பயணத்தின் முன்பாகங்கள் ..

அதிகாலை வேளை பங்கேற்பாளர்கள் காவேரி ஆற்றங்கரையில் குருபூஜை செய்து யோகப் பயிற்கள் செய்தனர். என்னவொரு அனுபவமோ..?

day-3-cauvery-calling-tamil-blog-pic1

day-3-cauvery-calling-tamil-blog-pic2

 

சத்குரு காவேரியை வணங்குகிறார்

காவேர் - 3

சத்குருவின் அட்டவணையில் இடமேயிருக்காது, எப்போதும் நிறைந்திருக்கும் என்று கேட்டிருப்போம். இதோ காலையிலேயே அடுத்தடுத்து அவரின் நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

நியூஸ்-18 சேனலுக்கு நேர்காணல்

day-3-cauvery-calling-tamil-blog-pic3

day-3-cauvery-calling-tamil-blog-pic4

day-3-cauvery-calling-tamil-blog-pic5

day-3-cauvery-calling-tamil-blog-pic6

அடுத்து நடிகர் பிரணீதா சுபாஷ் அவர்களுடன் உரையாடல்

day-3-cauvery-calling-tamil-blog-pic7

day-3-cauvery-calling-tamil-blog-pic8

மறுபுறம் ஆற்றங்கரை வாசத்தின் மகிழ்ச்சியில் திளைக்கும் பங்கேற்பாளர்கள்..

ஆற்றங்கரையில் பயிற்சிகள் செய்துவிட்டு, ஆற்றங்கரையிலேயே உணவருந்திவிட்டு, இப்போ ஆற்றிலே படகில் போவதும், ஆற்றிலே குதித்து விளையாடுவதும்… மகிழ்ச்சியில் திளைக்கும் பங்கேற்பாளர்கள்

day-3-cauvery-calling-tamilbog-riverside-pic

 

இவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் வான்வழிப் புகைப்படம்

Day3-CaCa-Tinkering-1

மைசூர் நோக்கி பயணம் துவங்கிவிட்டது...

காலையில் சத்குருவுடன் உரையாடல் முடிந்தபோது, இந்த இயக்கத்தில் பங்கெடுக்க பிரணீதா அவர்களுக்கு ஆர்வம் மேலோங்கியது. பெண் பைக்கர் ஒருவரோடு பயணிக்கும் வாய்ப்பிருக்க, ஆனந்தமாக அவரும் இப்பயணத்தில் கலந்துகொண்டார்.

day-3-cauvery-calling-tamilbog-mys-bikeride

day-3-cauvery-calling-tamilbog-mys-bikeride-2

day-3-cauvery-calling-tamilbog-mys-bikeride-3

நகரத்திற்குள் நுழையும்போது இவர்களுக்குப் பாதுகாப்பாக உடன்வர சில போலீசார் மோட்டார் சைக்கிளில் காத்திருக்கிறார்கள்

day-3-cauvery-calling-tamilbog-mys-bikeride-4

மைசூரில் சத்குருவை வரவேற்க பலர் சாலைகளில் காவேரி கூக்குரல் பிரச்சார அட்டைகளுடன் ஆனந்தமாக காத்திருக்கிறார்கள். ஒருவர் காவேரித்தாயின் மடியில் நகரம் இருப்பதாக வரைந்திருக்கிறார்

collage-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

collage-2

day3-tamil-blog-caca-pic9day3-tamil-blog-caca-pic10

 

 

 

 

காத்திருக்கும் நேரத்தில் இப்படியும் ஓய்வெடுக்கலாமோ?

day-3-caca-tamil-blog-pic-11day-3-caca-tamil-blog-pic-12

ஜே.எஸ்.எஸ் கல்லூரியில் சத்குருவிற்கு வரவேற்பு

இந்த இயக்கத்தில் பங்குபெறும் அனைவருக்கும் இன்று தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் ஜே.எஸ்.எஸ். கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி!

day-3-caca-tamil-blog-pic-13day-3-caca-tamil-blog-pic-14

 

இன்று ஒரு செய்தி

 

ஆனந்தமான செய்தி

வறட்சி, காடு அழித்தல், தவறான விவசாய முறைகளால் உலகில் பாலைவனம் உருவாவதைத் தடுக்க ஐ நாவின் பாலைவனமாக்கலைத் தடுக்கும் மாநாடு செயல்படுகிறது. இப்போது இவர்கள் தங்கள் செயலில் பங்குபெறும் அங்கீகாரத்தை ஈஷா அறக்கட்டளைக்குக் கொடுத்திருக்கிறார்கள்
 

விழா நடக்கும் மானஸகங்கோத்ரி திறந்தவெளி அடுக்கு-இருக்கை அரங்கத்தில் சத்குருவை வரவேற்க ஏற்பாடுகள்…

Day3-CaCa-Tinkering-6

 

