தேவையான பொருட்கள்
1 பெரிய பரங்கிக்காய்
4 டேபுள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்
1 சிறிய துண்டு இஞ்சி
1 டீஸ்பூன் பொடித்த தனியா
1 டீஸ்பூன் பொடித்த சீரகம்
1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர்
1-2 டேபுள்ஸ்பூன் மேப்பிள் சிரப் அல்லது வெல்லம்
(சுவைக்கேற்ப)
1 கப் தேங்காய் பால் அல்லது கெட்டியான க்ரீம்
உப்பு மற்றும் மிளகு தூள் (தேவைக்கேற்ப)
அலங்கரிக்க:
¼ கப் பச்சை பரங்கிக்காய் விதைகள்
புதிய க்ரீம்
1 கைப்பிடி கொத்தமல்லி இலை
செய்முறை:
- பரங்கிக்காயை வெட்டி, அதன் விதைகளை எடுத்துவிட்டு, தோலினை நீக்கவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு சிறு துண்டு இஞ்சியை தோலினை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும்.
- காய்கறி வேகவைத்து தண்ணியை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- துருவிய இஞ்சியை ½ டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் வதக்கி தனியாக வைக்கவும்.
- மீதமுள்ள ஆலிவ் ஆயிலை ஒரு கனமான வாணலியில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் துண்டுகளை அதில் போட்டு ஒரு 5 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
- இதில் தனியா, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து இன்னும் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- காய்கறி தண்ணியை விட்டு, மேப்பிள் சிரப் அல்லது வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பரங்கிக்காய் நன்றாக வேகும் வரைக்கும் அல்லது ஒரு 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
- தீயிலிருந்து எடுத்து, அதனை ஆற வைக்கவும்.
- பிறகு அதனை ஒரு ப்லெண்டரை (மத்து) உபயோகித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- தேங்காய் பால் அல்லது க்ரீமை சேர்த்து கலக்கவும். தேவைக்கேற்ப மிளகும், உப்பும் சேர்க்கவும்.
- திரும்பவும் ஒருமுறை, மிதமான சூட்டில், அவ்வப்போது கிளறி, சூப்பை சூடாக்கவும்.
- ஒரு வாணலியில் பரங்கி விதைகளை நல்ல வாசனை வரும் வரை வறுத்தெடுத்து கொள்ளவும்.
- பரங்கி விதைகள், கொத்தமல்லி இலை மற்றும் க்ரீம் சேர்த்து சூப்பை அலங்கரிக்கவும். சூடாக பரிமாறவும்.