நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, லிங்கபைரவி கோவிலுக்கு ஒரே ஒரு முறை சென்றது, எப்படி எதிர்பாராத ஏக்கத்தை, தேவியை தனது வீட்டிற்கும் வாழ்க்கைக்கும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்துகிறார்.
முதன்முதலாக லிங்கபைரவியைப் பார்த்த க்ஷணத்திலிருந்தே, எனக்குள் ஏதோ நடக்கத் தொடங்கியது. மகிழ்ச்சி, ஆனந்தம், சோகம், எனக்குத் தெரியாத ஏதோவொன்றைத் தேடவேண்டும் என்ற தீவிர ஆசை.
ஆரம்பத்தில், தேவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடிய யந்திரா வைபவம் பற்றி கேள்விப்பட்டபோது, அது மிகப் பெரிய ஒரு படியாகத் தோன்றியது. நான் போதுமான அளவு பக்தி உள்ளவளா, தேவி என்னுடன் வந்து இருக்க விரும்புவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இறுதியில், எல்லாமே சரியான முறையில் அமைந்தது, நான் யந்திரா வைபவத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
இப்போது என்னிடம் என் யந்திரம் உள்ளது; என் தேவி என்னிடம் இருக்கிறார். யந்திரா வைபவத்தின் இந்த மூன்று நாட்களை விவரிக்க வேறு சிறந்த வார்த்தைள் இல்லை, இறைத்தன்மையான அற்புதம். என்னால் இதில் பங்கேற்க முடிந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். சத்குரு செய்யும் அனைத்து விஷயங்களிலும், யந்திரா வைபவம் என்பது நம் அனைவருக்கும் அவர் சாத்தியமாக ஆக்கியுள்ள மற்றும் ஒரு அர்ப்பணம்.
நான் முதன்முதலாக ஈஷா யோக மையத்திற்கு சென்று, லிங்கபைரவியின் வீற்றிடத்திற்கு சென்றபோது, அவளது கண்களைப் பார்த்த அந்த க்ஷணத்தில், நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்படுபவள், மேலும் என் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துபவள். என் தாயை இழந்த பிறகு, நான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும், ஒவ்வொரு தெய்வத்திடமும், தேவியிடமும் தாய்மையின் உருவத்தைத் தேடிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை அதனால் தான் தேவியைப் பார்த்தபோது, அடக்கி வைத்திருந்த எல்லா உணர்வுகளும் மேலெழுந்திருக்கின்றன.
ஒவ்வொரு முறை நான் தேவியின் வீற்றிடத்தில் இருக்கும் போதும் அவளது படத்தைப் பார்க்கும் போதும் அல்லது வெறுமனே அவளை நினைக்கும் போதும் கூட என்னுள் ஏதோ ஒன்று நடக்கிறது. மேலும், நான் தேவியை நினைக்கும் போதெல்லாம் அல்லது அவளது இருப்பில் இருக்கும் போதெல்லாம், என்னால் விவரிக்க முடியாத வகையில் நான் மேம்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அறிவேன்.
ஆரம்பத்தில், யந்திரா வைபவத்தைப் பற்றியும், தேவியை வீட்டிற்கு அழைத்து வரும் சாத்தியத்தைப் பற்றியும் கேள்விப்பட்டபோது, நான் போதுமான அளவு தயாராக இல்லை என்றும், எனக்கு போதுமான பக்தி இல்லை என்றும் பயந்தேன். நான் வசிக்கும் இடம் போன்ற பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது, அதனால் இது நான் மேற்கொள்ள இன்னும் தயாராக இல்லாத ஒரு பெரிய படி என்று உணர்ந்தேன். ஆனால் தேவியை வீட்டிற்கு அழைத்து வந்து, அவளது இருப்பில் இருக்க வேண்டும் என்ற வலுவான ஆவல் எனக்கு இருந்தது.
சிறிது காலம் கழித்து, ஒரு நண்பர் வரவிருக்கும் யந்திரா வைபவத்தைப் பற்றி என்னிடம் கூறியபோதும் நான் உறுதியற்ற நிலையிலேயே இருந்தேன். ஆனால் எங்கோ, விழிப்பற்ற நிலையில், நான் உண்மையில் அவளுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். நான் புதிய வீட்டிற்கு மாற விரும்பினேன், தேவிக்கு ஒரு தனி அறையும், சாதனாவிற்கு ஒரு தனி அறையும் வேண்டும் என்று நினைத்தேன். அவளை வீட்டிற்கு அழைத்து வர விரும்புகிறேன் என்று நான் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், நான் இந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தேன்.
நான் தேவிக்காகவே ஒரு கூடுதல் அறை கொண்ட இடத்திற்கு குடிபெயர்ந்த பிறகு, "யந்திரா வைபவத்திற்கு இப்போது பதிவு செய்வோம்" என்று நினைத்தேன். என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுடைய அருள் இல்லாமல் ஒரு இலை கூட அசைய முடியாது, அதனால் இது அனைத்தும் அவளுடைய அருள் என்று நான் நினைக்கிறேன். தேவி உங்கள் வீட்டிற்கு வர விரும்பினால், நீங்கள் அதற்குத் தயாராக இருந்திருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள். நான் தயாராக இருப்பதாக அவள் நினைத்து வீட்டிற்கு வருகிறாள் என்றால், நான் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருக்கிறேன்.