மக்கள் வரத் துவங்கிவிட்டார்கள்

Day3-CaCa-Tinkering-7

 

Day3-CaCa-Tinkering-8

 

மயிலாடுதுறையில் 600 பள்ளி மாணவர்கள் காவேரியைக் காக்க அணிவகுத்துச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர்

Day3-CaCa-Tinkering-8

 

சற்றும் சளைக்காது காலையில் இருந்து பார்க்கும் ஒவ்வொருவரிடமும் காவேரிக்காக ₹42 கேட்டு நிதி திரட்டிக் கொண்டிருக்கும் நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஆருஷ். தன் ஆர்வத்தாலும், ஈடுபாட்டாலும் பார்ப்பவரின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறான்!

Day3-CaCa-Tinkering-13

 

புதுடில்லியில் இருக்கும் கல்லூரி மாணவர் பிரதம் கர். காவேரி வடிநிலத்தில் 20 ஆயிரம் மரம் நட நிதி திரட்டும் இயக்கத்தை இவர் ஆரம்பித்தார். தெரிந்தவர்களிடம் கேட்டபோது அந்தளவு பணம் சேர்க்கமுடியவில்லை. எப்படியும் நிதி திரட்டியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு சமூக வலைதளங்களான முகநூல், டிவிட்டர், வாட்ஸ்-ஆப், யூ-டியூப்  என்று தன் கவனத்தைத் திருப்பினார். நினைத்ததை வேகமாக 20,000 மரங்களுக்கு நிதி திரட்டிவிட்டார். இப்போது தன் இலக்கை 40,000 என்று உயர்த்திக் கொண்டுள்ளார்!

Day3-Vol-Story-1

நவீன விவசாயி சஷிகுமார்!

Day 3 - biker - 1

நமது பைக்கர்களில் ஒருவரான சஷிகுமார் சமீபத்தில் கன்னடத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் 6-ல் இறுதிவரை தாக்குப்பிடித்து வெற்றிபெற்றவர். இவரை "நவீன விவசாயி" என்றழைக்கிறார்கள். விவசாயத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, நகர விவசாயம் பின்பற்றுகிறார். பள்ளிக் குழந்தைகள் நேரில் பார்த்து அறியும் விவசாய சுற்றுலா வழங்குகிறார்.

 

நடிகர் கங்கனா ரணாவத் அவர்கள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இன்று நிதி வழங்குகிறார். நடிகர்கள் காஜல் அகர்வால், சமாந்த்தா  மற்றும் தமன்னா அவர்கள் தலா 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட உறுதி மேற்கொண்டுள்ளனர்.

Day3-CaCa-Tinkering-36

 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நடிகர்கள் கங்கனா ரணாவத், காஜல் அகர்வால் மற்றும் தமன்னா அவர்கள் விளக்குகிறார்கள்:

 

 

மாலை 5:15  - 15 நிமிடம் முன்பாகவே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சத்குரு வந்தார். பலத்த ஆரவாரத்திற்கு இடையில் தனது பைக்கிலேயே, பைக்கர்கள் சூழ மேடைவரை வந்துவிட்டார்

Day3-CaCa-Tinkering-15Day3-CaCa-Tinkering-16

மானஸகங்கோத்ரி திறந்தவெளி அடுக்கு-இருக்கை அரங்கில் விழாவிற்காக முழுமியிருக்கும் மக்கள்

Day3-CaCa-Tinkering-17Day3-CaCa-Tinkering-18
Day3-CaCa-Tinkering-21Day3-CaCa-Tinkering-19

 

Day3-CaCa-Tinkering-20Day3-CaCa-Tinkering-23

சிறப்பு விருந்தினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரதாப் சிம்ஹா அவர்கள், கொல்லேகல் சட்டமன்ற உறுப்பினர் திரு N.மகேஷ் அவர்கள், காந்தி க்ரிஷி விஞ்ஞான கேந்திராவின் "காய்ந்த பூமி வேளாண்மை"த் துறையின் தலைவராகவும், ஆய்வு இயக்குநராகவும் இருந்து ஓய்வுபெற்ற டாக்டர் M.A.ஷங்கர் அவர்கள்,  தர்மஸ்தலா ஷேத்திரத்தின் தர்ம அதிகாரி திரு. வீரேந்திர ஹெக்டே அவர்கள் மற்றும் சுட்டூர் ஸ்வாமிகள்.

