நாம் அனைவரும் மகாகவி பாரதியை, சுதந்திர போராட்ட வீரராகவும், தமிழ் பற்று மிக்க மாபெரும் கவிஞராகவும் அறிந்திருப்போம்...
ஆனால், காளி, துர்கை, அம்மன் எனப் போற்றப்படும் தேவி சக்தியின் தீவிர பக்தர், மகாகவி பாரதியார் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!
தேவி லிங்க பைரவிக்கு நாம் சமர்ப்பித்த இன்னொரு பாரதியின் பாடல், "துன்பம் இல்லாத நிலையே சக்தி" இதோ நம்மை பரவசப்படுத்தும் இந்த காணொளியில்... கண்டு மகிழுங்கள்!
பாடல் வரிகள்...
துன்பம் இல்லாத நிலையே சக்தி
தூக்கம் இல்லாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்தில் நிற்கும் நெறியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழம் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை என்னும் நினைவே சக்தி
சாம்பலை பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி