Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
உங்கள் வாழ்க்கை உங்களது தெளிவினாலும் திறமையினாலும் நடக்கட்டும், எதேச்சையாக அல்லது பிறரது கருணை மற்றும் அன்பினால் அல்ல.
முழுமையான மனிதராக இருப்பதென்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ்வது.
தியானம் என்பது மனம் குவிப்பதும் அல்ல, தளர்த்திக்கொள்வதும் அல்ல. அது ஒருவிதத்தில் வீடு சேர்வதைப் போன்றது.
அனைத்தையும் உள்ளது உள்ளபடியே பார்ப்பது, வாழ்க்கையினூடே முயற்சியின்றி நடந்துசெல்லும் ஆற்றலையும் திறனையும் உங்களுக்கு வழங்குகிறது.
உங்களுக்கும் உங்கள் எண்ண ஓட்டத்திற்கும் இடையே ஓர் இடைவெளி வந்துவிட்டால், ஒரு புதிய சுதந்திரம் பிறக்கிறது. இந்த சுதந்திரத்தோடு, புதியதொரு உணர்திறன் எழுகிறது.
நீங்கள் உயிரை உணர்வதற்கான ஒரே வாசல் நீங்களேதான். உங்களை திறந்து வைத்திருங்கள்.
மனிதரானவர் ஒரு வளமல்ல. ஒரு மனிதர் என்றால் அவர் அளப்பரிய ஒரு சாத்தியம். சரியான ஊட்டமளித்தால், அவர் குறிப்பிடத்தக்க மனிதராக மலரமுடியும்.
நீங்கள் எதையும் உயர்வாகவும் பார்க்காமல், எதையும் தாழ்வாகவும் பார்க்காமல் இருப்பது முக்கியம். அனைத்தையும் உள்ளது உள்ளபடியே பார்ப்பதுதான் உண்மையான பார்வை.
யோகா என்பது சொர்க்கத்திற்குச் செல்வதைப் பற்றியது அல்ல, அது உங்களை நீங்களே சொர்க்கமாக மாற்றிக்கொள்வதைப் பற்றியது.
நீங்கள் கடந்தகாலத்தாலும் எதிர்காலத்தாலும் பாதிப்படைய முடியாது, ஏனென்றால் அவை இல்லவே இல்லை. நீங்கள் பாதிப்படைவது உங்கள் ஞாபகத்தாலும் கற்பனையாலும் தான்.
உங்களுக்குள் இருக்கும் உயிர், உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உணர்ச்சிக்கோ சேவைசெய்வதற்காக இல்லை. உடலும் மனதும் உணர்ச்சியும்தான் உயிருக்கு சேவைசெய்வதற்காக இருக்கின்றன.
வாழ்க்கை என்பது சமநிலையாக இருக்கும்போதுதான் அழகாக இருக்கிறது.