மொழிகள் பிரசவிக்க தவறும் எத்தனையோ அர்த்தங்களை இசை வெகு இயல்பாய் இழைத்துத் தந்துவிடும். நம் ஆழ்நிலை மனதை மாற்றிவிடும் சூழ்நிலைகளை இசை சில கணங்களில் உருவாக்கிவிடும். காலத்தை கட்டிப்போட்டு, நம் கை கால்களுக்கு தாளம் சொல்லித்தரும் ஈஷாவின் மந்திர இசை மத்தியமாவதி ராகமாக காற்றில் இங்கே தவழ்ந்து வருகிறது...

கொல்லன் கைப்பட்ட பொன்போல், புல்லாங்குழல் புகுந்து வரும் காற்றிசை கீற்று இந்தப் பாடலின் முகவரியாகிறது. முகம் காட்டாத தெய்வீகத்தை நாதரூபமாய் உருவாக்கி உங்கள் புருவங்களை உயர்த்திட வைக்கும் ஈஷாவின் இசை...

கண் மூட வைக்கும்...
உடல் ஆட வைக்கும்...
ஆனந்தம் தேட வைக்கும்...