Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
உங்களைச் சுற்றியுள்ள மக்களை, அவர்களிடம் பார்த்த சிறந்த பண்புகளுக்கு அங்கீகரியுங்கள். மோசமானவற்றை விடுத்து சிறந்தவற்றை அங்கீகரிக்கும் போது, ஒவ்வொருவரிடமும் சிறந்தவற்றையே நீங்கள் தூண்டி, வளர்த்து, பெற்றுக்கொள்வீர்கள்.
எந்த அளவுக்கு நீங்கள் பாதுகாப்பைத் தேடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் கலக்கமடைவீர்கள்.
உங்கள் தியானம் உங்களைப் பற்றியது மட்டுமல்ல, நீங்கள் உண்மையாகவே தியானத்தன்மையாக மாறினால், ஏனென்று தெரியாமலே, உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் அமைதியாக ஆகிவிடும்.
தன்னம்பிக்கை என்பது எந்தவகையிலும் தெளிவிற்கான மாற்றாகாது. வெற்றிகரமாக இருக்க உங்களுக்குத் தேவை தெளிவு, தன்னம்பிக்கை அல்ல.
வாழ்க்கை ஒரு பந்தயமல்ல, அது ஒரு பிரம்மாண்டம்.
பாதைதான் சேருமிடம், சேருமிடம் பாதையில் ஒளிந்திருக்கிறது, படைத்தவன் படைப்பில் ஒளிந்திருப்பதைப் போல.
சந்தேகத்துடன், எல்லோரும் உங்களுக்குத் தீங்கு செய்யக் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடனேயே எப்போதும் வாழ்ந்தால், வாழ்க்கையில் மிகச்சிறிய செயல்களை மட்டுமே செய்வீர்கள். நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
ஒரே சக்தி பலகோடி விதங்களில் வியாபித்திருக்கிறது - கல்லாக, மரமாக, விலங்காக, மனிதராக, அல்லது மிக சூட்சுமமான வடிவில் தெய்வீகமாக!
ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு வாய்ப்புதான். நீங்கள் ஒன்று நல்வாழ்வை அறுவடை செய்வீர்கள், அல்லது துன்பத்தை அறுவடை செய்வீர்கள் - அது உங்கள் தேர்வு.
உங்கள் அன்பை, மகிழ்ச்சியை, உற்சாகத்தை அடக்கி வைக்காதீர்கள். நீங்கள் கொடுப்பதே உங்கள் பண்பாக மாறும், அடக்கி வைப்பது அல்ல.
நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு தூசி மட்டுமே. உங்கள் இருப்பு எத்தகையது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், இயற்கையாகவே மௌனமாவீர்கள்.
வாழ்க்கை என்பது உங்களைச் சுற்றி நிகழும் நாடகமல்ல, வாழ்க்கை என்பது 'நீங்கள்' எனும் அந்த அடிப்படையான பரிமாணம்.