FILTERS:
SORT BY:
எந்த விதத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் தாராளமானது. இதை நன்கு சாதகமாக்கிக் கொள்ள தெரிந்தவர்கள் நிறைவை உணர்கிறார்கள். முழுமையான நிறைவை அளிக்கும் இந்த பௌர்ணமி அன்று, வாழ்வின் பெருந்தன்மைக்கு திறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்களாக!
நாளை என்பது ஒருபோதும் வரப்போவதில்லை. வாழ்க்கையின் அழகே அதுதான் – இன்றைய பொழுதைக் கையாள்வது எப்படி என நீங்கள் கற்றுக் கொண்டால் போதும் – இந்த ஒரு நாளை மட்டும், இந்த ஒரு கணத்தை மட்டும்.
ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
மனதில் புத்துணர்வுடன், நெஞ்சில் அன்புடன், சக்தி நிலையில் உயிரோட்டத்துடன் உங்களை நீங்கள் வைத்துக்கொண்டால் – ஒவ்வொரு நாளும் புதியதாக, சாகசமானதாக இருக்கும்.
நீங்கள் 'லாஜிக்' என்பதின் அடிமையாக மாறும்போது, வாழ்க்கையின் 'மேஜிக்' என்பதை தவற விட்டுவிடுவீர்கள். மனிதர்கள் பகுத்துப் பார்க்கும் புத்தியின் வரம்புகளைத் தாண்டி, நாம் இங்கு உயிருடன் இருப்பதின் நிஜமான அற்புதத்தை உணரச் செய்வதுதான் என் வேலை.
நீங்கள் உயிரோட்டமாக இருந்தால், நான் எப்போதுமே இருக்கிறேன் – உங்கள் வாழ்நாள் முழுவதும், அதற்கு அப்பாற்பட்டும். என் உடலை விட்ட பிறகும், நான் இருப்பேன்.
கல்வியில் ஊக்கம் என்பது அவசியம், வெறும் தகவல் மட்டும் போதாது. ஊக்கம் கொண்ட மனிதர்களால் மட்டுமே தங்கள் வாழ்வையும், சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும்.
நீங்கள் யார் என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்க அனுமதிக்காமல், சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயிக்கும் போது – அதுதான் "வெற்றி" என்பது.
வாழ்க்கை என்பது - நாம் என்ன செய்கிறோம் என்பதை பற்றியது அல்ல - அதை எப்படி செய்கிறோம் என்பதை பற்றியதே ஆகும்.
வாழ்க்கை என்பது அதன் குறிக்கோளில் அல்ல. வாழ்க்கை என்பது அதன் நிகழ்வில் இருக்கிறது – இந்தக் கணத்தில் அதை உங்களுக்குள் எந்த விதமாக உணர்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.