FILTERS:
SORT BY:
Clear All
நீங்கள் உயிரோட்டமாக இருந்தால், நான் எப்போதுமே இருக்கிறேன் – உங்கள் வாழ்நாள் முழுவதும், அதற்கு அப்பாற்பட்டும். என் உடலை விட்ட பிறகும், நான் இருப்பேன்.
புதிய சூழ்நிலைகள் உருவாகும்போது – அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் – அதை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் எதிர்ப்பு குறையும்போது, இன்னும் திறம்படவும், துரிதமாகவும் செயல்படுபவராக மாறுவீர்கள்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது யாருடனும் நீங்கள் மோதலில் இல்லை, மிகவும் அற்புதமான விஷயங்களை செய்கிறீர்கள்.
அன்பு என்பது உங்களுக்கு புத்தியை கொடுக்காது, சரியான நோக்கத்தை உங்களுக்கு தந்திடும், அவ்வளவுதான்.
கல்வியில் ஊக்கம் என்பது அவசியம், வெறும் தகவல் மட்டும் போதாது. ஊக்கம் கொண்ட மனிதர்களால் மட்டுமே தங்கள் வாழ்வையும், சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும்.
வளம் என்பது கார், வீடு, உடைகள் பற்றியது அல்ல. உண்மையான வளம் என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, அன்பாக, பேரானந்தமாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது.
சுவாசமும், இதயத் துடிப்பும் உடலுக்கு இன்றியமையாதது. தியானத் தன்மையில் இருப்பது மனித உயிருக்கு இன்றியமையாதது.
யோகா என்றால் சங்கமம். யோகா என்றால் ஆற்றலின் உச்சம் என்றும் அர்த்தம். அனைத்துடனும் ஒன்றி இருக்கும்போது, அதில் மகத்தான ஆற்றல் உள்ளது.
வாழ்க்கை என்பது அதன் குறிக்கோளில் அல்ல. வாழ்க்கை என்பது அதன் நிகழ்வில் இருக்கிறது – இந்தக் கணத்தில் அதை உங்களுக்குள் எந்த விதமாக உணர்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
உங்கள் கனவுகள் நிஜமாகாமல் போகட்டும், உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகட்டும் – ஏனென்றால், இவை உங்களுக்குத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்தவைதான். இதற்கு முன் ஒருபோதும் தொடப்படாத சாத்தியங்களை நீங்கள் ஆராய்ந்து உணருங்கள்.
இன்று முதல், எந்த ஒன்றிலும் ஆர்வம் இல்லாமல் இழுத்தடிக்க வேண்டாம் - நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், என்ன நிகழ்ந்து கொண்டிருந்தாலும் - வாழ்க்கையை ஒரு ஆட்டத்தை போல ஈடுபட்டு வாழுங்கள்.
பொங்கல் பண்டிகை - நம் வாழ்க்கையை வளமாக்கும் மண், விலங்குகள், மக்கள், காற்று, நீர் என அனைத்தையும் கொண்டாடும் ஒரு விழா - கொண்டாடி மகிழ்வோம்!