ஞாபகப் பதிவு, விழிப்புணர்வு, மற்றும் கோமா நிலை
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பிரபல மருத்துவ அறிவியல் அறிஞர்களுடன் சமீபத்தில் தான் கலந்துகொண்ட "ஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை" என்ற தலைப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலிருந்து ஒரு வீடியோ பதிவை நம்முடன் சத்குரு பகிர்கிறார். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் செண்டர்ஸ் தியேட்டரில் கடந்த மே 14 அன்று நிகழ்ந்த இந்நிகழ்வின் சில புகைப்பட பதிவுகள் உங்களுக்காக!
இந்த வீடியோவில், எமெரி N.புரௌன் MD, PhD, மயக்க அறிவியல் மற்றும் மூளை நுண்அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் நிக்கோலஸ் D. சிஃப், MD, PhD, நரம்பியல் மற்றும் மூளை நுண்அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் சத்குரு ஆகியோர் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்படும்போது மனித மூளை, மனம் மற்றும் விழிப்புணர்வில் நிகழும் மாற்றங்கள் குறித்து தங்கள் பார்வையை முன்வைக்கின்றனர். குறிப்பாக, சத்குரு தன்னை உணர்ந்த ஒரு யோகியின் கோணத்திலிருந்து 'ஜாக்ரதி' என்னப்படும் கவனமிகுந்த நிலை குறித்தும், 'துரியா' என்று சொல்லப்படும் விழிப்புணர்வுநிலை குறித்தும் தனது ஆழமான பார்வையை முன்வைக்கிறார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எமெரி N.புரௌன் மற்றும் பேராசிரியர் நிக்கோலஸ் D. சிஃப் ஆகியோர் சத்குருவுடன் கலந்துரையாடலில்
இளம் பார்வையாளர்களில் ஒருவர் சத்குருவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்
இடம்: ஹார்வர்ட் பல்கலைக்கழகம் செண்ட்ரஸ் தியேட்டர்
Subscribe
செண்டர்ஸ் தியேட்டர் அதன் நுட்பமான ஒலியமைப்பிற்கு (acoustics) பெயர்பெற்றது
அனஸ்தீசியா துறை பேராசிரியர் எமெரி N.புரௌன் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் நிக்கோலஸ் D. சிஃப் ஆகியோர் தங்களது துறைகளின் சிறந்த ஆளுமைகள்
ஹார்வர்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் ஹார்வர்டு அறிவியல் சமூகத்தை பிரதிபலிப்பதாய் அமைந்தார்கள்
"ஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை" என்ற தலைப்பில் மருத்துவ அறிஞர்களும் சத்குருவும் கலந்துரையபோது...
"நாம் மூளையை மிக முக்கிய அம்சமாக பார்ப்பதில்லை, ஏனென்றால் நாம் இந்த உடல் முழுவதுமே புத்திசாலித்தனம் இருப்பதை பார்க்கிறோம்" சத்குரு
நிகழ்ச்சியில் நிபுணர்கள் பலரும் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்
வின்ஸ்டன் சர்ச்சில், தியடோர் ரூஸ்வெல்ட் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் உரையாற்றிய இடம் இது!
நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும் கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்கின்றன
உற்சாகமிகுந்த பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியின் நிறைவில் சத்குருவை சூழ்ந்தபடி....
சத்குருவிடம் ஒரு மழலையின் உரையாடல்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நினைவக கட்டிடத்தின் வெளியே அதன் பிரம்மாணடமான கலைநயமிக்க விக்டோரிய காலத்து கட்டிடக்கலையுடன்
நிகழ்ச்சி நிறைவு பெற்று நடையிடும் வேளையிலும் தொடர்கிறது உரையாடல்... பேராசிரியர் எமெரி N.புரௌன் மற்றும் சத்குரு