ஆரோக்கியம்

நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ள ஒருவருக்கு யோகா உதவுமா?

நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படும் தருணத்தில், யோகா எவ்வாறு நாட்பட்ட நோய்களை அணுகுகிறது, அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறார் சத்குரு. ஆன்மீக சாதனை எவ்வாறு நாட்பட்ட நோய்களின் மூலக் காரணத்தை அணுகுகிறது, ஆனால் நவீன மருத்துவமோ அறிகுறிகளை மட்டுமே கையாள்கிறது என்பதை குறித்தும் அவர் விவரிக்கிறார்

நாட்பட்ட நோய் மற்றும் தொற்று நோய்

சத்குரு: நோய்களில் இரண்டு வகைகள் உள்ளன - தொற்று நோய் மற்றும் நாட்பட்ட நோய். வெளியிலிருந்து ஏதோ ஒரு உயிரினம் நம் உடலமைப்பை தாக்குவதால் தொற்று நோய்கள் உருவாகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை மருந்துகளை உட்கொண்டு கையாள வேண்டும். நாட்பட்ட நோயோ, நம் சொந்த உடலே பிரச்சனைகளை உருவாக்குவதால் ஏற்படுவது. நம் உடலமைப்பிலேயே நோய் உற்பத்தி செய்யப்படுகிறது.

உடலின் ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியத்திற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே எதனால் அது நோயை உருவாக்குகிறது? ஒன்று, மிக அடிப்படையான ஏதோ ஒன்று சமநிலையை இழந்திருக்கிறது அல்லது நம் உடலமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு தவறான புரிதல் ஏற்பட்டு, அதனாலேயே ஆரோக்கியத்திற்கு பதிலாக நோய் உருவாகிறது. இந்த தவறான புரிதலை நாம் பல்வேறு வழிகளில் அடைகாத்துக் கொண்டிருக்கக்கூடும். இது உங்கள் மனதளவில் நிகழும் தவறான புரிதல் அல்ல, ஆனால் அணுக்களின் நிலையில் மூலப்பொருட்களின் நிலையில் இது நிகழ்கிறது.

எந்த ஒரு நாட்பட்ட நோய்க்கும் மூலகாரணம் எப்போதும் சக்தி உடலில் தான் இருக்கிறது.

எந்த ஒரு நாட்பட்ட நோய்க்கும் மூலகாரணம் எப்போதும் சக்தி உடலில் தான் இருக்கிறது. உங்கள் சக்தி உடல் அது செயல்படும் விதத்தில் செயல்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அது நீங்கள் வாழும் சூழலை சார்ந்து இருக்கக்கூடும். நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் கொண்டுள்ள உறவுகள் அல்லது உங்கள் உணர்ச்சிகள், அணுகுமுறை, எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றால் அவ்வாறு செயல்படக்கூடும். மேலும் குறிப்பிட்ட வெளிநிலை சக்தி சூழல்கள் உங்கள் உள்நிலை சக்தியை பாதிப்பதனால் கூட அவ்வாறு செயல்படக்கூடும். உங்கள் சக்தி உடல் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைந்து இருந்தால், இயல்பாகவே அது உடலளவிலும் மனதளவிலும் வெளிப்படுகிறது.

உடலின் ஒரு அடுக்காகிய இந்த சக்தி உடல் பாதிப்படையும் போது, மன உடலும் ஸ்தூல உடலும் நிச்சயமாக பாதிப்படையும். உடல்ரீதியாக அது வெளிப்படும் போதுதான், அது ஒரு மருத்துவப் பிரச்சனையாகி ஒரு மருத்துவரின் கவனத்திற்கு செல்கிறது.

அலோபதி மருத்துவத்தின் அடிப்படையான குறைபாடு

துரதிருஷ்டவசமாக மருத்துவ அறிவியல் நோயை மட்டுமே புரிந்துகொள்கிறது. ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வேர்கள் மற்றும் மூலத்தைப் பற்றிய புரிதல் அதற்கு இல்லை. நீங்கள் நீரிழிவு நோய் கொண்டிருந்தால், சர்க்கரை உங்களுக்கு பிரச்சனை அல்ல - உங்கள் கணையம் சரிவர செயல்படவில்லை என்பதே பிரச்சனை. அவசரகால நடவடிக்கையாக நீங்கள் சர்க்கரை எடுத்துக்கொள்வதை குறைத்துக் கொள்கிறீர்கள். ஏனெனில் அலோபதி மருத்துவத்தில் உங்கள் கணையத்தை செயல்படுத்த அவர்களிடம் வேறு வழிமுறைகள் இல்லை. அவர்கள் உங்களுக்கு அளிக்கக்கூடிய ஒரே தீர்வு, உங்கள் சர்க்கரை அளவை ஒவ்வொரு நாளும் பரிசோதித்து அதன்படி இன்சுலின் எடுத்துக்கொள்வது தான். அலோபதி மருத்துவம் என்பது அறிகுறிகளைப் பொருத்து சிகிச்சை செய்யும் முறை. மருத்துவர் உங்கள் அறிகுறிகளை கவனித்து அதன்படி உங்களுக்கு சிகிச்சையை வழங்குவார்.

