பகிர்வுகள்

ஒவ்வொருவர் வாழ்விலும் அலையென எழும் மாற்றங்கள்: ஒரு பெரும் குற்றவாளியாக கத்தி வீசிய கை, பேனா ஏந்தியது எப்படி

ரமேஷ், ஒரு முன்னாள் குற்றவாளி, யோகாவின் தன்னிலை மாற்றம் நிகழ்த்தும் ஆற்றலுக்கு உதாரணமாக விளங்குகிறார். குற்றப்பின்னணி நிறைந்த தனது வாழ்க்கையைப் புதைத்துவிட்டு, புதியதொரு அத்தியாயத்தை அவர் துவங்குவதற்கு ஈஷாவின் 'மத்திய சிறைகளில் மறுமலர்ச்சி' யோகா வகுப்புகள் உதவி செய்துள்ளது. இன்றைக்கு, அவர் சட்டத்தை மதிக்கும் ஒரு பிரஜையாகவும், கண்ணியமிக்க ஒரு எழுத்தாளராகவும் இருக்கிறார்.

சுய அடையாளம் மாறும்பொழுது, அதிசயங்கள் நிகழ்கின்றன. இந்த உண்மையை நிலைநிறுத்தும் சான்றாக, படுபாதகச் செயல்களை இழைத்தற்காக தண்டனை பெற்று, தன்னிலை மாற்றத்தின் புதிய பாதையைத் தேர்வு செய்த பலரும் வாழும் உதாரணங்களாக திகழ்கிறார்கள். குற்றவாளிகள் வாழ்வில் மாயம் செய்த ஈஷா யோகாவின் மந்திரத் தொடுதலுக்கு நன்றிகள்.

அவப்பெயருடன், சட்டத்துக்குப் புறம்பானவராக இருந்த ஒருவரிடம், தன்னிலை மாற்றம் ஏற்படுத்தி வால்மீகி முனிவராக தீட்சை வழங்கினார் நாரத முனிவர். அதைப்போன்ற ஒரு மாற்றம் ஈஷாவினால் அரங்கேறியுள்ளது. 'அண்ணா நகர் ரமேஷ்' என்றழைக்கப்பட்ட ஒரு குற்றவாளி, தனது வாழ்வின் அடித்தளத்தையே மாற்றியமைத்து, இப்பொழுது 'எழுத்தாளர் ரமேஷ்' என்று மதிப்புடன் அழைக்கப்படுகிறார். வாருங்கள், சிறையில் பூத்த மலரை சந்திப்போம்.

சிறைவாசிகளுக்குப் புத்துணர்வூட்டும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் கொண்ட சிறை அதிகாரி ஒருவர், சிறைச்சாலையில் யோகா வகுப்புகளை வழங்க முடிவு செய்தார். முதன்முதலாக 1999/2000 ஆண்டுகளில் குற்றவாளிகளுக்காக யோகா வகுப்புகளை மதுரை சிறைச்சாலையில் ஈஷா நடத்தியபொழுது, ஒரு அதிசயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதயங்கள் மற்றும் மனங்களின் சுருதியில் உருவான மாற்றங்கள்

யோகாவின் மூலமாக, குற்றவாளிகளின் இறுகிய இதயங்களில் மாற்றம் கொண்டுவருவது அப்படி ஒன்றும் எளிதானதல்ல. உதாரணத்துக்கு, ரமேஷின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். தீவிரமான உணர்ச்சிகளின் பிடியில், அவர் பல வன்முறைகள் மற்றும் சட்டத்துக்கு எதிரான செயல்கள் செய்து கைதானவர்.

ரமேஷூக்கு, அன்பின் பாடங்களை ஈஷா கொடுத்ததில், 10 நாட்களுக்குள், அந்த சிறைவாசியின் பேச்சு, செயல்கள் மற்றும் பார்வையிலும்கூட குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருந்தது. யோகா வகுப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, சிறைவாசிகளின், குறிப்பாக ரமேஷின் முன்னேற்றம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரித்த வண்ணம் இருந்தனர். ரமேஷ் பிரச்சனைக்குரியவராகக் கருதப்பட்டதால், அவரிடம் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிறை அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

அப்போது, யோகா வகுப்பின் மிக முக்கியமான கட்டங்களுள் ஒன்று - எல்லா உயிர் வடிவங்களையும் தன்னுடையதாகப் புரிந்து, தன்னில் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்வது - சிறைவாசிகளுக்குக் கற்றுத்தரப்பட்டது.

