சின்னஞ்சிறு உள்ளங்களில் மலர்ந்த புன்னகை

தன்னார்வலர்கள் தென்னமநல்லூரை அடைந்தபோது, அங்கு இருந்த 60 குழந்தைகள் மற்றும் அவர்களின் காப்பாளர்கள் முகத்தில் திருப்தியுடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது. ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து அவர்கள் அனைவரும் தென்னமநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகில் இருந்த பெரிய கொட்டகையில்தான் தங்கியிருந்தனர்.

அந்த கொட்டகை உரிமையாளர் அங்குள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் உடனிருப்பவருக்கும் உணவளிக்குமாறு தன்னார்வலர்களிடம் வேண்டினார். "அந்த கொட்டகையில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து தென்னமநல்லூருக்கு வேலைக்காக வந்தவர்கள் என்று அந்த கொட்டகை உரிமையாளர் கூறினார். அந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்த நன்றி, நிறைவான மனநிலையை கொடுத்தது" என தன்னார்வலர் ஒருவர் கூறினார்.

blog_alternate_img

மனம் குளிர்ந்த மாற்றுத்திறனாளிகள்

தென்னமநல்லூரைப் போலவே கள்ளிமேட்டிலும் ஒரு அனுபவம் நம் தன்னார்வலர்களுக்கு காத்திருந்தது. அங்கு சில மாற்றுத்திறனாளிகள் தினமும் வரும் தன்னார்வலர்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரது இரண்டு குழந்தைகள் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் மாணவர்கள். "அந்த மக்களை பட்டினியின் கொடுமையில் இருந்து காப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். மேலும் அது எங்கள் கடமை. தினமும் நேரம் தவறாமல் மக்களை சந்திப்பத்தை நாங்கள் கவனமாக செய்து வருகிறோம்" என்று ஒரு தன்னார்வலர் கூறினார்.

நல்லூர்வயல்பதி மற்றும் மாதம்பட்டியை சேர்ந்த மக்களும் நம் தன்னார்வலர்களை அணுகி உதவி கோரினர். அந்த கிராம மக்கள் கூறும்போது, ஈஷாவிடம் அவர்கள் உதவி கோரியதற்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு நேரம் தவறாமல் வழங்கப்படும் சுவையான உணவே காரணம் எனத் தெரிவித்தனர். மாதம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் செல்லையன், "மிக சுவையான உணவு, ஈஷா குழுவினருக்கு நன்றி" என்று கூறினார்.

blog_alternate_img

காவலரின் கனிவான பாராட்டு

புதுப்பாளையத்தில் அலுவலில் இருந்த காவல் துணை ஆய்வாளர் ஒருவர் ஈஷா தன்னார்வலர்களின் தினசரி களப்பணியை வெகுவாகப் பாராட்டினார். அவர் சமீபத்தில் புதுப்பாளையத்தில் இருந்த தன்னார்வலர்களிடம் உரையாடினார். தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் இந்த தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஈஷா எடுத்துவரும் முயற்சியையும், போஸ்டர் ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் கொடுப்பது என அவர்கள் செய்யும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் பாராட்டியதோடு, அவர்கள் தினமும் வழங்கும் உணவு மற்றும் நிலவேம்பு கசாயத்துக்காகவும் தன்னார்வலர்களை அவர் மிகவும் பாராட்டினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.