ஈஷா சமையல்

கேரட் முந்திரி அல்வா

தேவையான பொருட்கள்

[6 பேருக்கு]

½ கப் முந்திரி

2 மேஜைக்கரண்டி நெய்

¼ கப் பாதாம், பிஸ்தா (விருப்பத்திற்கு ஏற்றாற்போல்)

2 மேஜைக்கரண்டி உலர்திராட்சை

2 கப் மெல்லியதாக துருவிய கேரட்

½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்

1 கப் பேரீட்சை அல்லது ½ கப் கரும்பு சர்க்கரை

1 கைப்பிடி பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா (அலங்கரிப்பதற்கு)


செய்முறை

  1. முந்திரியை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய முந்திரியை மிக்சியில் போட்டு வைப்பரில் சிறிது அரைத்து, அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவான, கொஞ்சம் கெட்டியான பால் போல் வரும் வரை அரைக்கவும்.
  2. பேரீட்சையை இனிப்பிற்காக பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதன் விதைகளை நீக்கிவிட்டு சுடுநீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும், அதில் ½ கப் முந்திரி பால் சேர்த்து மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. பாதாம், பிஸ்தா மற்றும் உங்களுக்கு விருப்பமான பிற நட்ஸ்களை சிறிதாக உடைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும். மிதமான தீயில் வைத்து உடைத்த நட்ஸ்களை அதில் சேர்த்து அவை நிறம்மாற துவங்கும் வரை வறுக்கவும். பிறகு உலர்திராட்சையை சேர்க்கவும்; அவை உப்பி பெரிதாகும் வரை வறுக்கவும். அதில் கேரட் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும், பிறகு முந்திரி பாலை சேர்க்கவும்.
  4. மிதமான சூட்டில் வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு, அதில் உள்ள நீர் வற்றும் வரை, தோராயமாக 15-20 நிமிடத்திற்கு வேகவிடவும். அடி பிடிக்காத அளவில் கிளறிவிடவும்.
  5. இதில் அரைத்த பேரீட்சை-முந்திரிபால் கலவையை சேர்க்கவும். இல்லையென்றால் கரும்பு சர்க்கரையை சேர்க்கவும். பிறகு மீதமுள்ள நெய்யினை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சேரும் வரை கிளறவும்.
  6. உங்களுக்கு புட்டிங் போன்ற மிகவும் மென்மையான பதத்தில் வேண்டும் என்றால், அல்வாவை இப்போது இறக்கிவிடவும். கெட்டியான பதத்தில் வேண்டும் என்றால், இந்த கலவை வாணலியின் ஓரத்திலிருந்து பிரிந்து வரும்வரை, ஈரப்பதம் நன்கு வற்றும் வரை வேகவைக்கவும்.
  7. அல்வா விரும்பிய பதத்திற்கு வந்தவுடன், இறக்கி வைக்கவும்.
  8. நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவினை மேலே தூவி அலங்கரிக்கவும்.
  9. இந்த அல்வாவை சூடாகவோ, ஆறிய நிலையிலோ அல்லது குளிர்ச்சியாகவோ எப்படி வேண்டுமானாலும் பரிமாறலாம்.