ஒரு நதி கடல்நோக்கிப்
பாய்வதுபோல தனியொருவர் தெரியாமலே
பிரபஞ்சமயமானதை நோக்கி உருண்டோடுகிறார்.
உடலால் கட்டுண்டிருக்கும் அனைத்தும்
எல்லையற்றதை நோக்கி ஓடுகிறது
ஒரு நீர்நாய் நதியை நிறுத்தமுடியாதது
போலவே, உங்கள் அறியாமையால்
எல்லையுற்றிருக்கும் தன்மையிலிருந்து
தன் எல்லையற்ற தன்மை நோக்கிய
உயிரின் ஓட்டத்தைத் தடுக்கமுடியாது.
கேள்வி, நீங்கள் அடைவீர்களா மாட்டீர்களா
என்பதல்ல, எப்போது எப்படி என்பதே.
மலையிலிருந்து இறங்கும் ஆற்றின் வேகமும்
ஒருமுனைப்பும் உங்களுக்கு இருந்தால்
கடல் என்றும் வெகுதொலைவில் இல்லை
- சத்குரு