Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
நீங்கள் விழிப்புணர்வாகச் செயல்பட்டால், உங்களுக்கு என்ன வேண்டுமோ அது நடக்கும். உங்கள் கட்டாயங்களால் நீங்கள் எதிர்செயல் செய்தால், இன்னொருவருக்கு என்ன வேண்டுமோ அதுதான் நடக்கும்.
உங்கள் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், சாய்ஸ் இதுதான் – ஒன்று, நீங்கள் விவேகமானவராக மாறலாம், அல்லது காயப்பட்டு போகலாம்.
வளர்ந்து நின்று பிரகாசமாக ஒளி வீசுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கும்போது, மனிதர்கள் இயல்பாகவே உங்கள் மீது நேசம் கொள்வார்கள்.
சந்தோஷமாக இருப்பவருக்கு, வாழ்க்கை மிகவும் குறுகியது. துன்பமாக இருப்பவருக்கோ, அது பயங்கர நீளமானது.
நம்பிக்கைகள் மனத்திற்கான மதுபோதைதான். மது உடல் மீது வேலைசெய்யும்; நம்பிக்கைகள் மனத்தின் மீது வேலைசெய்யும்.
மனம் என்பது மோசமான எஜமான். ஆனால் அது அற்புதமான அடிமை, அதை அப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
பக்தி என்றால் வழிபாடு செய்வது என்று அர்த்தம் அல்ல. பக்தி என்றால் ‘நான்’ என்பது இல்லாமல் போவது.
நீங்கள்தான் உங்கள் மனத்தை இயக்க வேண்டும். மனம் உங்களை இயக்கக் கூடாது.
நீங்கள் குறிக்கோளின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தால், பாதையை கண்டறிய ஒரு கண் மட்டுமே இருக்கும். இது வாழ்க்கையில் வழிகண்டு முன்னேற பயனுள்ள முறை அல்ல.
மனிதர்கள் ஒன்றும் பயன்படுத்தப்படுவதற்காக இங்கு இல்லை. நாம் பகிர்ந்து கொள்ளவும், அன்பு செலுத்தவும்தான் மனிதர்கள். பொருட்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் – மனிதர்கள் அல்ல.
மனிதராக இருக்கும் நமக்கு, நட்சத்திரங்களும் கோள்களும் நம் வாழ்க்கையின் அனுபவத்தை நிர்ணயிக்க தேவை இல்லை. உங்களுக்குள் நிகழும் அனுபவத்தை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.