செப்டம்பரில் வெளிவர இருக்கும் சத்குருவின் கவிதை தொகுப்பு புத்தகம் (ஆங்கிலத்தில்)

Eternal Echoes: A Book of Poems, 1994–2021

வரும் செப்டம்பர் 23 அன்று ஈஷா மக்களுக்கு ஒரு சிறப்பான விருந்து காத்திருக்கிறது. சத்குரு தன்னுடைய 'Eternal Echoes: A Book of Poems, 1994-2021' எனும் புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த புத்தகத்தை Penguin Random House, India பதிப்பிக்கிறது. தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் அனுமானித்திருப்பதைப் போலவே, இந்த புத்தகம் 30 வருடங்களாக ஈஷா தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை சத்குரு இயற்றிய கவிதைகளின் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. வாசகர்கள் குறைந்தது 600 கவிதைகள் வரை இதில் எதிர்பார்க்கலாம் (1996 முதல் ஈஷா காட்டுப்பூ இதழின் ஆங்கில பதிப்பான Isha Forest Flower ல் வெளியான கவிதைகளும் இதில் அடங்கும்).

இந்த புத்தகம், "யோகா" மற்றும் "இயற்கை" முதல் "மெய்ஞானம்" மற்றும் "மக்களும் இடங்களும்" என பல்வேறு தலைப்புகளிலும் தொகுக்கப்பட்டு, உயிர் குறித்த சத்குருவின் ஞானத்தின் முழு எல்லையையும் வார்த்தைகளில் வடிப்பதாக இருக்கிறது. நுணுக்கமான விளக்கப்படங்கள், செறிவான குறியீடுகள் மற்றும் கருநீல அட்டையின் பின்னணியில் தங்க நிறத்தில் எழுத்துகள் அழகாக பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் என்றும் ஒரு பொக்கிஷமாகவே விளங்கும்.

புத்தகம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம் இதோ...

இதன் அறிமுக உரையில் சத்குரு இவ்வாறு எழுதியுள்ளார், "கவிதை என்பது ஒருவரின் இதயத்தின் ஒரு பகுதி. இந்த கவிதைகளோடு உங்கள் இதயமும் இணைந்து துடித்து, என் இதயத்தின் தாளலயத்தை உணரும் என்று நம்புகிறேன்."

உங்கள் பிரதிக்கு இப்போது ஆர்டர் செய்யுங்கள்