இது எல்லாமே, இயல்பான வகையில், அநேகமாக நான் உணராத வகையில் நடந்தன. நாங்கள் பதிவு செய்தோம், மேலும் நான் என் வேலைகளில் மூழ்கியிருந்த போதிலும், விஷயங்கள் தானாகவே சரியாக அமைந்தன.
சத்குரு நேரடியாக வழிநடத்திய யந்திரா வைபவத்தில், தேவியின் இருப்பில் இருந்தது தூய ஆனந்த அனுபவம். தேவியின் அருள் அனைவரின் மீதும் இருப்பது உண்மைதான். இந்த செயல்முறையில் பங்குகொண்டது, அவள் எனக்கு சொந்தமாகப் போகிறாள் என்ற உணர்வு, மற்றும் அவளை வீட்டிற்கு அழைத்து வருவது எல்லாமே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தீட்சைக்குப் பிறகு, நாங்கள் இரவு உணவுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் நான் யந்திராவைப் பார்த்துக்கொண்டே இருந்தேன், அங்கிருந்து விலகத் தோன்றவில்லை. நான் அவளுடனே இருக்க விரும்பினேன். அப்படி ஒரு வலுவான இணைப்போ பிணைப்போ இருக்கிறதாகவும் - யந்திரா இப்போது பிரத்தியேகமாக உங்களுடையது போலவும் உணர முடிந்தது, மேலும் அதை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்.
குறிப்பாக நான் வேலைக்காக வெளியே செல்லும் நேரங்களில், அவளை முழு அக்கறையுடன் கவனித்துக் கொள்வது பற்றி இன்னும் கொஞ்சம் கவலையாக இருக்கிறது, ஆனால் எல்லாம் சரியாக கைகூடும் என்று நினைக்கிறேன்.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட இடத்தில் சொந்த கோவில் இருப்பது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். தேவி அங்கே வந்ததும், அவள் ஏதோ ஒரு வழியில் உங்களை தன்பால் ஈர்ப்பாள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, என் மனம் இது வேண்டும், அது வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தது. ஆனால் சத்குருவை சந்தித்தப் பிறகும், ஈஷா யோக மையத்தில் இருந்த பிறகும், நான் எதையும் கேட்டதில்லை. நாம் கேட்கக்கூடியவை அல்லது விரும்பக்கூடியவை அனைத்தும் நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில் மட்டுமே என்று சத்குரு கூறுவார். ஒருவேளை அதைவிட பெரியது ஏதோ இருக்கலாம். அப்படி இருக்கும்போது ஏன் குறைவானதைக் கேட்க வேண்டும் அல்லது அதில் திருப்தி அடைய வேண்டும்?
நான் தேவியிடமும், நான் வணங்கும் அனைத்து தெய்வங்களிடமும் அது எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, ஒரு நிறைவான வாழ்க்கையையும், நீங்கள் கொடுக்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையையும் மட்டுமே கேட்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது தனித்துவத்திற்கும், தேர்வுகளுக்கும் ஏற்ப, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் எந்த அணுகுமுறையையும் கையாளலாம். ஆனால் நான் தொழில் மற்றும் உடல்நலம் போன்ற குறிப்பிட்ட விஷயங்களைக் கேட்பதை நிறுத்திவிட்டேன். அனைவரும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் என்று மட்டுமே நான் வேண்டுகிறேன்.
பௌர்ணமி அன்று, யந்திரா வைபவத்திற்காக நான் அங்கு இருந்தபோது, தேவி கோவில் இரவு 12:30 மணி வரை திறந்திருந்தது. நான் அங்கு இரவு 11:15 மணியளவில் சென்றேன். ஏற்கனவே பலர் உள்ளே அமர்ந்திருந்ததால், வெளியே நின்றுகொண்டிருந்தேன். அவளைப் பார்த்த அந்த க்ஷணமே, மிகுந்த சக்தியும் உணர்ச்சியும் என்னுள் பொங்கியது. 15 நிமிடங்கள் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தேன், தேம்பி தேம்பி அழுதேன், கண்ணீர் பெருக்கெடுத்தது. பிறகு உள்ளே சென்று மேலும் 10 நிமிடங்களுக்கு அமர்ந்திருந்தேன். இது பெண்மையின் சக்தியா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஏதோ நடக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வீட்டில் உங்களுக்கென்று ஒரு கோவில் இருக்கும்போது, அந்த அருளையும் ஆசீர்வாதங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சத்குரு கூறுகிறார். எனவே முடிந்தபோதெல்லாம், தேவியின் அருளில் திளைக்க மக்களை அழைக்க திட்டமிடுகிறேன்.
நமக்கு பல விஷயங்களைச் சாத்தியமாகியதற்காக சத்குருவிற்கு என் இதயம் நன்றியால் நிறைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இருந்ததிலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. இப்போது இருக்கும் விதம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மற்றவர்கள் கவனித்தாலுமோ அவர்களுக்கு பிடித்தாலுமோ, நான் ஆனந்தமாக இருக்கிறேன், அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். நான் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த வேலை நடந்து கொண்டு இருக்கிறது, ஆனால் சத்குருவுக்கு நன்றி. இப்போது தேவியும் இருக்கிறார்.
அனைவரும் தேவியை வீட்டிற்கு அழைத்து வரும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன், மற்றும் பிரார்த்திக்கிறேன். அனைவரும் தேவியின் அருளைப் பெற்று, தங்களின் ஆழ்ந்த விருப்பங்கள் நிறைவேறுவதைக் காண வேண்டும். நமஸ்காரம்.
—ஸ்ரீநிதி ஷெட்டி