Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
மனித உடல் போல் ஒரு மகத்தான இரசாயனத் தொழிற்சாலை உலகில் வேறு இல்லை. நீங்கள் நல்ல நிர்வாகியாக இருந்தால் அதில் ஆனந்தம் எனும் இரசாயன நிகழ்வை உருவாக்கலாம்.
தமஸ், ரஜஸ், சத்வம் - படைப்பின் இந்த அடிப்படை குணங்களை வெல்வதைப் பற்றியதே விஜயதசமி. இந்த நன்னாள் உங்களுக்கு வெற்றித் திருநாளாக அமையட்டும்!
அன்பு இன்னொருவரைப் பற்றியது அல்ல. அன்பு என்பது செய்யப்படும் ஒன்று அல்ல. அன்பு - நீங்கள் இருக்கும் நிலை.
விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம். பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல. விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும்.
நாம் இங்கு இருப்பதே மிகக் குறுகிய காலத்திற்குதான்.இதில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, அதை மேலும் குறைத்துக்கொள்ள வேண்டாமே!
உடல், மனம் உட்பட - நீங்கள் உபயோகிக்கும் கருவிகளை வணக்கத்துடன் நடத்தினால் - ஒவ்வொரு செயலும் சந்தோஷமானதாக, பயனளிப்பதாக இருக்கும்.
தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி.தன் திறனுக்கும், ஆற்றலுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்.
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது.
வாழ்வதைத் தவிர, செய்வதற்கு வேறொன்றும் இங்கு இல்லை. நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு - மேலோட்டமாக வாழ்ந்து போவதா, அல்லது, ஆழமாக உணர்ந்து வாழ்வதா, இவ்வளவுதான்.
பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற தேவையே இல்லாமல் போனவர்தான் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பவர்.
உடலும் மனமும் ஆழமாக இணைந்துள்ளன. உடல் அசைவற்ற தன்மைக்கு வரும்போது, மனமும் இயல்பாகவே பின்தொடரும்.
மனிதராக இருப்பது என்றால் - இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி, நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது.