சிறப்புக் கட்டுரை

ஞானமடைந்தவரின் பாதை: இவர்தான் உங்களுடைய உண்மையான குரு என்று எப்படி அறிந்துகொள்வது

சத்குருவை நீங்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்துகொண்டு இருந்துள்ளீர்கள்; அநேகமாக நீங்கள் ஈஷா யோகா அல்லது சில மேல்நிலை வகுப்புகளை முடித்திருப்பீர்கள். ஆனால் சத்குரு உங்களுடைய உண்மையான குரு என்று எப்படி அறிந்துகொள்வது? மேலும் குரு என்றால் என்ன? இந்த உண்மையை ஆழமாக உணர்வதற்கு தொடர்ந்து வாசியுங்கள்.

கேள்வியாளர்: நீங்கள் எங்களுடைய குரு என்று கூறுவதற்கு நாங்கள் எப்படி தகுதியுடையவர்களாகுவது?

சத்குரு: உங்கள்மேல் நாங்கள் வேலைசெய்ய ஆரம்பித்தவுடன், நீங்கள் அப்படி சொல்லிக்கொள்ள விரும்பமாட்டீர்கள். நீங்கள் சற்று காலத்திற்கு, உங்களுள் உங்கள் உணர்வு அன்பாக மலரும்முன், உங்களைச் சுற்றியுள்ளவர்களை வெறுப்பீர்கள். அன்பு மலர்வதற்கு அதிக காலம் எடுக்கும். அதுவரை நீங்கள் என்ன செய்தாலும் வலிக்கும்.

பலன்களை அறுவடை செய்வதற்கு சில காலம் தேவைப்படுகிறது. பலன்கள் வரும்பொழுது, மீண்டும் நீங்கள் எங்கள் மீது காதல்வயப்படலாம். நாங்கள் அதுவரை காத்திருப்போம். மேலும், உங்கள் குருவை தேர்ந்தெடுப்பதற்கு முயற்சிக்காதீர்கள் – வெறுமனே இருக்கவேண்டும். உண்மையிலேயே தகுதிவாய்ந்த ஒன்றை நீங்கள் கண்டால், அது நிகழும். நீங்கள் காணவில்லை என்றால், எப்படியும் பிரச்சனையில்லை. நான் யாருடைய குருவாகவும் இருப்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கவில்லை.

வளர்ச்சிக்கும், ஞானமடைதலுக்குமான உங்கள் ஜி பி எஸ் (GPS)

நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், நான் உங்களுக்கு உதவி செய்வேன். அதனை நீங்களாகவே செய்துகொள்ள விரும்பினால், அது எனக்குப் பரவாயில்லை. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை, நீங்கள் அறிந்திராத ஒரு நிலப்பரப்பில் நடக்கும்போது, நீங்கள் உலகையே சுற்றி வரலாம், ஆனால் அப்போதும் அதைத் தவறவிடக்கூடும். இது மக்கள் ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தி, சரியான திசைகளில் செல்வதற்கு வழிகாட்டும் குரலைப் பின்பற்றுவதைப் போன்றதுதான். ஜிபிஎஸ், அதாவது “குரு பொஸிஷனிங் சிஸ்டம்”, கொண்ட ஒரு குருவுக்கு நீங்கள் ஏற்கெனவே தயாராக இருக்கிறீர்கள், ஆகவே குரு – ஷாப்பிங் செல்லவேண்டாம். ஏதோ ஒன்று உங்களைத் தொடுகிறது என்றால், உங்களுக்கு தேர்ந்தெடுத்தல் இருக்காது. எதுவும் உங்களைத் தொடவில்லை என்றால், உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை.

குரு என்பவர் நீங்கள் பார்க்கும் அந்த நபர் அல்ல. ஒரு நபராக, சிலருக்கு நான் மிக மோசமாகத் தோன்றலாம், ஏனென்றால் நான் ஏதோ ஒரு விஷயம் குறித்து எப்போதும் அவர்களைக் குத்திக்கொண்டிருக்கிறேன். குரு என்பவர், நபர் அல்ல, ஆனால் அதிர்ஷ்டவசமாக, அது ஒரு குறிப்பிட்ட நபர் மூலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பது ஒரு பறவையாக இருந்திருந்தால், அது மிக உயர்ந்த ஞானத்தை வழங்குவதாக இருந்தாலும், அதை நீங்கள் பெறமாட்டீர்கள்.

குரு என்பவர் நீங்கள் பார்க்கும் அந்த நபர் அல்ல.

