கவிதை

மழைக்குப்பின் மயானங்கள்

மலைகளில் பனி படர்ந்திருக்க
கர்ஜிக்கும் ஆறுகள் காலத்தில் உறைந்திட

எரியும் உடல்களின் நெருப்புக் கீற்றுகள்
வானில் கோலங்களிட

வானுலகுக்குக் கீழ் சிந்தனையில் ஆழ்ந்து
கரையோரமாய் நிற்கிறேன்

குருநாதா, நாளை இறக்கப்போவது போல
இன்றை நான் வாழ்ந்திட அருள்வாய்