உங்களைப்போன்ற மற்றொரு மனிதர் மூலம் அது நிகழ்வது அதிர்ஷ்டவசமானது. அது ஒரு பாறை, பறவை, அல்லது சர்ப்பம் மூலமாக நிகழ்ந்திருந்தால், நீங்கள் அதைப் பெறமாட்டீர்கள். அதைப்போல் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது என்பதுடன் இப்போதுகூட இந்த மாதிரி நிகழ்கிறது, ஆனால் மக்கள் அதை முற்றிலுமாகத் தவறவிடுகின்றனர்.
ஒரு குருவாக கற்றுக்கொடுப்பதற்கு இங்கு ஒரு சர்ப்பம் வந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். உங்களைப் போலவே இருக்கும் மற்றொரு உயிர் வடிவத்தின் மூலமாக நிகழ்வதுதான் அதற்கான சிறந்த வழி. அந்த நபரிடத்தில் தொலைந்துபோகாதீர்கள், மற்றும் நபர் மூலம் நிகழ்வதையும் தடை செய்யாதீர்கள். ஒரு குரு, நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஒரு வியாபாரப் பொருள் அல்ல.