நாகா ஒரு வாழும் தெய்வம். ஒருவர் தனக்குள்ளும் வெளியுமானவற்றை புரிந்தறியவும், உணரவும் மேலும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களை அறிந்துகொள்வதற்கும் இதனை ஒரு நுழைவாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால், மனித புலன் உறுப்புகள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட இயல்பை உடையவை. நாம் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய அனைத்திற்கும் எல்லைகள் உண்டு. மேலும், அந்த எல்லைகளைக் கடந்து செல்வதற்கான ஒரு பேராவல் ஒரு மனிதருக்குள் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஒட்டுமொத்த நாகா கலாச்சாரமும் அந்தப் பேராவலிலிருந்து வந்ததுதான். இது ஒரு மதத்தில் மட்டுமோ அல்லது ஒரு இடத்தில் மட்டுமோ வளரவில்லை. உலகெங்கும், வாழ்வின் ஆழமான பரிமாணங்களை அடைவதற்கு சர்ப்பங்களைப் பயன்படுத்தாத மனிதநாகரிகம் ஒன்றுகூட இருந்ததில்லை.
உங்களுக்கான ஒரு அற்புதமான வாழ்க்கை என்பது என்ன?
உங்களது ஆயுளை மேம்படுத்துவதற்கு, செம்பு அல்லது பித்தளையாலான இந்த சர்ப்பத்தை நீங்கள் அர்ப்பணம் செய்கிறீர்கள். ஏனென்றால் வாழ்க்கை ஒரு குத்தகை. நீங்கள் குத்தகையில் இருக்கிறீர்கள். இந்த உடல் குத்தகைக்குப் பெற்றது; அது போய்விடும். உங்கள் கணவர், குழந்தைகள், வீடு, சொத்து, வங்கிக் கணக்கு - எல்லாமே குத்தகையில் உள்ளது. பொதுவாக, ஒரு அற்புதமான வாழ்க்கை குறித்த மக்களின் கருத்து என்னவென்றால், அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், வீடு, பணம் இருக்கிறது; ஒரு நாளைக்கு பலமுறை அவர்கள் சாப்பிடுகின்றனர், மற்றும் அவர்களுக்கு ஒருசில நோய்கள் இருக்கிறது, சிறிது இரத்தக்கொதிப்பு மற்றும் நீரழிவு இருக்கிறது - இதுவே அவர்களுக்கான ஒரு அற்புதமான வாழ்க்கை. ஆனால் ஒரு அற்புதமான வாழ்க்கை என்றால் என்னவென்பதை, நீங்கள் மறுவரையறை செய்யவேண்டியுள்ளது.
உங்கள் வாழ்வு நீட்டிக்கப்பட்டால், அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்னும் அதிகமான ஆடைகள், அதிக காலணிகள், அதிக கார்கள், அதிகமான வீடுகள், அதிகமான சொத்துக்களை வாங்குவீர்களா? அதிகமாக உணவு சாப்பிடுவீர்களா? அல்லது ஒருவேளை, இன்றைய நிலையில் நீங்கள் ஒரு புது மனைவி அல்லது புது கணவனை பெறுவீர்களா? நாகாவை அணுகுவதன் ஒரு முக்கியமான அம்சம், பிழைப்பு செயல்முறையை அது மிகவும் எளிமையாக்குகிறது. வாழ்வின் தரத்தை நீங்கள் உயர்த்திவிட்டால், ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் ஒரு அரண்மனையில் வாழ்ந்துகொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் அதே முட்டாள்தனமான விஷயங்களைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
நாகா ஒரு வாழும் தெய்வம். ஒருவர் தனக்குள்ளும் வெளியுமானவற்றை புரிந்தறியவும், உணரவும், வாழ்க்கையின் மற்ற அம்சங்களை அறிந்துக்கொள்வதற்கும் இதனை ஒரு நுழைவாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நீங்கள் இதை வாழ்க்கை என்று அழைக்கலாம் ஆனால் உண்மையில் இது காலம். காலமற்ற, எல்லையில்லா வெளியின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் காலம் அல்லது நேரம் என்பது. காலம் - நீங்கள் அமர்ந்தாலும், நின்றாலும் அல்லது உறங்கினாலும் - நேரம் கடந்துகொண்டே செல்கிறது. அது நிச்சயமாக உங்களது வாழ்வில் மிக மதிப்புவாய்ந்த விஷயம். உங்களுக்குக் கூடுதல் காலம் கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்? ஏனென்றால் அதே அற்பமான விஷயங்களைத்தான் என்றென்றைக்கும் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் ஆழ்ந்தபொருளுடைய அம்சம்களைக் கொண்டுவருவதில் என்ன பயன் இருக்கிறது? நமது வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான அம்சங்கள் உண்டு.