மஹாபாரதத்தைப் பொருத்தவரை ஹீரோக்கள் என்று எடுத்துக்கொண்டால், அர்ஜுனன் உட்பட பஞ்சபாண்டவர்கள் அனைவரும் பல்வேறு விதத்தில் பெரிய திறமைசாலிகளாகவும் பலசாலிகளாகவும் திகழ்ந்திருப்பதைப் பார்க்க முடியும். பரசுராமர் போன்ற மாபெரும் போர் வீரர்களும் வியாசர் போன்ற ஞானிகளும் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், பகவான் கிருஷ்ணரை மட்டும் நாம் சூப்பர் ஹீரோவாக கொண்டாடுகிறோம். மஹாபாரதத்தின் மற்ற ஹீரோக்களுக்கும் கிருஷ்ணருக்கும் அப்படியென்ன வித்தியாசம் என்பதை சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.
Subscribe