கொரோனா பிரச்சினையால் வரலாறு காணாத வகையில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயிள்ளது. அன்றாட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தவர்கள் எல்லாம் செய்வதறியாது தவிக்கின்றனர். இத்தகைய சவாலான சூழலில், ‘உங்கள் பகுதியில் இருக்கும் ஒருவர் கூட பசி, பட்டினியால் உயிரிழக்காமல் பார்த்து கொள்ளுங்கள். அதற்காக, உங்களால் இயன்றதை செய்யுங்கள்’ என்று ஈஷா தன்னார்வலர்களுக்கு சத்குரு ஆரம்பித்திலேயே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் வெறும் வார்த்தையோடு நின்றுவிடாமல், ஈஷா பிரம்மச்சாரிகள், தன்னார்வலர்கள் அடங்கிய ஒரு குழுவையே இதற்காக சுற்றுவட்டார கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த குழு கடந்த 50 நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி வருகிறது. அவர்களின் சேவையை சுவாரஸ்மாக சொல்லும் ‘Making video’ இதோ உங்களுக்காக…

ஈஷாவின் முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய: Isha.co/BeatTheVirus