தேவையான பொருட்கள்
அவியலுக்கு:
2 முருங்கைக்காய்
1 வாழைக்காய்
1 கைப்பிடி பீன்ஸ்
2 கேரட்
1 சின்ன மாங்காய்
1 உருளைக்கிழங்கு
100 கிராம் சேனைக்கிழங்கு
1 கப் தேங்காய் துருவல்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் சீரகம்
உப்பு தேவையான அளவு
1 மேஜைக்கரண்டி புளித்த தயிர்
சிறிதளவு கறிவேப்பிலை
1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு
2 காய்ந்த சிவப்பு மிளகாய்
சாதத்திற்கு
1 கப் சிவப்பு அரிசி
1 மேஜைக்கரண்டி நெய்
1 தேக்கரண்டி உப்பு
செய்முறை
- சாதத்திற்கு:
- 1. கெட்டியான பாத்திரத்தில் 2½ கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
- 2. அரிசியை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.
- 3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரிசி, நெய் மற்றும் உப்பினை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பாத்திரத்தை மூடி வைக்கவும், சாதம் வேகும் வரை தோராயமாக 30-40 நிமிடத்திற்கு வேக விடவும்.
- 4. இறக்கி வைத்து மூடியை திறந்து, சாதத்தை நன்றாக கிளறிய பிறகு திரும்பவும் மூடவும். ஒரு 5 நிமிடத்திற்கு அப்படியே விடவும். திரும்பவும் சாதத்தை நன்றாக கிளறிய பிறகு பரிமாறவும்.
- அவியலுக்கு:
- 1. தேங்காய் துருவல், சீரகம், சிறிதளவு மிளகாய் தூள் ஆகியவற்றை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2. காய்கறிகள் அனைத்தையும் அலசி நீளவாக்கில் நீண்ட துண்டுகள் போல வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காய் துண்டுகளின் நிறம் மாறிவிடாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.
- 3. ஒரு வாணலியில், 1 கப் தண்ணீரை கொதிக்க விடவும். அதில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு மஞ்சளை சேர்க்கவும். மிதமான சூட்டில் 12-15 நிமிடங்கள் வைத்து காய்கள் பாதி வேகும் வரை கொதிக்க விடவும்.
- 4. பிறகு மீதியுள்ள அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து மூடிவிடவும்; மிதமான சூட்டில் காய்கறிகள் ஓரளவுக்கு வேகும் வரை, இடையிடையே கிளறிவிட்ட படி வேகவிடவும்.
- 5. தேங்காய் மசியலை சேர்க்கவும்.
- 6. மேலும் ஒரு 5-7 நிமிடத்திற்கு அல்லது காய்கறிகள் நன்றாக அதே சமயம் குழைந்துவிடாத வரை வேகவிடவும். இது உலர்ந்தது போல தெரிந்தால் சிறிது வெந்நீரை சேர்க்கலாம். அடுப்பை அணைத்து விடவும்.
- 7. புளித்த தயிரை மிருதுவாக வரும் வரை அடிக்கவும். அதை காய்கறிகளுடன் சேர்த்து மென்மையாக அதே சமயம் நன்றாக கிளறவும். மிதமான தீயில் ஒரு நிமிடம் வைக்கவும்.
- 8. இதில் ஒரு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
- 9. தாளிதத்திற்கு, ஒரு சின்ன வாணலி அல்லது தாளிதக் கரண்டியில் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சூடு செய்யவும். அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்துக்கவும்.
- 10. இந்த தாளிதத்தை அவியலில் ஊற்றி நன்றாக கலந்துவிட்ட பிறகு பரிமாறவும்.