தான் மாற்றமடைந்த கதை - ரமேஷின் எழுத்தில்

வகுப்புக்குப் பிறகு ரமேஷ் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்:

அனைவரிடமும் அன்புடன் இருக்குமாறு சத்குரு கேட்டுக்கொண்டார். ஆனால், நான் ஒரு கணம் கவனம் பிசகினாலும்கூட, என்னைக் கொல்வதற்கு சிலர் தயாராக இருந்தனர். ஆகவே, இந்த அறிவுரையை நான் எப்படி பின்பற்றுவது? நான் ஒரு உறுதிமொழி எடுத்தால், அதை நான் காப்பாற்றியாக வேண்டும். எனவே நான், என்னிடம் அன்பாக இருப்பவர்களிடம் எல்லாம் நானும் அன்புடன் இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்தேன்.

யோகா வகுப்பின் அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்ளும்பொழுது, என் மனதில் நிகழ்ந்த மாற்றம் குறித்து நான் பேசினேன். அப்போது நான், “அன்புக்கு பற்றாக்குறையாக இருக்கிறது, அதனால் யோகாவுக்கு என்னையே நான் சமர்ப்பிக்கிறேன்,” என்றேன். நான் ஆச்சரியப்படும்படி, சிறைசாலையின் அதிகாரி ஒருவர் வார்த்தை பிறழாமல் நான் கூறியதை மேற்கோள் காட்டி, என் மீதான அவரது கரிசனத்தை வெளிப்படுத்தினார். அந்த நாள் வரை எனது எதிரியாக யாரைக் கருதியிருந்தேனோ, அதே அதிகாரியை நான் முதன்முதலாக அன்பு மேலிடப் பார்த்தேன். அன்றைய இரவு, எனது உறக்கம் தொலைந்தது. என் காதில் சத்குரு மென்மையாகப் பேசுவதாகவும் உணர்ந்தேன்.

அதற்குப் பிறகு, என் வாழ்க்கை அவ்வளவு ஆச்சரியகரமாக மாறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை! சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் எனது வாழ்க்கை குறித்தும், எனது அனுபவங்கள் குறித்தும் பல கவிதைகளை எழுதினேன். சிறை அதிகாரிகளிடையே நான் நல்ல பெயரையும் சம்பாதித்தேன்.

கத்தியை வீசிவிட்டு

சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்தவுடன், கோவையில் இருக்கும் ஈஷா யோக மையத்துக்கு பாவ ஸ்பந்தனா நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றேன். அடுத்து சூன்ய தியானத்திற்கான தீட்சையும் பெற்றேன். இரண்டு முறை மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதுடன், சத்குருவுடன் கைலாஷ் செல்லவும் பேராவல் கொண்டேன். நான் தினமும் யோகப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்ததால், என் மனம் இலேசானது. எனக்குள் நான் வழக்கமாக உணர்ந்திருந்த மிருகத்தனமும், கோபமும், எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்துபோனது. பிறகு என் வாழ்வில் மற்றொரு திருப்புமுனை நிகழ்ந்தது - நான் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவியும் யோகா வகுப்பில் பங்கேற்க, இப்பொழுது நாங்கள் இருவரும் நாள் தவறாமல் எங்களது பயிற்சிகளைச் செய்கிறோம்.

ஒருமுறை நாம் கோபத்தில் கத்தி எடுத்துவிட்டால், அதைக் கைவிடுவது மிகவும் கடினம் என்பதை நான் உணர்ந்தேன். சட்டத்துக்குப் புறம்பான செயலில் ஈடுபடுபவனாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், எவ்வளவுதான் மாற்றமடைந்தாலும், மக்கள் அவனைப் பார்க்கும் கண்ணோட்டம் மிகவும் வேதனையானது. ஆனால், இவை அனைத்தும் என் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. எனக்கு 14 வயதாக இருந்தபொழுது, நான் தவறான பாதையில் செல்லத் துவங்கினேன். எனக்கு 28 வயதானபொழுது, ஈஷா யோகா வகுப்பு என்னை முழுமையாக மாற்றியது. என் நரம்புகளில் இளமையின் தீவிரம் ஓடிக்கொண்டிருந்தபோதே, எனக்குள் நிகழ்ந்த மாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்புதான், 23 வயதில், எனக்கெதிரான பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 60 பேருக்கு மேல் என் ஆதிக்கத்தின் கீழும் வைத்திருந்தேன். அவைகள் அனைத்தையும் கைவிட்டேன். இப்பொழுது, நான் எங்கு சென்றாலும், என் வேலையை மட்டும் செய்கிறேன்.

