பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

பம்பரம்

இந்த சருகுகள் என்னுடையது
இந்த நீல வானமும் என்னுடையது
ஏனெனில் மற்ற அனைத்தையும் கைப்பற்றிவிட்டார்கள்
மனிதர்கள் தங்கள் இருப்பிலுள்ள குறையால்
கண்ணில் படும் அனைத்தையும் தன்னகப்படுத்துகின்றனர்.
நிலம், மண், நீர், மக்கள்,
நிலவின் சில பகுதிகளைக்கூட சொந்தமாக்குகின்றனர்.

நிலவின் நிலப்பரப்பில் பாகப்பிரிவினை நடக்கிறது,
இது நிலவால் அதிகமாகும் பைத்தியமின்றி வேறில்லை.
சொந்தமாக இருக்கவும் சொந்தமாக்கவுமான ஏக்கத்தில்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
இந்த குறுகிய வாழ்க்கை
பித்துப்பிடித்தது போல் பம்பரமாக சுழல்கிறது

- சத்குரு
பகிருங்கள்