உங்களைப்போன்ற மற்றொரு மனிதர் மூலம் அது நிகழ்வது அதிர்ஷ்டவசமானது. அது ஒரு பாறை, பறவை, அல்லது சர்ப்பம் மூலமாக நிகழ்ந்திருந்தால், நீங்கள் அதைப் பெறமாட்டீர்கள். அதைப்போல் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது என்பதுடன் இப்போதுகூட இந்த மாதிரி நிகழ்கிறது, ஆனால் மக்கள் அதை முற்றிலுமாகத் தவறவிடுகின்றனர்.

ஒரு குருவாக கற்றுக்கொடுப்பதற்கு இங்கு ஒரு சர்ப்பம் வந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். உங்களைப் போலவே இருக்கும் மற்றொரு உயிர் வடிவத்தின் மூலமாக நிகழ்வதுதான் அதற்கான சிறந்த வழி. அந்த நபரிடத்தில் தொலைந்துபோகாதீர்கள், மற்றும் நபர் மூலம் நிகழ்வதையும் தடை செய்யாதீர்கள். ஒரு குரு, நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஒரு வியாபாரப் பொருள் அல்ல.

‘குரு’ என்பதன் உண்மையான அர்த்தம்

'குரு' என்ற சொல்லின் பொருள் இதுதான்: 'கு' என்றால் இருள், 'ரு' என்றால் இருளை விலக்குபவர். உங்கள் பார்வைத்திறன் எப்படிப்பட்டது என்றால், ஒளி இல்லையென்றால், உங்களால் பார்க்கமுடியாது. நீங்கள் கடல் மீது பயணிக்கும்பொழுது, எங்கு செல்வது என்பதை ஒரு கலங்கரை விளக்கம் உங்களுக்கு ஒரு அறிதலைக் கொடுப்பதைப் போன்றது இது.

முக்கியமாக, கிழக்கத்தியக் கலாச்சாரங்களில், யாராவது உங்களுக்கான ஏதோஒன்றை ஒளியேற்றினால், அவர்கள் ஒரு குரு என்று குறிக்கப்படுகின்றனர். நான் சத்குரு என்று அழைக்கப்படுவதன் காரணம் எனக்கு இருக்கும் அறிவினால் அல்ல; நான் அறிந்திருப்பது வேத நூல்கள், பாரம்பரியங்கள், அல்லது அதைப்போன்ற எதன் அடிப்படையிலும் இருப்பதல்ல. நான் என்ற இந்த உயிர்த் துகள்தான் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் - அதன் தோற்றம் முதல், அதனுடைய உச்சபட்சம் வரைக்கும்.

'குரு' என்ற சொல்லின் பொருள் இதுதான்: 'கு' என்றால் இருள், 'ரு' என்றால் இருளை விலக்குபவர்.

இந்த ஒரு உயிரையும், மற்ற ஒவ்வொரு உயிரும் அதே விதமாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை மட்டும்தான் நான் அறிந்திருக்கிறேன். அதனால், நான் அவர்களைப்பற்றியும், அவர்களது பிரச்சனைகள், மற்றும் அவர்களது தீர்வுகள் குறித்தும் பேசிக்கொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், நான் இந்த உயிர் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் அதனுடன் நாம் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.

உங்களது இருளை அகற்றும் அந்தப் பரிமாணத்தால் நீங்கள் தொடப்பட்டால், அது இயல்பாகேவே உங்களின் பாகமாகிவிடும். நீங்கள் என்னை உங்களுடன் பருப்பொருள்ரீதியாக எடுத்துச்செல்லவேண்டிய தேவையில்லை. இந்தப் பரிமாணத்தால் தொடப்படுவதற்கு உங்களையே நீங்கள் அனுமதித்தால், அது உங்களுடன் தங்கியிருப்பதுடன், அதை ஒருவராலும் எடுத்துச்செல்லவும் முடியாது. அது உங்களுடைய மிகப்பெரிய “பிரச்சனை” யாக இருக்கும் – நீங்கள் எங்கு சென்றாலும், உங்களால் என்னை விலக்கமுடியாது,

நீங்கள் உங்களுக்குள் பார்ப்பதற்கு ஒரு குரு எப்படி உதவுகிறார்

ஒரு குருவுக்கான தேவை எழுவது ஏனென்றால், பெரும்பாலான மக்களும் அவர்கள் கண்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதை மட்டுமல்ல, அவர்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதையும்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களால் அதைப் பார்க்கமுடியாதது ஏனென்றால், அவர்கள் வேறொரு திசையில் முதலீடு செய்யப்படுகின்றனர். சமூகச் செயல்முறைகளால் மேலும் சிக்கலாக்கப்படும் பிழைப்பின் வெவ்வேறு நிலைகளில் மக்கள் நிரந்தரமாக மூழ்கியுள்ளனர்.

