையும், முட்டாள்தனமும் ஒன்றாக இருப்பது மிகவும் ஆபத்தான காம்பினேஷன். ஆனால், பெரும்பாலும் இரண்டும் சேர்ந்துதான் இருக்கிறது.
உங்கள் ஞாபகங்களை அல்லது கற்பனைகளை நினைத்து நீங்கள் துன்பப்படும்போது, இப்போது இங்கே இல்லவே இல்லாத ஒன்றைத்தான் துன்பமாக அனுபவிக்கிறீர்கள்.
யோகா என்பது அதிசய மனிதராக ஆவது பற்றியதல்ல. இது, மனித உயிராக இருப்பதே அதிசயமானது என்பதை உணர்ந்துகொள்வது.
உச்சமான சாத்தியத்தை அடையும் முயற்சியில் வாழ்க்கையை வாழ்ந்தால், அந்த முனைப்பிலேயே விடுதலை இருக்கிறது.
அமைதியும் சந்தோஷமும் வாழ்க்கையின் முடிவில் அடையும் விஷயங்கள் அல்ல. வாழ்க்கையின் அடிப்படையே அதுதான்.
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் இருப்பதன் அர்த்தமே அதுதான்.