Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
Clear All
உங்கள் லாஜிக்கை கடந்து போவது விடுதலையாக இருக்கும். அதே சமயம், அந்த தன்மையை கைவிடுவது முட்டாள்தனம் ஆகும்.
சுற்றி இருப்பவர்களை அடிமைப்படுத்த பார்க்காதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருக்கிறார்கள். இந்த ஒரே ஒரு உயிரை மட்டும் – உங்களை மட்டும் – உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
யாராலும் உங்கள் மனத்தில் வலியை உருவாக்க முடியாது. அது நீங்கள்தான் – உங்களைச் சுற்றி நடக்கும் விஷயத்திற்கு எதிர்ச்செயலாக நீங்கள்தான் அதை உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
உயிர் இதமான இயல்பு நிலையில்தான் இருக்கிறது. மனம் மட்டும்தான் அழுத்தத்தில் இருக்கிறது.
உங்களுக்குள் பயத்தை உருவாக்கிக்கொள்ள, இன்னும் நடக்காத ஒன்றை நீங்கள் கற்பனை செய்தாக வேண்டும். பயம் என்பதே இல்லாமல் இருக்க, எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மிகமிக முக்கியமானது, மற்றவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதல்ல, நீங்கள் அன்பானவராக இருக்கிறீர்கள் என்பதுதான்.
நீங்கள் பிணைக்கப்பட்டிருப்பது, உங்களுக்குப் பிடித்தமான அல்லது நேசமானவர்களுடன் மட்டுமல்ல. அதைவிட ஆழமாக, உங்களுக்குப் பிடிக்காதவர்கள், நீங்கள் வெறுக்கும் மனிதர்களுடன் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்.
வயது அதிகமாகும்போது, உங்கள் உடலின் வேகம் குறைந்து போகலாம். ஆனால், உங்கள் உயிரோட்டம் குறைய வேண்டியதில்லை.
குரு உங்களுக்குள் இருளை நீக்குகிறார். உங்களுக்குள் எரிந்து கொண்டிருப்பவர் அவர். இந்த சுடரில் நீங்களும் எரிந்து, உங்களை பிடித்து வைத்திருக்கும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு போவீர்களாக!
முழு தெளிவு இருக்கும்போது தைரியம் தேவையில்லை. தெளிவே உங்களை கரை சேர்த்துவிடும்.
நாம் அனைவருமே ஞானத்துடன்தான் பிறக்கிறோம். அறியாமையில் இருப்பது நாமாக தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம். நேற்று இருந்ததை விட இன்று ஒரு படி மேலானவராக இருக்கிறோமா என்று மட்டும் பாருங்கள்.