Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
சுலபமோ கடினமோ - நீங்கள் எங்கே சென்றடைய வேண்டும் என்பதிலிருந்து ஒருபோதும் உங்கள் கவனத்தை தவறவிடாதீர்கள்.
கட்டுப்படுத்துவது என்றால் ஏதோ ஒன்றை, ஓர் எல்லைக்குள் பிடித்து வைப்பது. உங்கள் மனத்தை கட்டுப்படுத்த வேண்டாம் - அதை விடுபட செய்யுங்கள்.
இன்னொருவர் என்ன செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள் இல்லாதபோது, உங்கள் உறவுநிலை வெற்றிகரமாக இருக்கும்.
நான் நேசிக்கப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லாமல், அனைவரின் மீதும் நேசத்தை பொழிய முடிந்தால் - அதுதான் சுதந்திரம்.
கர்மா நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. உடம்புடன் உங்களை ஒட்ட வைக்கும் பசை - அதுதான் கர்மா. உங்கள் கர்மா மொத்தத்தையும் கரைத்துவிட்டால், அந்தக் கணமே உடலை விட்டுவிடுவீர்கள்.
உண்மையான பேரன்பு, கொடுத்து திரும்ப பெறுவதைப் பற்றியது அல்ல. என்ன தேவையோ அதை செய்வது.
வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாததால்தான் சலிப்பு வருகிறது. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் - அதற்குள்ளேயே நீங்கள் தொலைந்து போய்விடுகிறீர்கள்.
உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொள்கிறீர்கள், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், இதற்கு உயிர்நிலையில் எந்த ஒரு முக்கியத்துவமும் கிடையாது.
உங்கள் குழந்தை நன்கு வளர, நீங்கள் ஒன்றும் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை. அன்பாக, ஆனந்தமாக, நேர்மையாக இருந்தால் போதும்.
நீங்கள் மற்ற எல்லோரையும் விட சிறந்தவராக இருக்க வேண்டியதில்லை. அதேசமயம், உங்களின் ஆகச்சிறந்த நிலையில் இருப்பது அவசியம்.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலையில் எவ்வளவு தீவிரமான பிரச்சனை இருந்தாலும், உங்களையே ஒரு பிரச்சனையாக ஆக்கிவிட வேண்டாம்.
கற்றுக்கொடுத்தல் ஒரு தொழிலாக இருக்கக்கூடாது - அது ஆழமான ஆர்வமாக இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இல்லாமல், உண்மைக்கான தேடலாக மாறும்.