நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

சத்குரு அபுதாபியில் டீம்லேப் ஃபினாமினாவை பார்வையிட்டார்

17 ஏப்ரல் 2025

சத்குரு அபுதாபியின் டீம்லேப் ஃபினாமினா திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்த டிஜிட்டல் கலை கண்காட்சியில், பார்வையாளர்களின் இருப்பு மற்றும் அசைவுகளுக்கு ஏற்ப பிரதிபலிக்கும் மற்றும் மாற்றமடையும் கலை படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சரித்திர நிகழ்வில், நடிகர்களான கேட் பிளான்செட் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்டும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு அபுதாபி உலகளாவிய கலாச்சார மையமாக உருவெடுத்து வருவதை எடுத்துக்காட்டியது.

புகழ்பெற்ற ஓவியர் சாச்சா ஜாஃப்ரீ துபாயில் சத்குருவை வரவேற்றார்.

ஏப்ரல் 13, 2025

கலைஞர் சச்சா ஜாஃப்ரி மற்றும் சத்குரு துபாயில் கலையும் ஞானமும் ஒன்றிணைந்த தனித்துவமான நிகழ்வுக்காக ஒன்று கூடினர். சத்குரு பார்வையாளர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஜாஃப்ரியின் தூரிகை "எனர்ஜி ரியலைஸ்டு" என்ற படைப்பை உருவாக்கியது- சத்குரு மற்றும் மண் காப்போம் இயக்கத்தால் ஊக்கம் பெற்ற உயிர்த்துடிப்பான ஓவியம். அந்த மாலை நேரம், படைப்பாற்றல் வெளிப்பாடு மற்றும் செழிப்பான பூமிக்கான விழிப்புணர்வு செயல்பாட்டின் மாற்றம் தரும் சக்தியைக் கொண்டாடியது.

இந்த உத்வேகமூட்டும் கூட்டத்தின் மேலும் பல தருணங்களைக் காண, "வைராக்யம்: நிறங்களுக்கு அப்பால் - கலைஞர் சச்சா ஜாஃப்ரி சத்குருவை துபாயில் வரவேற்கிறார்" என்ற எங்களது ஸ்லைட்ஷோவை இங்கே காணலாம்.

ஈஷா யோக மையத்தில் ஒரு மாலை நேர தரிசனம்

ஏப்ரல் 8, 2025

சத்குரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன், ஈஷா யோக மையத்தில் ஒரு தரிசனத்தை வழங்கினார்.

தியானலிங்கத்திற்கும் சந்திரகுண்டத்திற்கும் இடையில் நிகழ்ந்த இந்த தரிசனத்தில், அன்பின் ஆழமான தன்மையை சத்குரு விளக்கினார். உண்மையான அன்பு என்பது யாரையாவது நேசிப்பதற்காக தேடுவது அல்ல, மாறாக அன்பாகவே மாறுவது - ஒவ்வொரு உயிரினத்திலிருந்து உயிரற்ற பொருட்கள் மற்றும் வெற்று ஆகாயம் வரை அனைத்தையும் உங்கள் கண்கள் அன்போடு பார்க்கும் நிலை என்பதை அவர் வலியுறுத்தினார்.

சத்குரு சரமாரியாக தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க நேரம் செலவிட்டார். இதில் இளம் பருவத்தினரிடையே வன்முறை, ஹனுமான் சாலிஸாவை ஜெபிப்பதின் ஆன்மீக முக்கியத்துவம், பல்வேறு தியான பயிற்சிகளின் மதிப்பு, மேலும் ஒரு இயல்பான கேள்வியான அவர் எதிர்காலத்தில் எங்கு தன் நேரத்தையும் சக்தியையும் செலுத்த திட்டமிடுகிறார் ஆகியனவற்றிற்கு பதிலளித்தார்.

