FILTERS:
SORT BY:
அருளுக்கு பாத்திரமாக மிகச்சிறந்த வழி – 'நான்' என்பதை குறைத்துக் கொள்வதுதான்.
முக்கியமற்ற விஷயங்களில் உங்கள் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணாக்க வேண்டாம். உண்மையிலேயே எது உங்களுக்கு 'அர்த்தமுள்ளதாக' இருக்கிறதோ, அதற்கு உங்களை நூறு சதவிகிதம் அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் – நாளைக்கு அல்ல, இன்றே.
'நம்பிக்கைகள்' என்றால், உங்களுக்குத் துளியும் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்களாக முடிவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
சூரியன் முழு ஆற்றலுடன் இருக்கும் காலம் இது. வாழ்வும் அதன் உச்சத்தில் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை பலனளிக்க வேண்டும் என்றால், உங்களுக்குள் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் – அதற்கான நேரம் இதுதான்
இன்னொரு மனிதரின் துன்பத்தின் மூலம் யாருமே நன்மை அடைந்துவிட முடியாது. தற்காலிகமாக பயன் அடைந்தாலும், அதற்கான விலையை நீங்கள் கொடுப்பீர்கள்.
பக்தி என்றால் வாழ்க்கையுடன் உங்கள் ஈடுபாடு பரிபூரணமாக இருக்கிறது, எந்தளவுக்கு என்றால், இனி நீங்களே உங்களுக்கு முக்கியமில்லை என்று ஆகிவிடுகிறது.
எல்லாவற்றையும் பற்றி நூறு சதவீதம் நிச்சயமாக இருப்பவர், தன் புத்தியை ஐஸ் பெட்டிக்குள் போட்டு உறைய வைத்துவிட்டார்.
நினைப்பிலும், உணர்வுகளிலும் உங்களை எந்தளவுக்கு எல்லை போட்டு பிரித்துக் கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போவீர்கள்.
நேற்று நீங்கள் செய்தது எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பினால், இந்த க்ஷணத்தில் ஒரு அற்புதமான மனிதராக இருக்க முடியும். பிரபஞ்சம் உங்களுக்கு இந்த சுதந்திரத்தை தந்திருக்கிறது.