ஒரு குரு என்பவர், ஒரு தத்துவத்தை நெய்வதற்காகவோ அல்லது புதியதொரு மதத்தைத் தொடங்குவதற்காகவோ இங்கு இல்லை. ஆன்மீக செயல்முறை, வாழ்வின் ஆழமான ஒரு பரிமாணத்தைப்பற்றியது. குரு ஒரு வாயில்கதவு போன்றவர். வாயில்கதவு வழியாகச் செல்லும் விருப்பத்துடன், அதை தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது, அந்தக் கதவுதான் சேருமிடமாக இருப்பதாகத் தோன்றக்கூடும். இதனால், நீங்கள் தூரமாக விலகியிருந்தால், குருதான் நீங்கள் சேருமிடமாக இருக்கிறார்.

குரு ஒரு வாயில்கதவு போன்றவர்.

நீங்கள் எதையும் செய்யவோ அல்லது எங்கும் செல்லவோ வேண்டியதில்லை – ஏற்கெனவே நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள். நீங்கள் சிறிதளவு அமைதியடைவதுதான் தேவையாக இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் சுவாசிக்கக் கற்றுக்கொண்டு, உங்கள் இதயம் விழிப்புணர்வுடன் துடிப்பதற்கு அனுமதிக்க வேண்டியுள்ளது. உடலின் ஒவ்வொரு நாடித்துடிப்பும் விழிப்புணர்வுடன் நிகழவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் யார் என்பதன் மூலமாக இருக்கும் விழிப்புணர்வு, உங்கள் வாழ்வின் முன்னுரிமையாக மாறவேண்டும்.

ஒரு குருவின் பங்கு, சாதாரணமாக இருப்பினும், மிகவும் முக்கியமானது: நிரந்தரமாக இருப்பது என்ன என்று உங்களைக் காணச் செய்வதற்கு. சில மக்கள் சற்று அதிகமான நோக்கம் கொண்டிருக்கலாம், அந்தக் காரணத்தினால், அவர்கள் சற்று விரைவாக பலன்கள் காணலாம். மற்றவர்கள் குருவிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர், அதற்காக பல பிறவிகள் தேவைப்படலாம். நான் போதுமான அளவுக்கு நீண்டகாலம் வாழ்ந்து, என்னால் இயன்றவரை முற்றிலும் சிறப்பாக, வாரத்தின் ஏழு நாட்களும் செயலாற்றினால், நான் புரிந்துணர்ந்திருப்பதில், வெறும் இரண்டு சதவிகிதத்தை மட்டுமே என்னால் பகிர்ந்துகொள்ளக்கூடும். இரண்டு சதவிகிதத்தை என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தால், அதுவே மகத்தானதாக இருக்கும். கற்றல் என்பது, ஒரு நீண்ட செயல்முறை.

ஒரு குருவை அணுகுதல்: கற்றல், முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல், அல்லது கரைதல்

சிலர் வெகு நெருக்கமாக குருவை அணுகி, அவரை முழுமையாக ஏற்கின்றனர். அதன் விளைவாக, அவர்களது புறச்சூழல்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இனிமையை உணர்ந்து, ஆனந்தமும், பரவசமுமாக வாழ்கின்றனர், ஏனென்றால் அவர்கள் அருளைத் தொட்டுவிட்டனர். மற்றொரு ஆழமான நிலையிலான அணுகுமுறையில், ஒருவர் குருவுக்குள் கரைந்துபோகிறார். உங்கள் குருவுக்காக உங்களது இதயம் துடித்தால், உங்கள் குருவைப்போல் உங்களது சுவாசத்தை உணர்ந்தால், அல்லது உங்களது குருவை உங்கள் முக்தியாக உணர்ந்தால், இந்தக் கரைதல் நிகழமுடியும்.

ஒரு குரு உங்கள் சுவாசமாக முடியும், உங்கள் இதயத்துடிப்பாக முடியும், அல்லது உங்களது முக்தியாக முடியும். அது உங்கள் தேர்வு.

ஆகவே, ஒரு குருவை எப்படி அணுகுவது? நீங்கள் தொலைவிலிருந்து தலை வணங்கக் கற்றுக்கொள்ளமுடியும், முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, அல்லது கரைந்துபோகவோ முடியும், அது உங்கள் தேர்வு. நீங்கள் தேர்வு செய்வது என்னவாக இருந்தாலும், நான் உங்களுடன் இருக்கிறேன்.