தலைமையும் உள்நிலை வளர்ச்சியும்: பாரத் பெட்ரோலியத்திற்கான நிகழ்ச்சி

ஏப்ரல் 6, 2025

பெங்களூரு சத்குரு சந்நிதியில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தலைமைக் குழுவினருடன் சத்குரு உரையாற்றினார். மனித அனுபவத்தின் மையத்தை ஆராயும் இந்த சுவாரஸ்யமான அமர்வில், BPCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.கிருஷ்ணக்குமார் தலைமையில், நிறுவனத்தின் மூத்த தலைமைக் குழுவும் சுமார் 200 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்களை வெளிப்புற சாதனைகளுக்கு அப்பால் செல்ல ஊக்குவித்த சத்குரு, வெற்றி மற்றும் மனநிறைவுக்கான அடித்தளமாக அக நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். நடைமுறைக்கு சாத்தியமான நுண்ணறிவுகள் மற்றும் தியான பயிற்சிகளுக்கான பரிந்துரைகள் மூலம், தனிப்பட்ட வாழ்விலும் தொழிலிலும் சிறந்து விளங்குவதற்கு அவசியமான அம்சங்களாக விழிப்புணர்வுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும், ஒருவரின் உள்நிலையை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

14000 க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் சத்குருவுடன் ஒரு நாள் நிகழ்விற்காக பெங்களூருவில் ஒன்று கூடினர்

ஏப்ரல் 5, 2025

சத்குருவுடனான Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்காக , 60 நாடுகளில் இருந்து, 14000 ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பெங்களூருவில் குழுமி இருந்தனர். எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இந்தியாவிலும் அமெரிக்காவிலுமான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சி, தியான அன்பர்களுக்கு சத்குருவின் முன்னிலையில் ஆழ்ந்த அனுபவங்களை அனுபவிக்க ஒரு வாய்ப்பளித்தது.

சத்குரு பங்கேற்பாளர்களை வழக்கமான ஆம்-இல்லை என்ற இரட்டைத்தன்மையை கடந்து செல்ல அழைப்புவிடுத்தார், அவர்களின் உள் அனுபவத்திற்கு முழு மனதுடன் "ஆம்" என்று சொல்ல ஊக்குவித்தார். வெளி விவகாரங்களில் பகுத்தறிவு தேவைப்பட்டாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பையும் பேரானந்தத்தையும் அணுக முடியும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அவர் முழு விழிப்புணர்வுடன் தடைகளை விட்டொழிப்பது பற்றி பேசினார் - இது உடலின் ஒவ்வொரு அணுவும் பேரானந்தத்தில் மூழ்கச் செய்யும். நவீன வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு மத்தியில் நல்வாழ்வை பேணுவதற்கான வழியாக "பேரானந்தத்தில் ஊறியிருப்பதன்" முக்கியத்துவத்தையும் சத்குரு வலியுறுத்தினார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அழைத்தார்.

இந்த நிகழ்வு விழிப்புணர்வான உலகம் இயக்கத்தின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலித்தது - தனிப்பட்ட மாற்றம் இயல்பாகவே வெளியே அலைகளாக பரவுகிறது. சத்குரு பகிர்ந்தது போல, "நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களுக்குள் பேரானந்தமாக இருந்தால், அது சுற்றிலும் பரவும் என்பதை நீங்கள் காண்பீர்கள். செடிகளும் விலங்குகளும் கூட பதிலளிக்கும்."

நாள் நிறைவடைந்தபோது, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த சூழல் நிலவியது. பங்கேற்பாளர்கள் வெறும் நினைவுகளோடு மட்டுமல்லாமல், தன்னை மாற்றிக்கொள்வதே உலகை மாற்றுவதற்கான முதல் படி என்ற சாத்தியத்தோடும் திரும்பிச் சென்றனர்.

எதிர்வரும் Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சிகள்

சான்ஃபிரான்சிஸ்கோ: 2 நவம்பர் 2025

ஃபிலடெல்ஃபியா: 15 நவம்பர் 2025

மும்பை: 14 டிசம்பர் 2025

ஹைதராபாத்: 4 ஜனவரி 2026

Know More: sadhguru.co/eoe