நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகளுடைய தொகுப்பு!

டென்னஸி ஈஷா மையத்தில் சத்குரு தரிசனம்

10 ஜூன்

டென்னசி, மெக்மின்வில்லில் உள்ள ஈஷா யோக மையத்தில் (Isha Institute of Inner-sciences), அழகிய இரவுப் பொழுதில், சத்குருவின் முன்னிலையில் நடைபெற்ற தரிசன நிகழ்ச்சிக்கு அருகிலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் சாதகர்கள் வருகை தந்தனர்.

காலம் நிகழும்விதம் பற்றிப் பேசிய சத்குரு, அது ஒரே நேர்கோட்டில் முன்னிச் செல்வதாக பார்க்கப்படுவதைக் காட்டிலும், இருப்பாகவே எப்போதும் பார்க்கப்படுகிறது. யோகப் பயிற்சிகளின் நோக்கம், ஒருவரை பிறப்பு- இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கும் முக்திநிலையை அடைவதாகும். இதன் அர்த்தம், காலத்தின் விளைவுகளுடன் நம்மைப் பிணைக்கும் பொருள் உலகம், உள்ளுணர்வுகள் மற்றும் நிர்பந்தங்கள் ஆகியவற்றைக் கடந்து செல்வதாகும். இருப்பினும், பெரும்பாலான மக்கள் வலி அல்லது துன்பங்களை அனுபவிக்கும்போது மட்டுமே விடுதலையை நாடுகின்றனர். யோகா மூலம் அடையப்படும் உண்மையான விடுதலை, பிரபஞ்சத்திலுள்ள எதையும் நேசிக்கவும் பிணைக்கவும் அனுமதிக்கிறது. மேலும், ஆழமான ஒரு தன்மையில் வாழ்க்கையை அனுபவிக்க உதவுவதோடு, உள்நிலையில் சுதந்திரமாக இருந்தபடியே ஒருவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது.

டென்னஸி ஈஷா மையத்தில் சத்குருவுடன் யந்திர வைபவம்

12-14 ஜூன்

டென்னஸியிலுள்ள ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற யந்திர வைபவம், சத்குருவிடமிருந்து தங்களுக்கான தனிப்பட்ட பைரவி யந்திரத்தையும், சக்திவாய்ந்த பைரவி யந்திர சாதனாவையும் பெறும் அரிய வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.

நார்வே நாடாளுமன்றத்தில் சத்குருவுடன் மண் காப்போம் நிகழ்ச்சி

16 ஜூன்

ஒஸ்லோவில் உள்ள நார்வே பாராளுமன்றத்தில், ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் பலரும் சத்குருவை அன்புடன் வரவேற்றனர். சத்குரு தனது உரையில் மண்ணைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். மண்ணின் ஆரோக்கியமும் மனித ஆரோக்கியமும் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான மண் செழிப்பான சுற்றுச்சூழல் மண்டலத்திற்கு துணைநிற்பதன்மூலம், நமது நல்வாழ்விற்கும் துணைநிற்கிறது. இந்த பிரபஞ்சத்தில் மண் என்பது உயிர்வாழும் ஒரு மிகப்பெரிய மண்டலமாகும். மேலும் மண்ணில் அங்ககக் கரிமங்கள் குறைவது பாலைவனமாக்கலுக்கு வழிவகுக்கும்.

தற்சமயம், எந்த நாட்டிலும் சராசரியாக 3% அங்ககக் கரிமச் சத்து மண்ணில் இல்லை என்றும், ஆண்டுக்கு 27,000 உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்றும் சத்குரு சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் விவசாய நிலத்தைப் ஆரோக்கியமாகப் பராமரிப்பதை உறுதிசெய்யும் சட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற கொள்கை மாற்றங்கள் தேவை. மரம்சார்ந்த விவசாயம் இந்தியாவில் வெற்றிகரமாக அதிகரித்துவருகிறது. இது மண்ணின் ஆரோக்கியத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதோடு, மண் அழிவுக்கான தீர்வின் ஒரு அங்கமாகவும் இது இருக்கிறது.

லண்டனில் சத்குருவுடன் சந்திப்பும் தியானமும்

18 ஜூன்

ஜூன் 18, ஞாயிற்றுக்கிழமை, லண்டனில் 12,000 பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான சந்திப்புக் கூட்டத்துடன் தியான நிகழ்ச்சி ஒன்றை சத்குரு நடத்தினார். இந்தியாவிற்கு வெளியே இதுவரை ஈஷா நடத்திய மிகப்பெரிய நிகழ்வாகவும், இங்கிலாந்தின் மிகப்பெரிய தியான நிகழ்வாகவும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அமைந்தது. உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் 12,000 நாற்காலிகளை அமைப்பது உட்பட, நிகழ்விற்குத் தேவையான எண்ணற்ற பணிகளில் கரம்கொடுத்தனர்!

வாழ்க்கையில் விழிப்புணர்வாகவும் கவனக்குவிப்புடனும் இருப்பதன் முக்கியத்துவம், ஒருவரின் உள்நிலை நல்வாழ்விற்காக புறக்காரணிகளை சார்ந்திருப்பதற்குப் பதிலாக உள்நோக்கித் திரும்புதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் சத்குரு உரையாற்றினார். பேரானந்தமாகவும், முன்முடிவுகள் இன்றியும் இருப்பது, அனைத்தையும் அதனதன் இயல்பான தன்மையில் பார்ப்பதற்கும் அறிவதற்கும் வழிவகுக்கிறது. உள்நிலை மாற்றத்திற்கான பல்வேறு கருவிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய சத்குரு, அவை ஒருவரின் சமநிலையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்தும் என்றார்.

வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த தியானம் மற்றும் சுவாரஸ்யமிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்ற இந்த நிகழ்வு, உள்நிலை மாற்றமடையச் செய்யும் யோகாவின் ஆற்றலை பங்கேற்பாளர்கள் (அவர்களில் பலர் முதன்முறையாக நேரில்வந்து சத்குரு முன்னிலையில் இருந்தனர்) கூடுதலாக அனுபவிக்க வழிவகுத்தது.

உலக யோகா தினத்தில் பாரிஸில் UNESCO தலைமையகத்தில் சத்குருவின் உரை

21 ஜூன்

உலக யோகா தினத்தன்று, UNESCO தலைமையகத்தில் சத்குரு, “விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவது” என்ற தலைப்பில் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். UNESCOவின் அமைதிக்கான கலைஞரான டாக்டர் குய்லா கிளாரா கெஸ்ஸஸுடன் உரையாடியபோது, யோகாவின் உள்நிலைமாற்றத்திற்கான ஆற்றலையும் மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கான அதன் திறனையும் அவர் எடுத்துரைத்தார்.

UNESCOல் உள்ள இந்தியாவிற்கான நிரந்தர தூதுக்குழுவின் இரண்டாவது செயலாளரான ஹரிஷ் குமார் அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்த நிகழ்வில், UNESCOவின் சமூக மற்றும் மனித அறிவியலுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் கேப்ரியேலா ராமோஸின் எழுச்சியூட்டும் உரையும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் சம்ஸ்கிருதி மாணவர்களின் சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் விழிப்புணர்வு மற்றும் சக்தியின் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார்: “விழிப்புணர்வு ஒளிர்வதற்கு, உங்களுக்குத் தீவிரமான அபரிமிதமான சக்தி தேவை. உலகில் ஒரு உறுதியான மனநிலையை உருவாக்க இது மிகவும் அவசியம். நமது உலகின் தரம் என்பது உங்களைப் பொறுத்ததுதான். அதை நிகழச்செய்வோம்.”

சத்குரு ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டது போல, உலக யோகா தினம் என்பது கொண்டாட்டம் பற்றியதல்ல, அது பொறுப்பேற்பதாகும்: “உலக யோகா தினம் பொறுப்பேற்பதற்கான ஒரு நாள், ஏனென்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த முறையில் இருப்பதே இந்த உலகிற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாகும்."

2014ம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்தது. யோகப் பயிற்சியின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரித்து, 2016ல் மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் UNESCO பிரதிநிதித்துவப் பட்டியலில் யோகா சேர்க்கப்பட்டது.

ஈஷாவின் பிற நிகழ்வுகள்:

Human Is NOT a Resource நிகழ்ச்சியின் 7வது பதிப்பு

12-14 ஜூன்

இந்தஆண்டு நடைபெற்ற மனிதன் என்பது ஒரு வளமல்ல நிகழ்ச்சி (Human Is NOT a Resource), அதில் பங்கேற்ற அனைவருக்கும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஓர் அனுபவமாக இருந்தது. தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் புதிய கண்ணோட்டங்களைத் திறந்துகொடுத்த இந்நிகழ்ச்சி, நிறுவனமய கலாச்சாரம் மற்றும் தலைமைத்துவம் பற்றிய சிறப்பான நுண்ணறிவுகளை வழங்கியது. மேலும், இவை குறித்த சத்குருவின் எழுச்சியூட்டும் பார்வைகளும் இதில் இடம்பெற்றன.

மனிதன் ஒரு வளமல்ல என்ற இந்த நிகழ்ச்சி சத்குருவின் பார்வையில் உருவான ஒரு மூன்று நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது வணிகத்துறையில் மனித ஆற்றலை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்துகிறது.

ஈஷா யோக மையத்தில் உலக யோகா தினம்

21 ஜூன்

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், கோடைகால சங்கிராந்தியின் பிரகாசமான தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, காலம் கடம்துநிற்கும் சக்திமிக்க யோகப் பயிற்சியான சூரிய நமஸ்காரத்தை ஈஷா யோக மையத்தில் செய்துகாட்டினர்

கோவை CRPF மத்திய பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகைதந்து, முழு உடலமைப்பிலும் இலகுத்தன்மையைக் கொண்டுவரக்கூடிய எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சிகளின் ஒரு தொகுப்பான உப யோகாவைக் கற்றுக்கொண்டனர்.

உலக யோகா தினத்தன்று இந்தியா முழுவதும், ஈஷா அறக்கட்டளை இலவச யோகா வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தது.

தியானலிங்க பிரதிஷ்டை தினம்

24 ஜூன்

ஈஷா யோக மையத்தில் 24ம் ஆண்டு தியானலிங்க பிரதிஷ்டை தினக் கொண்டாட்டத்தில் பல்வேறு மதங்களின் உச்சாடனங்கள், குரு பூஜை, சத்குருவின் செய்தி மற்றும் சிறப்பு நாத ஆராதனை ஆகியவை நிகழ்ந்தன. எண்ணற்ற புத்தம் புதிய மலர்கள் மற்றும் ஒளிரும் விளக்குகளால் இந்த அமைதியான சூழல் அலங்கரிக்கப்பட்டது.