1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. பைரவி யந்திரத்தால் நடந்த அதிசயம்! | how yogis dematerialize their body

பைரவி யந்திரத்தால் நடந்த அதிசயம்! | How Yogis Dematerialize Their Body

பஞ்ச பூதங்கள் மீது ஆளுமைபெற்ற யோகிகள் தங்கள் உடலை எவ்வாறு கரைத்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி சத்குரு கூறுகிறார். இதை தெளிவுபடுத்துவதற்காக, ஒரு குடும்பத்தில் லிங்கபைரவி யந்திரத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதைக் கண்ட ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வைப் பகிர்கிறார். தியானலிங்கத்தின் முன்னிலையில் இருப்பதும், குறிப்பாக பஞ்சபூத க்ரியாவில் பங்கேற்பதும், நம் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை தூய்மைப்படுத்தி, அவற்றின் மீது ஆளுமை பெற எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள பஞ்சபூத க்ரியா தியானலிங்கத்தில் நடத்தப்படுகிறது. இந்த செயல்முறை உடலையும் மனதையும் உறுதிப்படுத்துகிறது; உளவியல் ரீதியான உறுதியற்ற தன்மையை சீர்செய்கிறது; தூக்கத்தில் பிரச்சனை மற்றும் தொடர்ந்த பய உணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெரிதும் உதவுகிறது; குறிப்பாக, பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கிறது. பஞ்சபூத க்ரியா ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வரக்கூடிய மாத சிவராத்திரியன்று நடைபெறுகிறது. இந்த செயல்முறையில் நேரிலும், ஆன்லைனிலும் கலந்து கொள்ளமுடியும்.

video

Nov 27, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
ஐ.நா COP29 பருவநிலை மாநாட்டில் சத்குரு & மண் காப்போம் - பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கொள்கை வடிவமைப்பு மாநாடான COP 29ல் சத்குரு மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் பங்களிப்பு குறித்த ஒரு பார்வை. உலகத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய அம்சமாக மண் புத்துயிராக்கம் விளங்குவதை மாநாட்டில் அங்கீகரித்தனர். மாநாட்டின் மையக்கருவாக “பசுமை உலகத்திற்கான ஒருமைப்பாடு” என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை சத்குரு பாராட்டினார், மேலும் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான செலவு குறைந்த தீர்வுகளில் ஒன்றாக மண் புத்துயிராக்கக் கொள்கைகளை இயற்றவும், மண் புத்துயிராக்கத்திற்காக செயல்படவும் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.
Nov 27, 2024
video  
தண்டனை மூலம் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியுமா?
டிசம்பர் 2012ல் புது டில்லியில், ஒரு 23 வயதுப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு (gang-r*pe) குறித்தும், குற்றவாளிகள் மீதான நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் பதிலளித்த சத்குரு, பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள மூலகாரணம் பற்றி பேசினார். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, தனிமனிதர்களிடத்தில் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய நீண்ட கால தீர்வுகளில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர் விளக்கினார்.
Nov 18, 2024
video  
திருமணங்கள் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதா? | Arranged Marriage vs Love Marriage: Which Is Better?
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாத, பிற்போக்குத்தனமானவையா அல்லது அவற்றில் இன்றைய காலத்திற்கு ஏற்ற அம்சம் ஏதேனும் உள்ளதா? சத்குரு பதிலளிக்கிறார்.
Nov 13, 2024