இங்கேயே இருப்பதைக் காண
ஒருவருக்கு இவ்வளவு நீண்ட
காலம் எடுப்பது ஏன்?
இந்த நுட்பமான சிக்கலின்
மிக எளிய தன்மையை உணர்ந்துகொள்ள
ஒருவருக்கு இவ்வளவு நீண்ட காலம் எடுப்பது ஏன்?
பார்க்காமல் உணராமல் எனக்குள்ளே
எத்தனை முறை அடியெடுத்து வைத்தேனோ
முட்டாளாக, இவ்வளவு முட்டாளாக குவிமாடத்தின்
அழகை, செழுமையை, பேரானந்தத்தை
பார்க்கக் கண்ணில்லாமல்
இவ்வளவு குருடாக இருந்துவிட்டேன்.
தன் அழகால் கண் கூசச்செய்கின்ற
புலன்கள் காட்டும் பிம்பங்களின் ஆட்டத்தைக் காண
ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது?
ஊற்றிலிருந்து பெருக்கெடுப்பதை
பார்த்திருக்கக்கூடாதா இந்த கண்கள்?
அட, நான் ஒன்றைக் கற்றிருக்கிறேன் என்றால்,
அது பொறுத்திருப்பதைத்தான்!
ஏனென்றால் மலரவேண்டிய அனைத்துமே
மலரும், என் குவிமாடத்தினுள்.
-கிரிஸ்டீன், சாதகர்