அலோபதி மருத்துவம் எந்த ஒரு தொற்றுநோய்க்கும் மிக அற்புதமான தீர்வளிக்கும் ஒரு முறை; நான் பார்த்தவரையில், வெளியிலிருந்து உங்கள் உடலை பாதிக்கும் எந்த ஒரு நோய்க்கும் இதுவே மிகச்சிறந்த வழிமுறை. ஆனால் நமது உடல் நமக்குள் உருவாக்கும் நோய்களைக் குறித்து அதனால் எந்த தீர்வும் வழங்க முடியவில்லை - உதாரணத்திற்கு, நீரிழிவு இரத்தக் கொதிப்பு அல்லது ஒற்றைத் தலைவலி போன்றவை. நவீன மருத்துவ அறிவியல் நோய்களை நிர்வகிக்கும் முறைகளையே வழங்குகிறது. அந்த நோய்களிலிருந்து நீங்கள் முற்றிலுமாக விடுபடுவதை குறித்து அது பெரும்பாலும் பேசுவதில்லை. நோய்களை ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாட்டிற்குள் வைத்து நிர்வகிக்க முழுமையான மருத்துவ அமைப்புகளும், பலவகையான நிபுணர்களும் இருக்கிறார்கள்.

யோகாவின் அடிப்படையான களம் என்னவெனில் உங்களின் சக்தி உடல் முழுமையான செயல்பாட்டில், சரியான சமநிலையில் இருந்தால், உங்கள் ஸ்தூல உடல் அல்லது மன உடலில் எந்தவிதமான நாட்பட்ட நோயும் இருக்காது.

நோய்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே பெருமளவு பணம் மற்றும் நேரம் செலவழிக்கப்படுகின்றது. இது எப்படிப்பட்டதெனில், மக்கள் தங்களின் மன அழுத்தத்தை நிர்வகிப்பதைப் பற்றி பேசுவது போன்றது தான். மக்கள் தங்களின் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகின்றனர், தங்களின் நீரிழிவை நிர்வகிக்க விரும்புகின்றனர், மேலும் தங்களின் ரத்தக்கொதிப்பை நிர்வகிக்க விரும்புகின்றனர். இந்த வகையான முட்டாள்தனம் வந்திருப்பதற்கான காரணம், அவர்களின் சொந்த உயிர் சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற அடிப்படை புரிதல் கூட அவர்களுக்கு இல்லை என்பதினால் தான்.

யோகா மற்றும் நாட்பட்ட நோய்கள்

யோகாவில், நீரிழிவை நம் உடல் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அடிப்படையான பாதிப்பு என்று நாம் பார்க்கிறோம். மேலும் ஒவ்வொரு நபருக்கும் அதன் அளவும் பாதிப்பின் தன்மையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. எனவே அது தனிநபரைப் பொருத்து, தனிப்பட்ட அளவில் கையாளப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும் எந்த நோயாக இருந்தாலும், சக்தி உடலில் சமநிலையை உருவாக்கி, அதற்கு சக்தியூட்டி அல்லது அதைத் தூண்டிவிடுவதையே நோக்கமாக யோக முறை கொண்டுள்ளது. யோகாவின் அடிப்படையான களம் என்னவெனில் உங்களின் சக்தி உடல் முழுமையான செயல்பாட்டில், சரியான சமநிலையில் இருந்தால், உங்கள் ஸ்தூல உடல் அல்லது மன உடலில் எந்தவிதமான நாட்பட்ட நோயும் இருக்காது.

நாம் நோய்க்கான சிகிச்சை அளிப்பதில்லை. சக்தி உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் வெளிப்பாடாகவே நாம் நோய்களைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட அளவு சாதனா செய்வதன் மூலம் தங்களின் சக்தி உடலில் சமநிலையை உருவாக்க, அதனை தூண்டிவிட மக்கள் தயாராக இருந்தால், நாட்பட்ட நோய்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விடுதலை பெறுவார்கள்.