 

 

Day3-CaCa-Tinkering-23

 

Day3-CaCa-Tinkering-24

 

 

சம்ஸ்கிருதி மாணவர்களின் களறிபயட்டு

Day3-CaCa-Tinkering-25Day3-CaCa-Tinkering-26

கலைநிகழ்ச்சிகள்

மைசூரில் வளர்ந்துவரும் பிரபல பாடகி அஞ்சலி அவர்கள் தம் மெல்லிய குரலிசையால் அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Day3-CaCa-Tinkering-27Day3-CaCa-Tinkering-28

நிகழ்ச்சி ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரதாப் சிம்ஹா அவர்கள்:

Day3-CaCa-Tinkering-29

வடிநிலத்தில் மரப்போர்வையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி திரு. பிரதாப் சிம்ஹா அவர்கள் விளக்கினார். "ஏற்கெனவே இருக்கும் மரங்களைக் காப்பது, புது மரங்கள் நடும் அளவிற்கு முக்கியமான ஒன்று. நம் வருங்கால சந்ததியினரை கவனத்தில் வைத்து நாம் இப்போது செயல்பட வேண்டும்"

கொல்லேகல் சட்டமன்ற உறுப்பினர் திரு N.மகேஷ் அவர்கள்:

Day3-CaCa-Tinkering-30

கொல்லேகல் சட்டமன்ற உருப்பினர் திரு N.மஹேஷ் அவர்கள் வழக்கமான பயிர் விவசாயத்தில் இருந்து வேளாண்காடு வளர்ப்பிற்கு மாறுவதால் விவசாயிக்குக் கிடைக்கக்கூடிய வருமான அதிகரிப்பு பற்றி எடுத்துரைத்தார். "கரும்பு, ராகி, சோளம் போன்றவற்றைவிட மரம் வளர்த்தல் அதிக லாபத்தை தரும். நம் விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பீற்கு மாற நாம் போதிய விழிப்புணர்வு உருவாக்கவேண்டும். வறுமையின் காரணமாக ஒரு விவசாயி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்றால், நம் தேசமே பிச்சையெடுக்கிறது என்று அர்த்தம்." 

 

டாக்டர் M.A.ஷங்கர்:

Day3-CaCa-Tinkering-31

டாக்டர் எம்.ஏ.சங்கர் அவர்கள் வேளாண்காடு வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த அது எப்படி உதவும் என்பது பற்றியும் விளக்கினார். "வானில் இருந்து பெய்யும்பொதே நாம் மழைநீரை சேமிக்கவேண்டும். மழைபெய்யும்போது விழும் தண்ணீர் மிக அதிகம். அதை சேமிக்கவேண்டும் என்றால், அதற்கு வேளாண்காடு வளர்ப்புதான் ஒரே வழி."

 தர்மஸ்தலா ஷேத்திரத்தின் தர்ம அதிகாரி திரு. வீரேந்திர ஹெக்டே:

Day3-CaCa-Tinkering-32

"வேளாண்காடு வளர்ப்பால் விவசாயிகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் பயன்பெறும். மரம் வளர்ப்பதால் நம் விவசாயிகள் நம் நதிகளைக் காக்கும் அதேநேரம் நதிகளையும் காப்பாற்றமுடியும். இந்த காவேரி கூக்குரல் மிக அர்புதமான முன்னெடுப்பு. இந்த இயக்கத்திற்காக சத்குருவிற்கு என் முழு ஆதரவையும் தருகிறேன்"

சுட்டூர் சுவாமிகள்:

சுட்டூர் சுவாமிகள்

ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மஹாசுவாமிஜி (சுட்டூர் சுவாமிகள்)  அவர்கள், வேளாண்காடு வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை நம் விவசாயிகளுக்கு ஏற்படுத்துமாறு நம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் முன்வைத்தார். "இதை செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் அதேநேரம் அவர்கள் இந்நாட்டின் நதிகளையும் மற்ற உயிரினங்களையும் காக்க முடியும். அதனால் நாம் ஒவ்வொருவரும் முழுமனதோடு சத்குரு அவர்களின் இம்முயற்சிக்குக் கைகொடுக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Day3-CaCa-Tinkering-33

சத்குரு அவர்கள் பேசும்போது, வெள்ளமும் வறட்சியும் வெவ்வேறு பிரச்சினைகள் அல்ல. நதிகளின் வடிநிலத்தில் மரப்போர்வை குறைந்ததால்தான் இந்த பிரச்சினைகள் உருவாகிறது. நதிகளைக் காப்பது நம் கைகளில்தான் உள்ளது. "நதிகள் இப்பூமியின் சொந்தம். அவற்றை சரியாக நிர்வகிக்காவிட்டால், இன்னும் கொஞ்சம் நாளில் பூமியில் நதிகள் இருக்காது

 

Day3-CaCa-Tinkering-34


 

சதுகுருவின் வேண்டுகோள்:

மைசூரில் பிறந்துவளர்ந்தவர் சத்குரு. வளரும் காலத்தில் இருந்த மைசூரின் அழகும் நயமும் பொலிவும் இப்போது குறைந்துவிட்டது. மீண்டும் மைசூர் அழகுநயத்துடன் மிளிர மைசூரின் அரசாட்சியும், மக்களும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாள் 3 நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்