எல்லாப் புயல்களையும் அமைதியாகக் கடந்தேன்

நான் கவனித்த மற்றொரு மாற்றம் என்னவென்றால், எனக்கு அசாத்தியமான கோபம் ஏற்பட்ட சூழல்களிலும்கூட என்னால் அமைதியாக இருக்க முடிந்தது. முன்னர், இப்படிப்பட்ட சூழல்களில், நான் மூர்க்கத்தனமாக எதிர்செயல் செய்திருப்பேன், ஆனால் இப்பொழுது என்னால் அமைதியாக இருக்க முடிவதற்கு, ஈஷா மட்டுமே காரணம். எனது யோகப் பயிற்சிகளும், இப்பொழுது நான் உண்ணும் இயற்கை உணவும் எனக்கு நிரம்ப உதவியுள்ளன.

இப்பொழுது எனக்கு சொந்தமான நூலகத்தில், சத்குருவின் மிகப்பெரிய புகைப்படம் ஒன்றை வைத்திருக்கிறேன். அவரால் நான் ஒவ்வொரு கணமும் வழிநடத்தப்படுவதாக உறுதியாக நம்புகிறேன். இப்பொழுது மதுரையில், என்னை எழுத்தாளர் ரமேஷ் என்று மக்கள் அடையாளம் காண்கின்றனர்.

ஈஷா ஒவ்வொரு தனிமனிதரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். ஒருமுறை, எனது இரண்டு சக்கர வாகனத்தில் என் மனைவி, குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபொழுது, எதிர்ப்பக்கம் இருந்து வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி, தவறுதலாக எங்கள் மீது மோதிவிட்டார். நாங்கள் அனைவரும் கீழே விழுந்தோம். சுதாரித்து எழுந்த நான் அவரைப் பார்த்தேன், அவரும் ஈஷா யோகா வகுப்பு முடித்தவர் என அடையாளம் கண்டுகொண்டேன். இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், பிறகு சிரித்தவாறு அவ்விடத்தில் இருந்து கிளம்பிச் சென்றோம்.

எங்கெங்கும் அன்பின் பிரவாகம்

இதே சம்பவம் வேறு யாரோ ஒருவருடன் நடந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? ஆனால் கோபம் மூள்வதற்கு பதில், நாங்கள் அன்பு மேலிட, ஒரு புன்னகையுடன் அவ்விடத்தில் இருந்து நகர்ந்தோம். இதனை ஈஷாவினால் மட்டுமே நிகழ்த்த முடியும். நான் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபொழுது இந்த விபத்து நிகழ்ந்திருந்தால், அங்கேயே ஒரு குற்றச்செயல் நடந்திருக்கும். பல்வேறு இடங்களிலும் ஈஷா யோகா வகுப்புகள் இன்னும் அதிக எண்ணிக்கையில் நடக்கக்கூடும் என்றால், அதன் பிறகு காவல்துறையினர் செய்வதற்கு எந்த வேலையும் இருக்காது. ஒரு முன்னாள் குற்றவாளியாக இருந்ததால் இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஒருமுறை, எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர், அவருக்கு நெருக்கமானவர் துரோகம் இழைத்ததால், தற்கொலை செய்துகொள்ளும் விளிம்புக்கு சென்றுவிட்டார். நான் அவருக்கு ஈஷா யோகாவை அறிமுகம் செய்தேன். ஆனால் அந்த நேரத்தில், மதுரைக்கு அருகாமையில் வகுப்புகள் நடைபெறவில்லை. அவருக்கு நான் ஆறுதல் கூறி, வகுப்பு நடைபெறும் வரை சத்குருவின் புத்தகங்களை வாசிக்குமாறு கூறினேன். அதன் பிறகு வகுப்பில் பங்கேற்கச் செய்தேன். இபொழுது அவர் நலமுடன் இருக்கிறார்.

அவர் மட்டுமல்ல - இன்றைக்கு நான் உயிருடன் இருப்பதற்கும், காரணம் ஈஷா மட்டுமே.

—ரமேஷ்