Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
மனிதர்களுக்கு தங்களின் பைத்தியத்தை மறைத்துக்கொள்ளவே பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. முழு சமநிலையில் இருந்தால், சும்மா உட்கார்ந்தபடி ஒரு பூ மலர்வதை கூட அவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
எதையும் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். வாழ்வின் அர்த்தத்தை தேடிப்பார்க்க வேண்டாம். கடவுளை தேடிப்பார்க்க வேண்டாம். உள்ளதை உள்ளபடி பாருங்கள் - அவ்வளவுதான்.
இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு.உங்களுக்குள் இருக்கும் வெளிச்சம் பரவட்டும்,நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிரட்டும்!இந்த தீபாவளி உங்களுக்கு ஒளிமயமாக ஜொலிக்கட்டும்!அன்பும் அருளும்,
உடலின், மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டு உங்களை நீங்கள் முழுமையாக உணரும்போது, பயம் என்பது இல்லாமல் போய்விடும்.
ஆன்மீகத்தின் அடிப்படை, நம்முடைய யூகங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்வது - 'எனக்கு எது தெரியுமோ, அது தெரியும். எனக்கு எது தெரியாதோ, அது தெரியாது.'
இன்றைய உலகை பொருத்தவரை, பொய்கள் நடுநாயகம் ஆகிவிட்டன, உண்மை முக்கியமற்றதாக ஓரம் தள்ளப்பட்டுள்ளது. இந்த தலைகீழான நிலையை மாற்றியமைக்கும் நேரமிது.
வெற்றி-தோல்வி, ஆரோக்கியம்-நலக்குறைவு, வாழ்க்கை-மரணம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட விதத்தில், ஒருவருக்கு ஒருவர் கூடவே நிலைத்து இருப்பது - இதுதான் உங்களை ஒரு குடும்பமாக வைக்கிறது.
உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ற அடிப்படையில் உலகத்தை பிரித்துப் பார்க்கும்போது, உண்மையை உணர திறனற்றவர் ஆகிறீர்கள்.
முற்றிலும் சரியானவராக இருக்க வேண்டியதில்லை. நாம் இப்போது இருப்பதை விட மேலானவராக மாறும் முயற்சியில் தொடர்ந்து இருப்பதுதான் முக்கியம்.
இனிப்புகள் மீது உள்ள ஆசையுடன் போராடாதீர்கள் - நீங்களே இனிமையாக மாறிவிட்டால், இனிப்புகளின் ஈர்ப்பு தானாகவே மறையும்.
நான் தனிநபர் என்ற உணர்வை இயற்கை உங்களுக்கு தந்திருக்கிறது என்றாலும், உயிர் தனித்தனியாக நிகழ்வதில்லை. அது அனைத்தின் ஐக்கியமாகவே நிகழ்கிறது.
ஒரு சூழ்நிலைக்கு கட்டாயமான விதத்தில் எதிர்செயல் செய்யும்போதுதான், அங்கு மனஅழுத்தம் உருவாகிறது.